தினகரன் 30.01.2014
பூந்தமல்லி நகராட்சியில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல்
பூந்தமல்லி, : பூந்தமல்லி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி குடியிருப்புகள், புதிய தொழிற்சாலைகள் கட்டும் பணி நடந்து வருவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமையில் பூந்தமல்லி நகர அமைப்பு ஆய்வாளர் தினகரன், பொறியாளர் வைத்தியலிங்கம், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் பூந்தமல்லி லட்சுமி நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த ஒரு குடியிருப்பு, பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இயங்கி வந்த உடனடி சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேற்று சீல் வைத்தனர்.
இதுகுறித்து ஆணையர் சுரேந்திர ஷா, நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் கூறுகையில், தமிழ்நாடு நகரமைப்பு உள்கட்டமைப்பு சட்டம் 1971 பிரிவு 56, 57ன்படி பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை தொடர்ந்து கண்காணித்து சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்றார்.