Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வாடகை பாக்கி நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கிய தனியார் ஓட்டல் பொருட்கள் ஜப்தி

Print PDF
தினகரன்        30.04.2013

வாடகை பாக்கி நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கிய தனியார் ஓட்டல் பொருட்கள் ஜப்தி


தாராபுரம்,:  தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான ஓட்டலில் உள்ள பொருட் களை வாடகை பாக்கிக்காக நகராட்சி நிர்வாகம் ஜப்தி செய்தது.

தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சிக்கு சொந்தமான உணவகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் உணவகத்திற்கான ரூ.8 லட்சம்  வாடகை பாக்கியை செலுத்த முடியாத அதன் உரிமையாளர் உணவகம் முன் பிளக்ஸ் போர்டு ஒன்றில் வாடகை செலுத்த முடியாததால், கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என விளம்பரப்படுத்தி விட்டு பாத்திரங்களுடன் ஓட்டம் பிடித்தார்.

அவரை தொடர்ந்து உள்ளூர் நபர்கள் ஓட்டலை எடுத்து நடத்த முன்வர வில்லை.

இதன் பின் வெளியூரை சேர்ந்த ஒருவர் கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அவராலும் கடை வாடகையை செலுத்த முடியவில்லை. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் கடைக்கு சீல் வைத்தது. இதற்கு கடை உரிமையாளர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் வாடகை பாக்கியை உரிமையாளர் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நகராட்சிக்கு நிலுவை வைத்திருந்த வாடகை பாக்கிக்காக நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த அண்டா,குண்டா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் ஜப்தி செய்தனர்.

தாராபுரம் வழியாக தினமும் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரியில் இருந்து நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்லும் நிலையில் பஸ் ஸ்டேண்டில் உள்ள ஓட்டல்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை உணவருந்த விடாமல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மோட்டல்களுக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்தி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் சாப்பிடும் வகையில் பஸ்கள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் மாநகராட்சிகளில் தற்போது மலிவு விலை டிபன் சென்டர் திறப்பது போல நகராட்சிகளிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது பஸ் ஸ்டாண்டிற்குள் அதனை திறந்தால் பயணிகள் மிகுந்த பயனடைவார்கள். நகராட்சி நிர்வாகத்திற்கும் உரிய வருமானம் கிடைக்கும் என்றனர்.
 

மாநகராட்சி எஸ்.எம்.எஸ் திட்டம் புகார் வரத்து குறைந்தது

Print PDF
தினகரன்              30.04.2013

மாநகராட்சி எஸ்.எம்.எஸ் திட்டம் புகார் வரத்து குறைந்தது


கோவை, : எஸ்எம்எஸ் திட்டம் மூலம் மாநகராட்சிக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி வாரம்தோறும் செவ்வாய்கிழமை மேயர் குறைதீர்ப்பு முகாமில் வழங்கலாம் என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, தார்ச்சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் மேயரிடம் நேரில் புகார் மனுக்கள் அளித்து வருகின்றன. ஒவ்வொரு வாரமும் 30 முதல் 50 புகார் மனுக்கள் வரை வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, மாநகராட்சிக்கு நேரில் வருகை தராமல் எஸ்.எம்.எஸ் மூலமும் புகார் மனு அளிக்கலாம் என்ற திட்டம் கடந்த 2ம் தேதி துவக்கப்பட்டது. இதற்காக, 92822&02400 என்ற மொபைல் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட தொலைபேசி எண், புகார்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேச முடியாது. எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவித்தால், பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புகார் தெரிவிக்கும் நபரின் பெயர், என்ன விதமான பிரச்னை, வார்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் குறிப்பிட வேண்டும். எஸ்எம்எஸ் கிடைத்தவுடன் மாநகராட்சி அதிகாரிகள் பதில் எஸ்எம்எஸ்&ம் உடனே அனுப்புகின்றனர். இதற்காக, இரண்டு அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டம் துவங்கிய சில நாட்கள் எஸ்எம்எஸ் அடுத்தடுத்து வரத்துவங்கின. நாள் ஒன்றுக்கு 70 முதல் 85 எஸ்எம்எஸ்&கள் வரை வரப்பெற்றன. ஆனால், சமீப காலமாக எஸ்எம்எஸ் வரத்து குறைந்துள்ளது. தினம் 15 முதல் 25 எஸ்எம்எஸ்&கள் மட்டுமே வருகின்றன.

இதுபற்றி இப்பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குப்பை அகற்றுதல், சாக்கடை சுத்தம் செய்தல், தெருவிளக்கு, குடிநீர், சாலை பழுது, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விதமான புகார் மனுக்கள் வந்துள்ளன. நிறைய எஸ்ம்எஸ் தகவல்கள் முழுமையானதாக இல்லை. எந்த மாதிரியான பிரச்னை, எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சரியான விவரத்தை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். போதுமான தகவல்கள் இல்லாததால் மேல்நடவடிக்கை எடுக்க சிரமமாக உள்ளது. எனவே, முழுமையான தகவல்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பினால் நல்லது‘‘ என்றார்.

குப்பையில் மின்சாரம் தயாரிக்க மேட்டுப்பாளையம் நகராட்சி தீவிரம்

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொது மக்கள் வீடுகளில் மீதமாகும் உணவு பொருட்கள், காய்கறிகள், கழிவுகள் மற்றும் குப்பைகளை வெளியில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுத்து மின்சாரம் தயாரிப்பது, திட உயிரி எரிவாயு திட்டம் துவங்குவது, மின்சாரம் தயாரிப்பது என்று நகராட்சி முடிவு செய்தது. தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் இதனைச் செயல்படுத்த, நகராட்சி பகுதியில் நாளுக்கு 3 டன் முதல் 5 டன் வரை குப்பை மற்றும் கழிவு பொருட்கள் தேவைப்படுகிறது.

 இதை பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கும் விதமாக மேட்டுப்பாளையம் நகராட்சியும் எக்ஸ்னோர அமைப்பும் இணைந்து குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை 33 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் திட்டம் துவக்க விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சதீஷ்குமார், ஆணையர் இளங்கோவன், துணைத்தலைவர் ரமா செல்வி, நகர்நல அலுலவர் பிரதீப் கிருஷ்ணகுமார், எக்ஸ்னோர அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆன ந்த், சுகாதார ஆய்வாளர் கள் நல்லசாமி, செந்தில்கும £ர், செல்வராஜ், கவுன்சிலர்கள் உமா, மோகன், ஜெகநாதன், முரளி, கார்த்திகேயன், மகேந்திரன், நாகஜோதி, குமார் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குப்பைகைள மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வருபவர்£களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும். அதன் பின்னர் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி முறையில் பொதுமக்கள் பயன்பா ட்டுக்கு பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்பட உள்ள தாக நகராட்சி தலைவர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
 

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் தனியார் மீது நடவடிக்கை நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை

Print PDF
தினமலர்          30.04.2013

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் தனியார் மீது நடவடிக்கை நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை


பள்ளிபாளையம்: ""தனியார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிபாளையம் கவுன்சில் கூட்டத்தில் நகராட்சி சேர்மன் வெள்ளியங்கிரி கூறினார்.பள்ளிபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்ரமணி, கமிஷனர் முத்து வெங்கடேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:கோபால் (அ.தி.மு.க.,): வசந்த நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், தனியார் மூலம் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும் லாரி மூலம் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது.

அதன் காரணமாக, அருகில் உள்ள என் வார்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போர்வேலில் தண்ணீர் வறண்டுள்ளது. அதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீருக்காக கடும் அவதிப்படுகின்றனர்.வெள்ளியங்கிரி (சேர்மன்): தனியார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்ரமணி (துணைத் தலைவர்): சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தண்ணீர் விற்பனை செய்ய வேண்டாம், என அறிவுறுத்த வேண்டும். அதையும் மீறி தண்ணீர் சப்ளை செய்தால், லாரியை பிடித்து வைத்துக் கொண்டு, எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.குணசேகரன் (தி.மு.க.,): என் வார்டில், தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

மூன்று இடங்களில் நீர்மட்டம் நன்றாக உள்ளது. விரைவில் போர்வேல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேர்மன்: போர்கால அடிப்படையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் போர்வேல் அமைக்கப்படும்.துணைத்தலைவர்: கோடைகாலம் என்பதால், அனைத்து வார்டுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலை.

எனவே, பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் அனைவரும், சூழ்நிலையை எடுத்துக்கூற வேண்டும். தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.குணசேகரன் (தி.மு.க.,): மூன்று, நான்கு வார்டுகளுக்கு ஒருவரே தண்ணீர் திறந்து விடும் பணியை மேற்கொண்டுள்ளார். அதனால், குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை. கூடுதலாக ஆட்கள் நியமனம் செய்ய வேண்டும்.சேர்மன்: தண்ணீர் அடிப்படை தேவை என்பதால், விரைவில் நடவடிக்கை எடுத்து, கூடுதல் ஆட்கள் நியமனம் செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
 


Page 225 of 506