Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மேட்டூர் "சிட்கோ' வளாக குடிநீர் இணைப்புகள்... துண்டிப்பு ரூ.61 லட்சம் சொத்துவரி நிலுவையால் அதிரடி

Print PDF
தினமலர்               30.04.2013

மேட்டூர் "சிட்கோ' வளாக குடிநீர் இணைப்புகள்... துண்டிப்பு ரூ.61 லட்சம் சொத்துவரி நிலுவையால் அதிரடி


மேட்டூர்: மேட்டூர் சிட்கோ வளாகத்தில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், 61 லட்சம் ரூபாய் சொத்துவரி நிலுவை வைத்துள்ளதால், மேட்டூர் நகராட்சி நிர்வாகம் சிட்கோ வளாகத்துக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்து, தற்காலிகமாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தி வைத்துள்ளது.ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதிக்குள் தங்கள் எல்லைக்குள் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளுக்கான சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை நகராட்சிகள், 100 சதவீதம் வசூலிக்க வேண்டும்.

மேட்டூர் நகராட்சிக்கு எல்லைக்குள் சிட்கோ தொழில் வளாகம் அமைந்துள்ளது.இதில், மெக்னீசியம் சல்பைட் உரம் தயாரிக்கும் ஆலைகள், பிளாஸ்டிக் பைப், காகிதம், அட்டை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட, 120 சிறு தொழிற்கூடங்கள் உள்ளது. ஆண்டுதோறும் சிட்கோ தொழிற்கூடங்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும்.கடந்த, 2008ல் மேட்டூர் நகராட்சி சிட்கோ தொழிற்கூடங்களுக்கு சொத்துவரியை, 150 சதவீதம் உயர்த்தியது. இதற்கு சிறுதொழிற்கூட அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சியை அணுகி வரியை குறைக்க கோரினர்.மேட்டூர் நகராட்சி, 2008ல் வரியை, 10 சதவீதம் குறைத்து விட்டு, மீண்டும் 2012ல் மீண்டும், 100 சதவீதம் வரி உயர்த்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுதொழில்கூட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சொத்துவரி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கு நிலுவையில் இருந்ததால் தொழிற்கூட உரிமையாளர்கள் நகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் வைத்தனர். வரி நிலுவை, 2012-13ம் ஆண்டில் சொத்துவரி, 61.05 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. 61.05 லட்சம் ரூபாய் சொத்துவரி வசூல் ஆகாமல் நிலுவையில் இருந்ததால், அதை வசூலிக்க மேட்டூர் நகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.அதன்படி சில நாட்களுக்கு முன் சிட்கோ தொழிற்கூடங்களுக்கான குடிநீர் குழாயை மேட்டூர் நகராட்சி துண்டித்து, குடிநீர் வினியோகத்தை தற்காலியாக நிறுத்தி விட்டது.

நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ""சொத்துவரி வசூலிக்க கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருந்தால் மட்டுமே, நகராட்சி வரி வசூலிக்க முடியாது. சிட்கோ வழக்கு நிலுவையில் தான் உள்ளது. சொத்துவரி வசூலிக்கும் அதிகாரம் நகராட்சிக்கு உண்டு. வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2008ம் ஆண்டு வரையிலான வரியை செலுத்தினாலே போதும், மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
 

நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் நவீன பெயர்ப்பலகை வைக்க முடிவு

Print PDF
தமிழ் முரசு            30.04.2013

நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் நவீன பெயர்ப்பலகை வைக்க முடிவு

புழல்: செங்குன்றம் அருகே நாரவாரிகுப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் விப்ர நாராயணன், செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.பள்ளி கட்டிடம், குடிநீர் தொட்டி, சுடுகாடு சுற்றுச்சுவர், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கிய மறைந்த செ.குப்புசாமி எம்பிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண் மை திட்டத்துக்கு உர கிடங்கு அமைத்தல், மண் புழு உரம் தயாரித்தல், குப்பைகளை தரம் பிரிக்க இயந்திரம் வாங்குதல், குப்பை அள்ள நவீன வசதியுடன் வாகனம் வாங்க வேண்டும். பேரூராட்சி எல்லையில் உள்ள எல்லை பெயர்ப்பலகை மாற்றிவிட்டு புதிய நவீன பலகை வைக்கவேண்டும்.
 

சுவர்களில் விளம்பரம் எழுதினால் நடவடிக்கை குன்னூர் நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை

Print PDF
தினமலர்          29.04.2013

சுவர்களில் விளம்பரம் எழுதினால் நடவடிக்கை குன்னூர் நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை


குன்னூர்:"குன்னூர் நகராட்சி சுவர்களில் விளம்பரம் எழுத கூடா­து; மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கைப்பட்டுள்ளது. குன்னூர் நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதங்கள்: சத்தார்: குறைந்த வருவாய் குடியிருப்புகளுக்கான வாடகையை, 79 ரூபாயிலிருந்து, 820 ரூபாயாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதை சற்று குறைக்க வேண்டும். தலைவர்: குறைந்த வருவாய் குடியிருப்புகளுக்கான வாடகை 450 ரூபாயாக நிர்ணயக்கப்படும்.

குணசீலன்: நெடுஞ்சாலைத்துறை அலுவலம், வண்ணாரப்பேட்டை உட்பட பல இடங்களில் தண்ணீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்தால் தண்ணீர் சேமிக்கப்படும்.

தலைவர்: தண்ணீர் கசிவு கண்டறிந்து 80 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது.

நசீர்கான்: எனது வார்டில் குப்பைகள் தேங்கியுள்ளன. தற்போது, திருவிழா நடந்து வரும் நிலையில், குப்பையை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபி: குன்னூரின் முக்கிய சுற்றுலா ஸ்தலமான சிம்ஸ் பூங்கா பகுதியில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் சாலையோரம் போட்பட்டுள்ளன. இவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கமிஷனர் சண்முகம்: புதிய குடிநீர் திட்டத்துக்கான பணிகள் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. பணியை தொடர தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் அனுமதி கோரியுள்ளது. அதிகாரிகளிடம் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. யோகேஷ்கண்ணன்: எனது வார்டில் உள்ள பாரதியார் மண்டபத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை சமுதாய கூடமாக மாற்றினால் நகராட்சி வருவாய் கிடைக்கும். தலைவர்: மாவட்ட நிர்வாகம் சார்பில் புயல் நிவாரண மையமாக அது செயல்பட்டு வருகிறது. இதை வேறு பணிக்கும் மாற்ற முடியாது.

யோகேஷ்கண்ணன்: நகராட்சி சார்பில் காவலாளி நியமிக்க வேண்டும். சத்தார்: மருத்துவமனை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 மாத காலமாகி விட்டது. சாலையில் மண் அப்படியே கிடக்கிறது. இதனால், பிணவறை மற்றும் வண்ணாரப்பேட்டை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கமிஷனர்: பொதுப்பணித்துறை தான் பொறுப்பு. மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 88 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்ட திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சையது முபாரக்: எனது வார்டில் தெரு விளக்குகள் எரிவதில்லை. பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்: பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகராட்சி சுவர்களில் யாரும் விளம்பரம் எழுத கூடாது, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவாதங்கள் முடிந்த பின்னர், கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 


Page 226 of 506