Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மறு ஒப்பந்தம் கோருவதை தவிர்க்க ஏற்பாடுகள்

Print PDF
தினமணி       27.04.2013

மறு ஒப்பந்தம் கோருவதை தவிர்க்க ஏற்பாடுகள்


சென்னை மாநகராட்சியில் மறு ஒப்பந்தம் கோருவதைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடந்த மாமன்ற கூட்டத்தின்போது, 117-வது வார்டு உறுப்பினர் பி. ஆறுமுகம் (படம்) பல்வேறு பணிகளுக்கு மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் கோரும் நிலை தொடர்கிறது. மறு ஒப்பந்தம் கோருவதைத் தவிர்க்க மாநகராட்சி ஏதேனும் முடிவு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மேயர் கூறியது: சந்தை விலை நிலவரப்படி விலையை ஆய்வு செய்து, ஒப்பிட்டு ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கும் முறை சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது.

சந்தை விலைகளின் மாற்றங்கள் நிகழும் போது, அதற்கேற்றவாறு சந்தை விலை விவரப்பட்டியல் மாற்றிமையத்து ஒப்பீடு செய்து ஒப்பந்தங்கள் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

பின்னர் வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய உறுப்பினர் பி.ஆறுமுகம், கடந்த ஆட்சிக் காலத்தில் தியாகராயநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜனுக்கு 4 ஆண்டுகளாக அலுவலகம் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இது போன்று ஆட்சி நடத்திய கடந்த ஆட்சியாளர்கள், இப்போது மாநகராட்சி குறித்து அவதூறு பரப்புகின்றனர் என்றார்.
 

உரிய காலத்தில் பணிகளை முடிக்காத 7 ஒப்பந்தங்கள் ரத்து

Print PDF
தினமணி       27.04.2013

உரிய காலத்தில் பணிகளை முடிக்காத 7 ஒப்பந்தங்கள் ரத்து


சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தப் பணிகளை உரிய கால அவகாசத்துக்குள் முடிக்காத 7 ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் (டெண்டர்கள்) ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் உரிய காலத்தில் பணிகளை முடிக்காத 7 ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஒப்பந்ததாரர் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீர்மான விவரம்: கூவம் நீர்ப்பிடிப்புப் பகுதியை மேம்படுத்தும் பணி மார்க் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கும், அடையாறு கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் மேம்படுத்தும் பணி சிராக் இன்ப்ரா புராஜெக்ட் என்ற நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. உரிய அவகாசத்துக்குள் பணிகள் முடிக்கப்படாததால் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் நீர்ப்பிடிப்புப் பகுதியை மேம்படுத்தும் பணிகள் ரோமன் டார்மார்ட் நிறுவனத்துக்கும், விருகம்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியை மேம்படுத்தும் பணி சிராக் இன்ப்ரா பிராஜெக்ட் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டிருந்தது. உரிய காலத்தில் பணிகள் முடிக்கப்படாததால் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஓட்டேரி நல்லா கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியை மேம்படுத்தும் பணிக்காக நீவ் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எஸ்.பி.எல். இன்ப்ரா ஸ்ட்ரக்ட்சர்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் 4 கால்வாய்கள் அமைக்கும் பணிகள் எஸ்.பி.எல். இன்ப்ராஸ்ட்க்ட்சர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதில் 3 கால்வாய்கள் அமைக்க முடியாத சூழல் உள்ளதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.

கருப்புப் பட்டியல்: சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகளை 4-ஆம் மண்டலத்தில் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரியிருந்த ஜெ.ஆர்.ஆர். அண்டு கே.சி.பி.ஜெ.வி. கம்பெனி என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டு, 73 நாள்களாகியும் ஒப்பந்த உடன்படிக்கை செய்யாமல் இருப்பதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதுடன், இந்த ஒப்பந்ததரார் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

வளர்ப்புப் பிராணிகள் கடைகளை முறைப்படுத்த புதிய விதிமுறைகள்

Print PDF

தினமணி       27.04.2013

வளர்ப்புப் பிராணிகள் கடைகளை முறைப்படுத்த புதிய விதிமுறைகள்


சென்னையில் உள்ள வளர்ப்பு பிராணிகள் கடைகளை முறைபடுத்தும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வளர்ப்பு பிராணிகள் விற்பனை கடை தொடங்குபவர்கள் உரிய விண்ணப்பத்தை மாநகராட்சி மண்டல அலுவலங்களில் அளிக்கவேண்டும். அதன் நகலை பிராணிகள் நல வாரியத்துக்கும் வழங்க வேண்டும்.

பின்னர் உரிமத் தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணம் ரூ. 5,000 செலுத்த வேண்டும். மேலும் இரண்டாண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்க ரூ. 1,000 செலுத்தவேண்டும்.

இந்த பரிந்துரைகளை அரசிதழில் வெளியிட்டு ஆட்சேபணைகள் பெறப்பட்டால், அவற்றை பரிசீலித்து அரசிடம் ஆணைபெற்று இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் வளர்ப்பு பிராணிகளுக்கான பொருள்கள் விற்கும் கடைகளுக்கு 1,000 சதுர அடிக்குள் ரூ. 2,000-மும், அதற்கு மேல் உள்ள கடைகளுக்கு ரூ. 5,000-மும் தொழில் வரி வசூலிக்கப்படும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

 


Page 228 of 506