Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Print PDF
தினமணி                 19.04.2013

நகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு


வந்தவாசி நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குநர் நடராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசி நகராட்சியில் ரூ.11 கோடி செலவில் நடைபெற்று வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வந்தவாசி புதிய பஸ்நிலையம், 5 கண் பாலம், 24-வது வார்டு ஆகியவற்றில் அமைந்துள்ள சுடுகாடுகளை பார்வையிட்ட அவர் மின்மயானம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆடு அறுக்கும் தொட்டியையும் அவர் பார்வையிட்டார்.

வேலூர் மண்டல பொறியாளர் தீனதயாளன், வந்தவாசி நகராட்சி இளநிலை பொறியாளர் அமுதன், துப்புரவு ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

குடிநீர் குழாய்களில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சு எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் கடலூர் நகரசபை கமிஷனர் எச்சரிக்கை

Print PDF
தினத்தந்தி        19.04.2013

குடிநீர் குழாய்களில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சு எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் கடலூர் நகரசபை கமிஷனர் எச்சரிக்கை


கடலூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக குடிநீர் குழாய்களில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாலும், பொது குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதை அடுத்து நகராட்சி கமிஷனர் காளிமுத்து உத்தரவின் பேரில் நகரசபை ஊழியர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பொது குடிநீர் குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு எடுத்து இருந்ததை கண்டுபிடித்து, இணைப்பை துண்டித்தனர். இதுபோன்று மொத்தம் 13 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.

இது பற்றி கடலூர் நகரசபை கமிஷனர் காளிமுத்து கூறியதாவது:–

கடலூர் நகராட்சி பகுதியில் பொது குடிநீர் குழாய்களில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மோட்டார் பறிமுதல் செய்வதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதமும் விதிக்கப்படும்.

கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீட்டு தோட்டங்கள், செடி, கொடிகளுக்கு குடிநீரை பயன்படுத்தி வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். தெருக்குழாய்களில் தண்ணீரை பிடித்து முடித்ததும் தண்ணீர் வீணாகாமல் குழாயை சரியாக மூடி விட்டு செல்ல வேண்டும்.

கடலூர் சில்வர் கடற்கரையில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா ரூ.3½ லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. பூங்காவில் உள்ள உடைந்த உபகரணங்களை மாற்றி புதிய உபகரணங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

குடிநீர் கட்டணம் நிலுவை பேரூராட்சி வேண்டுகோள்

Print PDF
தினமலர்        18.04.2013

குடிநீர் கட்டணம் நிலுவை பேரூராட்சி வேண்டுகோள்


கம்பம்:பல லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவையாக இருப்பதால், நிர்வாகத்தை நடத்துவதில் சிரமம் இருப்பதாகவும், நிலுவையை செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும், என்று காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் என்ற நிலை உள்ளது. நகரங்களில் பொதுமக்கள் பெரும்பாலோர், கேன் வாட்டர் வாங்கி உபயோகப்படுத்தும் நிலைக்கு சென்று விட்டனர். பேரூராட்சிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இருந்த போதும், குடிநீர் பைப் லைன் உடைந்தால் பராமரிப்பு செய்வது, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்டணம் செலுத்துவது, குளோரின் கலப்பது போன்ற பராமரிப்பு பணிகளை பார்ப்பதில், சிக்கலை சந்தித்து வருகிறது. காரணம், பல லட்சம ரூபாய் குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளனர் மக்கள்.

பொதுமக்கள் குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த முன்வர வேண்டும், என்று பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.பேரூராட்சி தலைவர் சாந்திரவீந்திரன் கூறுகையில், "குடிநீர் கட்டண நிலுவையை பொதுமக்கள் செலுத்தினால், இன்னும் குடிநீர் விநியோகத்தில் சரியான நிலைப்பாடு கையாளப்படும், என்றார்.
 


Page 235 of 506