Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"சொத்துவரி, குடிநீர் கட்டண நிலுவை: 15-க்குப் பிறகு அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமணி                 12.04.2013

"சொத்துவரி, குடிநீர் கட்டண நிலுவை: 15-க்குப் பிறகு அதிரடி நடவடிக்கை

கடலூர் நகராட்சிக்குச் சேர வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை வசூலிக்க, வரும் 15-ம் தேதிக்குப் பிறகு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து தெரிவித்தார்.

கடலூர் நகராட்சிக்குச் சேர வேண்டிய வரி பாக்கி ரூ.3.40 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.1.82 கோடி நிலுவையில் உள்ளது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக ரூ.7.20 கோடி சொத்துவரி வசூலாகாமல் உள்ளது.

இதனால் நகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து தினமணி நிருபரிடம் கூறியது: "கடலூர் நகராட்சிக்கு வர வேண்டிய வரிபாக்கி மற்றும் குடிநீர் கட்டண நிலுவையை வரும் 15-ம் தேதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்பிறகும் சொத்துவரி செலுத்தாத கட்டடங்களை ஜப்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களை வார்டு வாரியாக கணக்கெடுக்கும் பணியும் 15-ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும். குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு 2 மாதங்களுக்குள் துண்டிக்கப்படும்.

சொத்துவரி தொடர்பாக நீதிமன்ற வழக்குகளின் நிலை குறித்து ஆராய்ந்து வருகிறோம். வழக்குகள் முடிந்த நிலையில் வசூல் செய்யப்படாமல் உள்ள சொத்து வரியை உடனடியாக வசூல் செய்யவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து சொத்து வரியை முழுமையாக வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் கடை வைத்திருப்பவர்கள் 15-ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த தவறினால் 16-ம் தேதி காலை நகராட்சி நிர்வாகம் மூலம் கடைகள் பூட்டப்படும்.

மொத்தத்தில் இன்னும் 2 மாதங்களில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவை முழுமையாக வசூல் செய்யப்படும். செலுத்தாதவர்களின் சொத்துகளை ஜப்தி செய்யவும், குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் முடிவில் நகராட்சி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது' என்றார்.

 

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நகராட்சி ஆணையர் போ. குருசாமி.

Print PDF
தினமணி        12.04.2013

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நகராட்சி ஆணையர் போ. குருசாமி.


பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நகராட்சி ஆணையர் போ. குருசாமி.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், தாளக்குடியிலிருந்து குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம்,  நகராட்சியில் 4,918 பேர் குடிநீர் இணைப்பு பெற்று பயன்பெறுகின்றனர்.

தற்போது கோடைகாலம் என்பதால், தாளக்குடியில் நீர் ஊற்று குறைவு காரணமாக குடிநீர் குறைந்தளவே கிடைக்கிறது.

எனவே, இதைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். ஒரு சில இணைப்புகளில், பொதுமக்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் பிடிப்பதாகத் தெரியவருகிறது. அவ்வாறு பிடிப்பதால், நகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, சட்ட விரோதமாக மின் மோட்டர் மூலம் குடிநீர்ப் பிடிப்பது  தெரியவந்தால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் அவர்.
 

மேலமடை பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு தடை

Print PDF
தினமணி        11.04.2013

மேலமடை பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு தடை


மேலமடை பகுதிகளில் 3 மாதங்களுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கக் கூடாது என, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா பொறியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி வார்டுகள் எண். 29 முதல் 32 வரையிலான மஸ்தான்பட்டி, மேலமடை, தாசில்தார் நகர், வண்டியூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தொடர்பாக புதன்கிழமை மேலமடை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் மேயர் விவி. ராஜன்செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.

அவர் பேசுகையில், மங்களக்குடியில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வந்து, இப்பகுதி நீர்நிலைத் தொட்டிகளில் நிரப்பி விநியோகிக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தொட்டிகள் வைத்து, கூடுதலாக குடிநீர் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வந்து நிரப்பவும், தேவையான இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும். இப்பகுதிகளில் 3 மாதங்களுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகளை பொறியாளர்கள் வழங்கக் கூடாது என்றார்.

கூட்டத்தில் ஆணையர் ஆர். நந்தகோபால், பொறியாளர் (பொறுப்பு) அ. மதுரம், நகர்நல அலுவலர் யாசோதாமணி, மாமன்ற உறுப்பினர்கள் எம். மோகன், ஜெயக்குமார், சுசீந்திரன், ராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 


Page 241 of 506