Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை நகராட்சி சார்பில் கலெக்டர் வழங்கினார்

Print PDF
தினத்தந்தி        10.04.2013

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பை நகராட்சி சார்பில் கலெக்டர் வழங்கினார்


திருவண்ணாமலை நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக் கும் வகையில் வியா பாரிகளுக்கு நகராட்சி சார்பில் கலெக்டர் விஜய்பிங்ளே துணி பைகளை வழங்கினார்.

பிளாஸ்டிக் தடை


திருவண்ணாமலை மாவட் டத்தில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் மாவட்ட நிர்வைகம் சார்பில் விழிப் புணர்வு ஊர்வலங்கள்,  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட் டது. பின்னர் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள்சார்பில் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரி களுக்கு அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது.

துணிப்பைகள்

இந்த நிலையில் திருவண் ணாமலை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரிகளிடம் அதை பறி முதல் செய்துவிட்டு அதற்கு பதில் துணிப்பை வழங்கும் விழிப்புணர்வு திட்டம் நடந் தது. இதன் தொடக்கவிழா நேறறு காலை நடந்தது. திரு வண்ணாமலை காந்திசிலை அருகில் கலெக்டர் விஜய் பிங்ளே வியாபாரிகளுக்கு துணிப்பைகளை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கிவைத் தார்.

அபராதத்தொகையில்

திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில்  ரூ.500, ரூ.1000 என அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தில் துணிப் பைகள் தயாரிக்கப்பட் டுள்ளது. நகராட்சி சார்பில் கடை களுக்கு ஆய்வுக்கு செல் லும்போது அங்கு தடைசெய் யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தால் அதை பறிமுதல் செய்து விட்டு இந்த துணிப் பைகள் வழங்கப்படும்.

நேற்று நடந்த விழாவில் நகராட்சி தலைவர் என்.பாலச் சந்தர், ஆணையாளர் விஜய லட்சுமி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.ஆர்.தரும லிங்கம், பேரவை இணை செயலாளர் என்.பாண்டு, நகராட்சி என்ஜினீயர் பாஸ் கர், கவுன்சிலர்கள் ஜெ.செல் வம், பற்குணகுமார், பாலன், முருகன், போர்மன்னன் ராஜா, நகர்நல அலுவலர் ஆல்பர்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை

Print PDF
தினமணி       10.04.2013

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை


கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாவட்டத் திட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட திட்டக் குழுத் தலைவரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான கீதாமணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, திருச்சி மாவட்டம் பெருகமணியில் இருந்து 12 கி.மீ தொலைவுள்ள நங்கவரத்துக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.  இதே பேரூராட்சியில் 6,7-வது வார்டுகளில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து குறிச்சி, தென்கடைகுறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள 2,800 மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்.

கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் மழை, வெள்ளக் காலங்களில் வீணாகச் செல்லும் நீரை, மயில்ரங்கத்திலிருந்து கூடலூர் வழியாகவோ, அல்லது சின்னதாரபுரம் சவேரியப்பன் குளத்திலிருந்து வெங்கடபுரம் வழியாகவோ, இப்போதுள்ள வாய்க்கால்கள் மூலம் அல்லது புதிதாக வாய்க்கால்களை உருவாக்கி அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டுச் சென்றால், ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறித்து கருத்துருவை தமிழக அரசு அனுப்புவது,

கருவேல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும், நிலத்தடி நீரையும் பெருமளவில் உறிஞ்சி அந்த பகுதியில் வறட்சியை ஏற்படுத்திவிடும். எனவே, அந்த மரங்களை முற்றிலும் அழிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், தேவையான செயல் திட்டங்களை வகுக்கவும் அரசுக்குக் கருத்துரு அனுப்புதல், கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது,

கரூரில் உள்ள கரூர், திண்டுக்கல் புறவழிச்சாலையில் வாகனங்கள் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்தும், பல இடங்களில் ஏற்ற இறக்கமாகவும் உள்ள சாலைப் பகுதியை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் வினய், உறுப்பினர்கள் மாலதி,ஜெகநாதன், திருப்பதி, முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

பிளாட்களாகும் விளைநிலம் பேரூராட்சி எச்சரிக்கை

Print PDF
தினமலர்        09.04.2013

பிளாட்களாகும் விளைநிலம் பேரூராட்சி எச்சரிக்கை


பண்ணைக்காடு:பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் விளை நிலங்கள் அனுமதியின்றி பிளாட்களாக மாறு கின்றன என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் வெங்கட்ரமணன் மற்றும், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். "தினமலர்' நாளிதழ் செய்தியை சுட்டி காட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் (டவுன் கன்ட்ரி பிளானிங்), லே அவுட் மனைப்பரிவு அங்கீகாரம் பெறாத பிளாட்களை பொதுமக்கள் வாங்கி ஏமாறவேண்டாம். அவ்வாறு பெறப்பட்ட இடத்தில் பேரூராட்சி அடிப்படை வசதிகள் செய்ய இயலாது. விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 


Page 243 of 506