Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Print PDF
தினகரன்       08.04.2013

புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு


திருப்பூர்:  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது மண்டலப் பகுதிகளில்புதிய குடிநீர் இணைப்புக்கு ‘டெபாசிட்’ தொகை செலுத்தியவர்கள் வருகிற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கமிஷனர் செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 4வது மண்டலத்தை சேர்ந்த வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் பகுதிகளில் புதிதாக குடிநீர் இணைப்புப் பெற வைப்புத் தொகை செலுத்தியவர்கள், அதற்கான ரசீது, 2013-14ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி (கட்டடத்திற்கு) செலுத்திய ரசீது நகலுடன் வரும் 15ம் தேதிக்குள் 4வது மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே வைப்புத்தொகை செலுத்தப்பட்ட தேதி அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் வரிசைப்ப டுத்தப்பட்டு, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துணை விதிகளின்படி கூடுதல் வைப்புத் தொகை செலுத்துவோருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

குப்பை கிடங்கில் நகராட்சி தலைவர் ஆய்வு

Print PDF
தினகரன்       08.04.2013

குப்பை கிடங்கில் நகராட்சி தலைவர் ஆய்வு


உடுமலை: உடுமலை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் நிறுவனம் மூலம் கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் உரமாக தயாரிக்கப்படுகிறது. இந்த உரக்கிடங்கில் மேம்பாட்டு பணிகளை நகராட்சி தலைவர் சோபனா ஆய்வு செய்தார்.

உரக்கிடங்கை சுற்றி மரக்கன்றுகள் நட்டு, பசுமை வளையம் ஏற்படுத்தி சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், வெயில்காலங்களில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க உரக்கிடங்குக்கு வரும் அனைத்து குப்பைகள் மீதும் தண்ணீர் தெளிக்கவும் உத்தரவிட்டார். உரக்கிடங்கு பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், நகராட்சியில் இருந்து பெறப்படும் குப்பைகளை முழுமையாக உரமாக மாற்றவும், மக்காத பொருட்களை மறுசுழற்சி மூலம் மீண்டும் உபயோகத்தில் கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, நகர்நல அலுவலர் (பொறுப்பு) இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், சிவக்குமார் உடனிருந்தனர்.
 

மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உரிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்

Print PDF
தினகரன்       08.04.2013

மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உரிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்


திருப்பூர்: குடிநீர் இணைப்பில் நேரடியாக மின்மோட்டாரை பொருத்தி நீரை உரிஞ்சினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

திருப்பூர் மாநகர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தடுக்க சிக்கன நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கையாளத் துவங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக குடிநீர் விரையமாக்கப்படுவதை தடுக்கவும், குடிநீர் விதிமீறி எடுக்கப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, குடிநீர் குழாயில் மின்மோட்டார் அமைத்து குடிநீர் உரிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தில் வீட்டுக்குழாய் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

குடிநீர் இணைப்பில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது தெரியவந்தால், நிரந்தர குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மின்மோட்டார் பறிமுதல் மற்றும் அபராதம் விதித்தல் போன்ற சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.
 


Page 245 of 506