Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் தீவிரம் கலெக்டர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

நாகூர் தர்கா கந்தூரி விழா ஏற்பாடுகள் தீவிரம் கலெக்டர் ஆய்வு


நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கான முன்னேற் பாடுகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் முனு சாமி ஆய்வு செய்தார்.

முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு

நாகை அடுத்த நாகூர் தர்கா வில் கந்தூரி விழா வருகிற 11ந் தேதி தொடங்கி 24ந்தேதி வரை நடைபெறுகிறது. விழா வின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து 2 முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய் வுக் கூட்டம் நடத்தப்பட்டு தர்கா சுற்றி உள்ள அக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி, கந்தூரி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். நாகூர் தர்கா முன்பு ஆக்கிர மிப்பு அகற்றும் பணிக்கு பிறகும் மீண்டும் வைக்கபட்டி ருந்த ஒருசில தற்காலிக தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டிகளை அகற்றக்கோரி வருவாய் துறை மற்றும் நகராட்சி துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தர்கா வாசல், யானை கட்டி முடுக்கு, நியூ பார்க், கால் மாட்டு வாசல், தர்கா குளம் வடகரை உள் ளிட்ட பகுதிகளை கலெக்டர் அனைத்து துறை அலுவலர் களுடன் நேரில் சென்று நடைபெற்று வரும் விழா தொடர்பான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய் தார். நாகூர் நகர்நல மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் முனுசாமி தொடர்ந்து வருகை தராமல் உள்ள டாக்டர் தமிழ்ச்செல்வி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

கடைத்தெருவில் இரு சக்கர வாகனங்கள் ஒரு பக்கமாக பார்க்கிங் செய்ய வேண்டும். நாகூர் நகரை சுற்று உள்ள சாக்கடை அடைப்புகளை நகராட்சி துறையினர் உடனடி யாக அகற்ற வேண்டும். நக ராட்சி சார்பில் பராமரிக்கப் படும் கழிவறைகளை சுத்தம் செய்து யாத்ரீகர்கள் பயன் படுத்தும் வகையில் அவை தொடர்ந்து பராமரிக்க வேண் டும். மேலும் மொபைல் டாய் லெட் அமைக்கும் இடங்களை சுத்தம் செய்து உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும். தர்கா குளத்தில் உள்ள குப்பை களை அகற்றி பக்தர்கள் புனித நீராட சுத்தம் செய்ய வேண் டும். நகராட்சி, வருவாய் துறை, காவல்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை ஆகிய துறைகள் இணைந்து அனைத்து முன்னெற்பாடு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கலெக்டரின் இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை இணை இயக்குனர் ரால்ப் செல்வின், உதவி கலெக்டர் மணிகண்டன், தாசில்தார் சம்பத்குமார், நகரமன்ற துணைத் தலைவர் சுல்தான் அப்துல்காதர், நகர மன்ற உறுப்பினர் முகமதுகபீர், மேனேஜிங் டிரஸ்டி சேக்அசல் சாகிப், நாகூர் வளர்ச்சி குழுவின் தலைவர் நவுசாத் ஆகியோர் உடனிருந்தனர். 
 

வழித்தடம் இல்லாத குப்பை கொட்டும் இடத்தில் நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

வழித்தடம் இல்லாத குப்பை கொட்டும் இடத்தில் நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு


வழித்தடம் இல்லாமல் இருந்த பல்லடம் நகராட்சியின் குப்பை கொட்டும் இடத்தை நகராட்சி களின் மண்டல நிர்வாக இயக்குனர் பிரேமா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வழித்தடம் இல்லை

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நகராட்சி பகுதியில் தினசரி 30 டன் முதல் 40 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாத தால் பல்லடம் பகுதிகளில் உள்ள பழைய கிணறு, காலி இடங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் குப்பை கொட்டுவதற்கு வசதியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பல்லடத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேத்தனூர் பகுதியில் 5Ð ஏக்கர் இடம் ரூ.8 லட்சம் மதிப்பில் நகராட்சி சார்பில் வாங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்துக்கு செல்வதற்கு சரியான வழித்தடம் இல்லை. இதனால் இடம் வாங்கியும் குப்பை கொட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

மண்டல இயக்குனர் ஆய்வு


நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் பிரேமா நேற்று பல்லடம் வந்தார். வழித்தடம் இல்லாத கேத்தனூரில் உள்ள சம்பந் தப்பட்ட 5Ð ஏக்கர் நிலத்தை அவர் பார்வையிட்டார். நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அந்த இடத்தில் கொட்டுவதற்கு தேவையான வழித்தட வசதியை ஏற்படுத் திக் கொடுப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பல்ல டம் பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள சுடுகாடு இடத்தை பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். பல்லடம் பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி செய்ய நகராட்சியில் ஏற் கனவே தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள் ளது. எந்தவகையான விரி வாக்க பணியை மேற்கொள் வது என்பது குறித்து அவர் விவரம் கேட்டறிந்தார்.

ஆடுவதை கூடம்

பின்னர் உழவர் சந்தை அருகே ரூ.35 லட்சத்தில் அமைய உள்ள நவீன ஆடுவதை கூடம் அமைப்பது தொடர்பாக பல்லடம் நகராட்சி செயல் அதிகாரி சாந்த குமார், சுகாதார அதிகாரி சரவணன் ஆகியோரிடம் விவரம் கேட்டறிந்தார்.
 

நாகூர் தர்கா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF
தினமணி      05.04.2013

நாகூர் தர்கா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு


கந்தூரி விழாவையொட்டி, நாகூர் தர்கா பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

நாகூர் தர்காவின் கந்தூரி விழா வரும் 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் தர்கா சார்பில் நாகூர் பகுதியில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நகராட்சி கழிப்பறையை சுத்தம் செய்து பராமரிக்கவும்  தாற்காலிக கழிப்பறைகளை விரைவாக அமைக்கவும், தர்கா குளத்தில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், நாகூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாக்கடை அடைப்புகளை உடனடியாக அகற்றி தூய்மையாகப் பராமரிக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். அண்மையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நாகூர் தர்கா வாசல் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள  சாலையோரக் கடைகளை அகற்றவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

அரசு மருத்துவர் மீது நடவடிக்கை

நாகூர் நகர்நல மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அந்த மையத்தின் மருத்துவர் தமிழ்ச்செல்வி தொடர்ந்து பணிக்கு வராததையறிந்து உடனடியாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சுகாதாரத் துறை இணை இயக்குநர் வி.ஏ. ரால்ப்செல்வின், கோட்டாட்சியர் வே. மணிகண்டன், வட்டாட்சியர் எல். சம்பத்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ. சுல்தான் அப்துல்காதர், நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் ஷேக் அசன் சாகிபு, நாகூர் வளர்ச்சிக் குழுத் தலைவர் நெüஷாத், நகர்மன்ற உறுப்பினர் முகமது கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.
 


Page 250 of 506