Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஏல விவகாரம்: பஸ் நிலையங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நகராட்சி

Print PDF
தினமணி       04.04.2013

ஏல விவகாரம்: பஸ் நிலையங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நகராட்சி


நாகர்கோவிலில் உள்ள இரு பஸ் நிலையங்களிலும் பஸ்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்து பொதுஏலத்தில் முடிவு ஏற்படாததால், நகராட்சி ஊழியர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பஸ் நிலையம், நாகர்கோவிலில் உள்ள அண்ணா பஸ் நிலையம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இந்த இரு பஸ் நிலையங்களுக்கு வந்து செல்லும் பஸ்களுக்கு நாள்தோறும் நுழைவுக் கட்டணமாக ரூ. 12 வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இக்கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ. 21 லட்சத்து 6 ஆயிரத்து 988-க்கு ஏலம் போனது.

நிகழாண்டு ஏலம் எடுப்பவர்கள், ஏலம் எடுக்கும் தொகைக்கு 12 சதவீதத்துக்கு மேல் சேவை வரி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் ஒப்பந்தப்புள்ளியை யாரும் கோரவில்லை எனத் தெரிகிறது. எனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பஸ் நிலையங்களுக்கு வரும் பஸ்களுக்கான நுழைவுக் கட்டணம் நகராட்சி ஊழியர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மறு ஏலம் விடப்பட்டு முடிவு ஏற்படும் வரை ஊழியர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 

நவீன கழிப்பறை திட்டம் அவசியம்: ஆட்சியர்

Print PDF
தினமணி       04.04.2013

நவீன கழிப்பறை திட்டம் அவசியம்: ஆட்சியர்


மக்களின் வரவேற்பு பெற்ற நவீனக் கழிப்பறை திட்டம் அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் லி. சித்ரசேனன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடந்த மாவட்டத் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் நவீன கழிப்பறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

தினமும் 800 பேர் வரை அதைப் பயன்படுத்துகின்றனர். இத்திட்டம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பெரிய நகரம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். தாம்பரத்தில் ரூ. 4.50 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இதற்காக ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களை அணுகி, அவர்களிடம் நன்கொடை பெற்று இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம். இதேபோல், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் செல்வாக்கில், பெரிய நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிடலாம். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

பட்டா வழங்குவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பேரவையில் பட்டா வழங்க அனுமதிக்கப்பட்டால், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தவிர மற்ற இடங்களுக்கு பட்டா கிடைக்க வழி ஏற்படும். சென்னைக்கு அடுத்த நிலையில் வளர்ந்து வரும் நகரமாக காஞ்சிபுரம் திகழ்கிறது. ஆனால் இங்கு பஸ்நிலையம், நவீன வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கு நகரில் இடம் இல்லை. ஆனாலும், அத்திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களை அவர்கள் இடத்துக்கே நேரில் சந்தித்து மக்கள் குறைதீர்க் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஆட்சியர் லி. சித்ரசேனன்.
 

வடுகப்பட்டியில் பன்றிகள் வளர்க்க தடை பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF
தினத்தந்தி        04.04.2013

வடுகப்பட்டியில் பன்றிகள் வளர்க்க தடை பேரூராட்சி கூட்டத்தில் முடிவு


வடுகப்பட்டியில் பன்றிகள் வளர்க்க தடை விதித்து பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள வடுகப் பட்டி பேரூராட்சி கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஈஸ்வரி முருகேசன் தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் சிவ னேஸ்வரி, செயல் அலுவலர் சு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விவரம் வருமாறு:

எம்.கணேசன்: பேரூராட்சி பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றது. இதனால் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பேரூராட்சி பகுதியில் பன்றி கள் வளர்க்க தடை விதிக்க வேண்டும்.

செயல் அலுவலர்: பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப் படும்.

சந்திரசேகரன்: பேரூராட்சி பகுதியில் பண்டிகை காலங் களை தவிர மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும்.

மின் கட்டண வசூல் மையம்

துரைராஜ்: வடுகப் பட்டியில் மின்சார கட்டணம் வசூல் செய்வதற்கு என்று வசூல் மையம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போன்று போலீஸ் புறக்காவல் நிலைய மும் கொண்டுவர மாவட்ட போலீஸ் நிர்வாகம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காமாட்சி: பேரூராட்சி பகுதியில் கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதற் கென்று தனி இடத்தை அமைத் துக் கொடுக்க வேண்டும்.

தலைவர்: இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்திரசேகரன்: வராகநதி யில் பொதுப்பணித்துறை கட்டிய தடுப்பணை இடிக்கப் பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் மணல் அள்ளுவதால் பாலம் மிகவும் சேதமடைந்து வருகிறது.

பெத்தணசாமி: வடுகப் பட்டி பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.

தலைவர்: தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.
 


Page 253 of 506