Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

உப்பிடமங்கலத்தில் பேரூராட்சி இயக்குநர் ஆய்வு

Print PDF
தினமணி        01.04.2013

உப்பிடமங்கலத்தில்  பேரூராட்சி இயக்குநர் ஆய்வு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.

உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு 2012-13-ல் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், ரூ. 12 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் பாறப்பட்டு, சின்னாக்கவுண்டனூர் ஆதிதிராவிடர் தெரு, கருப்பூர், புதுக்கஞ்சமனூர், சாலப்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ. 2 லட்சம் வீதம் மினி பவர் பம்ப், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

மேலும், ராஜாகவுண்டனூர், புகையிலைகுறிச்சியானூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ. 1 லட்சம் வீதம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் செல்வராஜ் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தமிழரசி, உதவி நிர்வாக பொறியாளர் சாய்ரா, உதவி பொறியாளர் முரளி உள்பட பலர் உடனிருந்தனர்.
Last Updated on Monday, 01 April 2013 10:13
 

சித்திரைத் திருவிழா: கடைகளை ஏலம் விட பேரூராட்சி முடிவு

Print PDF
தினமணி         01.04.2013

சித்திரைத் திருவிழா: கடைகளை ஏலம் விட பேரூராட்சி முடிவு


மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் அமைக்கப்படும் கடைகளுக்கான வாடகையை ஏலம் விட பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி, செயல் அலுவலர் சஞ்சீவி, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கவுன்சிலர் முனியசாமி: நகரில் நோய் தாக்கிய நாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. இதனால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல அஞ்சும் நிலை உள்ளது. நாய்களை ஒழிக்க வேண்டும். நகர் பகுதியில் வைகையாற்றில் பெண்கள் பெட்டிகளிலும் தள்ளுவண்டிகளிலும் மணல் அள்ளிச் செல்வதை தடை செய்ய வேண்டும். திருவிழா கடைகளுக்கு ஏலம் நடத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

கவுன்சிலர் மோகன்தாஸ்: பேரூராட்சி எல்கையை அனைத்து பகுதிகளிலும் வறையரை செய்ய வேண்டும் என்றார்.

மேலும் பல கவுன்சிலர்கள் பேசும்போது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், தங்கள் வார்டு குறைகள் குறித்தும் பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் சஞ்சீவி பதிலளித்தனர்.  கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தரமற்ற பிளாஸ்டிக் பைகளை விற்றால் கடும் நடவடிக்கை

Print PDF
தினமணி         01.04.2013

தரமற்ற பிளாஸ்டிக் பைகளை விற்றால் கடும் நடவடிக்கை


நாரவாரிகுப்பம் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.

பேரூராட்சித் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 13-வது வார்டில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்புதல் வழங்குவது. அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு வராத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பது.

திருமண மண்டபம், உணவு விடுதி, கோழி இறைச்சிக்கடை, திரைப்பட அரங்கம், தள்ளு வண்டி உணவகம் போன்றவற்றில் இருக்கும் குப்பை, கழிவுகளை பேரூராட்சி நிர்வாக கட்டணம் விதித்து பேரூராட்சி வாகனம் மூலம் அகற்ற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்வது.

பிளாஸ்டிக் கழிவு இல்லாத பேரூராட்சியாக அமைத்திட ஏதுவாக, 40 மைக்ரானுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 


Page 260 of 506