Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பேரூராட்சி நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு

Print PDF
தினமணி     28.03.2013

பேரூராட்சி நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு


சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத் தரக் கோரி, அந்தப் பேரூராட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

செந்தாரப்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் ஏசுராஜ், சிங்காரம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் அளித்த மனு விவரம்:

செந்தாரப்பட்டி பேரூராட்சி 3-ஆவது வார்டு பகுதியில் சிலுவைகிரிக்கு செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையையொட்டி, பேரூராட்சிக்கு சொந்தமான கிணறும், 50 சென்ட் நிலமும் உள்ளது. இந்த இடத்தில் குடிநீர்த் தொட்டி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேரூராட்சி, பொதுப் பணித் துறைக்கு சொந்தமான நிலம், கிணற்றை ஆக்கிரமித்து கோயில் கட்டி வருகிறார். எனவே, ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பேரூராட்சி பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நிலுவை வரி வசூல்: நகராட்சி நிர்வாகத்துக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு

Print PDF
தினமணி     28.03.2013

நிலுவை வரி வசூல்:  நகராட்சி நிர்வாகத்துக்கு  நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு


வாணியம்பாடி நகராட்சியில் நிலுவை வரிகளை வசூலித்து சாதனை படைத்த நகராட்சி நிர்வாகத்துக்கு நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வாணியம்பாடி நகராட்சியின் அவரச மற்றும் சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை நீண்ட காலமாக செலுத்தாவர்களிடமிருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர் ரவி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ரவி, உதவியாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை வராமல் இருக்க அனைத்து வார்டுகளிலும் உள்ள சிறுமின்விசை நீர்த் தேக்கத் தொட்டிகளை பராமரிக்க வேண்டும். இதுவரை வரி போடாத வீடுகளுக்கு, கடைகளுக்கு வரிகள் விதிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், குடிநீர் பிரச்னை வராமல் இருக்க ரூ.7 லட்சம் மதிப்பில் அனைத்து வார்டுகளிலும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். வரி போடாத வீடுகள், கடைகளுக்கு வரி போடப்படும் என்றார்.

கூட்டத்தில் 62 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. நகராட்சி ஆணையர் ரவி, நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

உதகையை தூய்மை நகராட்சியாக மாற்றும் திட்டம் அமல்: ஆட்சியர்

Print PDF
தினமணி     28.03.2013

உதகையை தூய்மை நகராட்சியாக  மாற்றும் திட்டம் அமல்: ஆட்சியர்


உதகை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

1. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் நகராட்சிகளில் நிலவும் வாகன நிறுத்துமிட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். உதகை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும். மேட்டுப்பாளையம் முதல் கக்கநள்ளா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை கோடை சீசனுக்குள் சீரமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

2. நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்ய நடமாடும் மண் பரிசோதனைக் கூடம் விரைவில் அமைக்கப்படும்.

3. பின்தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள உதகை, கோத்தகிரி வட்டாரப் பகுதிகளை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மாநில திட்டக் குழுவின் நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 265 of 506