Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ராமநாதபுரம் நகராட்சி பணிகளுக்கு பதிவு மூப்பு பரிந்துரை

Print PDF
தினமணி     28.03.2013

ராமநாதபுரம் நகராட்சி பணிகளுக்கு பதிவு மூப்பு பரிந்துரை

ராமநாதபுரம் நகராட்சிக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், சங்கலி ஆள், பணி ஆய்வர் ஆகிய பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இளநிலை உதவியாளர் மற்றும் வருவாய் உதவியாளர்: கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,1.1.2013-ன்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வயது 18 முதல் 35. பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 18 முதல் 32 வரை. பொதுப் போட்டியாளர் வயது 18 முதல் 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களில் அருந்ததியரில் முன்னுரிமையுள்ளவர்கள் அனைவரும் பரிந்துரை செய்யப்படுவர். முன்னுரிமையுள்ள பொதுப் போட்டியாளர்களில் ஆதரவற்ற விதவைகள் 10.9.1997 வரை பதிவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.

சங்கலி ஆள்: கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது 18 முதல் 35. பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர் வயது 18 முதல் 32. பொதுப் போட்டியாளர் 18 முதல் 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. முன்னுரிமையுள்ள பொதுப்போட்டியாளர்களில் கலப்புத் திருமணம் தவிர மற்ற அனைவரும் பரிந்துரை செய்யப்படுவர். முன்னாள் மற்றும் இன்னாள் படைவீரரைச் சார்ந்தோர்கள் 25.1.2006 வரை பரிந்துரை செய்யப்படுவர்.

பணி ஆய்வர்: பணி ஆய்வர் பணிக்காலியிடத்திற்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் கல்வித் தகுதியினை பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 1.1.2013-ன்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்டோர் வயது 18 முதல் 35. பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் 18 முதல் 32. பொதுப்போட்டியாளர் 18 முதல் 30. கலப்புத் திருமணம் தவிர பொதுப்போட்டியாளர்களில் முன்னுரிமையுள்ளவர்கள் பரிந்துரைக்கப்படுவர். இக்காலிப் பணியிடங்கள் அனைத்துக்கும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. இளநிலை உதவியாளர் மற்றும் வருவாய் உதவியாளர், சங்கலி ஆள் பணிக்காலியிடங்களுக்கு ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குள் முகவரி கொடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

இக்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதிகள் உடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து சான்றிதழ்களுடன் வரும் 28 ஆம் தேதி நேரில் வந்து பரிந்துரை விவரத்தை தெரிந்து கொள்ளுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

Print PDF
தினமணி     28.03.2013

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில்  துப்புரவுப் பணியாளர் பணியிடத்துக்கு  வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணிக்காலியிடத்துக்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணிக்காலியிடத்திற்கான தகுதி உத்தேச பதிவு மூப்பு பின்வருமாறு இருக்க வேண்டும். எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், அதோடு விருப்பத்தோடு துப்புரவு மேற்கொள்ளும் பணிக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு 1.7.2012 அன்றைய நாளில் ஆதிதிராவிடர்- 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், இதரர்-18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி கட்டாயம் வயது தளர்வு உண்டு. உத்தேச பதிவுமூப்பு: ஆதிதிராவிடர்-31.12.2001 வரையிலும், ஆதிதிராவிடர்(அருந்ததியினர்)-31.5.2006 வரையிலும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் நாளது தேதி வரையிலும், பகிரங்க போட்டியாளர்கள் 30.9.2008 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

முன்னுரிமை உடையவர்கள்: அனைத்து பிரிவினரும் (ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ராணுவத்தில் பணிபுரிகின்றவர்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள்) உள்ளிட்டோர்.

மேற்குறிப்பிட்ட தகுதி மற்றும் பதிவு மூப்புடைய பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது. அதனால், வியாழக்கிழமை (மார்ச் 28) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
 

அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டடத்துக்கு "சீல்': ஆட்சியர் நடவடிக்கை

Print PDF

தினமணி              28.03.2013

அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டடத்துக்கு "சீல்':  ஆட்சியர் நடவடிக்கை


மதுரையில் உள்ளூர் திட்டக் குழும அனுமதியின்றி கட்டப்பட்டுவந்த 7 மாடி கட்டடத்துக்கு புதன்கிழமை அதிகாரிகள் "சீல்' வைத்தனர். ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் சாலையில், நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரேயுள்ள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதியின்றி அடுக்கு மாடி கட்டடம் கட்டுவதாக ஆட்சியருக்குப் புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின்பேரில், உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் அந்த கட்டடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர்.

அப்போது, மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் முன்பு பணியாற்றிய புகார்களுக்கு உள்ளான அதிகாரி ஒருவரிடம் முறைகேடாக அனுமதி பெற்றது தெரிய வந்தது.

இந்த அனுமதி ஏற்புடையதல்ல என்றும், முறையாக உள்ளூர் திட்டக் குழுமத்தில் வரைபட அனுமதி பெற்று கட்டடம் கட்டுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினராம்.

ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், மதுரை உள்ளூர் திட்டக் குழு உறுப்பினர்-செயலர் நாகராசன் தலைமையில் அதிகாரி மருதுபாண்டியன், மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி நகரமைப்பு அதிகாரி முத்துக்குமார் மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம், மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை அந்த அடுக்குமாடி கட்டடத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு எச்சரித்தனர். பின்னர், அந்த கட்டடத்துக்கு "சீல்' வைத்தனர்.

இதுகுறித்து உள்ளூர் திட்டக்குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரம் சதுர அடிக்குள்ளான குடியிருப்பு கட்டடத்துக்கு மட்டுமே மாநகராட்சி மூலம் கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால், இங்கு 7 மாடியில் கட்டடம் கட்டப்படுகிறது. மேலும் மீனாட்சியம்மன் கோவில் சுற்றுச் சுவரில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ள இக்கட்டடம் கோவில் கோபுரத்தைவிட உயரமாகக் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்துக்கு வரைபட அனுமதி கோரி, உள்ளூர் திட்டக் குழுமம் மூலம் தமிழக அரசிடம் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

விண்ணப்பித்திருந்தாலும் கோவில் கோபுரத்தை விட உயரமாகக் கட்டடம் எழுப்ப அனுமதி கிடைத்திருக்காது எனத் தெரிவித்தார்.

 


Page 266 of 506