Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சிக்கு வரும் குடிநீர் மாயம் கண்டுபிடிக்க தீவிர கண்காணிப்பு

Print PDF
தினமலர்        27.03.2013

நகராட்சிக்கு வரும் குடிநீர் மாயம் கண்டுபிடிக்க தீவிர கண்காணிப்பு


திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சிக்கு, பள்ளிபாளையம் அடுத்த, ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் இருந்து, ஒரு நிமிடத்துக்கு, பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது. அந்த தண்ணீர், திருச்செங்கோடு சந்தைப்பேட்டையை வந்தடையும்போது, 6,000 லிட்டராக குறைந்து விடுகிறது.

முழுமையான தண்ணீர் வந்து சேராததற்கான காரணத்தை, நகராட்சி அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. கோடைகாலத்தில், காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் நீரை கொண்டே, நகராட்சி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையத்தை அடுத்த எஸ்.பி.பி., காலனி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஒரு குழாய் வால்வில் தண்ணீர் கசிவு ஏற்படுவது தெரிய வந்தது. அந்த இடத்துக்கு, நகராட்சி உதவி பொறியாளர் அம்சா தலைமையில் சென்ற நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, குழாயில் வித்தியாசமான வால்வு இருப்பதை கண்டுபிடித்தனர். தகவல் அறிந்த சேர்மன் சரஸ்வதி, கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அனுமதி இல்õமல் குடிநீரை உறிஞ்ச வால்வு போடப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அந்த வால்வை பரிசோதனை செய்ததில், பம்ப் செய்யப்படும் தண்ணீர் திருப்பிச் செல்வதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள வால்வு என்பது தெரியவந்தது. அதனால், அப்பகுதியில் தண்ணீர் திருட்டு நடக்கவில்லை, என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும், நிமிடத்துக்கு 3,000 லிட்டர் தண்ணீர் குறைவதால், அதற்õன காரணத்தை கண்டுபிடித்து, தடுக்க வேண்டுமென்று பணியாளர்கள் முடிக்கி விடப்பட்டுள்ளனர்.
 

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஜரூர் "ஆக்கிரமிப்பு' வணிக நிறுவனங்கள் கலக்கம்

Print PDF
தினமலர்        27.03.2013

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஜரூர் "ஆக்கிரமிப்பு' வணிக நிறுவனங்கள் கலக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சியில், மழை நீர் வடிகால் அமைக்கும், பணியில் அதிகாரிகள் ஜரூராக ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு வணிக நிறுவனங்கள், கலக்கம் அடைந்துள்ளன.

சேலம் மாநகராட்சியில், சாக்கடை கழிவுகளை முறையாக வெளியேற்றும் நோக்கத்தில், பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில், பல இடங்களில் ஏற்கனவே உள்ள, வடிகால்கள் மிகவும் சீரழிந்தும், அடைப்பு ஏற்பட்டும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

சீரழிந்த இடங்களை தேர்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில், மொத்தம், 40 இடங்களில், மூன்று கோடியே, 64 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக, பல வார்டுகளில், பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல இடங்களில், வடிகால்களை ஆக்கிரமித்து, சிமென்ட் சிலாப், பெட்டி கடைகள், மரம், செடி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்புக்களை அகற்றி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஜரூராக ஈடுபட்டு வருகின்றனர்.

குடியிருப்பு வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டும் அல்லாமல், நகர பகுதியிலும், வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், அப்ஸரா இறக்கம் பகுதியில், வடிகால்களை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த வணிக நிறுவனங்களின் மேற்கூரைகள், சிமென்ட் சிலாப்புகள் ஆகியவற்றை அதிகாரிகள், அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

நேற்று, புது பஸ் ஸ்டாண்டு, எதிரே உள்ள அத்வைத ஆஸ்ரம ரோட்டில், மழைநீர் வடிகால் அமைப்பதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம், வணிக நிறுவனங்கள் கடைக்குள் நுழைவதற்காக, போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள், அதிரடியாக அகற்றப்பட்டது.

பெரும்பாலான வணிக நிறுவனங்கள், வடிகால்கள் மற்றும் மாநகராட்சி நிலங்களை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது, வடிகால் அமைப்பதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கியிருப்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.
 

கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Print PDF
தினமலர்                    27.03.2013

கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


திருமழிசை:""கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என, பேரூராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.திருமழிசை பேரூராட்சி கூட்டம், தலைவர் அமுதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஜெயக்குமார், துணைத் தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:சங்கர் (தி.மு.க.,): திருமழிசையில் உள்ள திருவள்ளூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக, சாலையின் இருபுறமும் உள்ள கட்டடத்தை இடித்து, பல மாதம் ஆகியும் சாலை செப்பனிடும் பணி நடைபெறவில்லை.திருநாவுக்கரசு (தி.மு.க.,): கோடை காலம் நெருங்குவதால், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும்.சங்கர் (அ.தி.மு.க.,): திருமழிசை பேருந்து நிலையம் அருகே உள்ள, பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை பாதுகாத்திட, முள்வேலி அமைக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தலைவர் அமுதா: கவுன்சிலர்கள் குறிப்பிட்ட கோரிக்கைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Last Updated on Wednesday, 27 March 2013 11:53
 


Page 267 of 506