Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வளர்ச்சித் திட்டப்பணிகள்: குடிநீர் வழங்கல் துறை செயலர் கே.பனீந்தரரெட்டி ஆய்வு

Print PDF
தினமணி         25.03.2013

வளர்ச்சித் திட்டப்பணிகள்: குடிநீர் வழங்கல் துறை செயலர் கே.பனீந்தரரெட்டி ஆய்வு


பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துத்துறை திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை செயலருமான கே.பனீந்திரரெட்டி நேரில் பார்வையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவில் டயாலிஸிஸ் இயந்திரங்கள் மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் (நியோ நாட்டல் ஐ.சி.யூ) இன்குபேட்டர் கருவியின் செயல்பாடு, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட்டு, தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக அரசு மருத்துவ மனையின் தரைப்பகுதிகளை தொடர்ந்து சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் மூலம் மக்கள் சேவை மையத்தில் கணினி மூலம் ஆவணங்களை உள்ளீடு செய்துள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், ரோவர் பள்ளி நுழைவு வழியிலிருந்து செல்லும் சாலையை எளம்பலூர் சாலையுடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து பார்வையிட்டு, நகராட்சியில் குடிநீர் விநியோகப் பணிக்காக உப்போடையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடிநீர் கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், எளம்பலூர் ஊராட்சியில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2011 – 12ம் ஆண்டில் கட்டப்பட்ட வீடுகளை பார்வையிட்ட அவர், ரூ. 31 கோடி மதிப்பில் புதை சாக்கடை திட்டப்பணிகளுக்காக நெடுவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார். வாலிகண்டபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான பகல்நேர பராமரிப்பு மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு கருவிகளின் பயன்பாடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.சரஸ்வதி, கோட்டாட்சியர் இரா.ரேவதி, நகராட்சி தலைவர் சி.ரமேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) ப.சங்கரலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
Last Updated on Tuesday, 26 March 2013 09:58
 

சிவகங்கையில் 2 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ.20 லட்சம் ஒதுக்கீடு: நகராட்சித் தலைவர்

Print PDF
தினமணி          24.03.2013

சிவகங்கையில் 2 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ.20 லட்சம் ஒதுக்கீடு: நகராட்சித் தலைவர்


சிவகங்கையில் இரு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.20 லட்சம்  ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவர் எம்.அர்ச்சுனன் தெரிவித்தார்.

சிவகங்கையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் எம்.அர்ச்சுனன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் கே.வி.சேகர், ஆணையர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தலைவர் அர்ச்சுனன் பேசியதாவது:

சிவகங்கையில் கோரிக்கை மனுக்களுக்குப் பதிவு எண் கொடுக்கப்பட்டு அனைத்து  மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது.

நீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் நகரில் உள்ள அனைத்து ஊருணிகளும் தூர்வாரப்பட்டு கரைகள்  பலப்படுத்தப்படும்.

நகரில் 48 காலனி, சுண்ணாம்புக் காளவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச் சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு தேரோட்டம் நடைபெற வசதியாக வீதிகள் பராமரிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மன்னர் கல்லூரி எதிர்புறம் உள்ள கூட்டுறவு நிறுவனம் நலிவடைந்து அதன் அலுவலகக் கட்டடம் ஏலம்போகும் நிலையில் உள்ளது.  நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு மதிப்பில் அந்தக் கட்டடத்தை ஏலம்போகும் முன் விலைக்கு வாங்கினால் நகராட்சிக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அங்கு நகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். எனது இந்த கோரிக்கையை தீர்மானமாக இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

துணைத் தலைவர் சேகர் பேசும்போது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.    இக் கோரிக்கை தீர்மானம் நிறைவேறியது.
 

சேலம் மாநகராட்சி பகுதியில் ஓமியோபதி மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் கருத்தரங்கில் மேயர் சவுண்டப்பன் தகவல்

Print PDF
தினத்தந்தி            24.03.2013

சேலம் மாநகராட்சி பகுதியில் ஓமியோபதி மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் கருத்தரங்கில் மேயர் சவுண்டப்பன் தகவல்


சேலம் மாநகராட்சி பகுதியில் புதியதாக ஓமியோபதி மருத்துவமனை விரைவில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கருத்தரங்கில் மேயர் சவுண்டப்பன் கூறினார்.

கருத்தரங்கம்

தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் சார்பில் தொற்று நோய்கள் மற்றும் அதற்குண்டான ஓமியோபதி மருத்துவ சிகிச்சை குறித்த கருத்தரங்கம் சேலத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஹனிமன் தலைமை தாங்கினார். மத்திய, மாநில ஓமியோபதி மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் என்.வி.சுகதன் வரவேற்றார்.

இந்த கருத்தரங்கில் சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–

பொதுவாகவே ஓமியோபதி மருத்துவம் என்பது சிறப்பு வாய்ந்தவையாகும். ஓமியோபதி மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓமியோபதி மருத்துவத்துறைக்கு தமிழக முதல்–அமைச்சர், தனி கவனம் மேற்கொண்டு சலுகைகளை அளித்து வருகிறார்.

புதிய மருத்துவமனை

சேலம் மாநகராட்சியில் புதிய ஓமியோபதி மருத்துவமனை ஆரம்பிக்க திட்டம் தயாரித்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன்

ஓமியோபதி மருத்துவமனை விரைவில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான டாக்டர்களும் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு மேயர் சவுண்டப்பன் பேசினார்.

இந்த கருத்தரங்கில், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் டாக்டர் ரவி, ஓமியோபதி கவுன்சில் உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை டாக்டர்கள் பிரபு, சதீஸ்குமார், வெங்கடேஷ் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.
 


Page 271 of 506