Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சங்கனூர் பள்ளம் பாலம் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

Print PDF
தினகரன்     14.03.2013

சங்கனூர் பள்ளம் பாலம் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


கோவை: கோவை சங்கனூர் பள்ளத்தில் கட்டப்பட்டு வரும் பாலம் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் லதா கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை மாநகராட்சி கமிஷனராக லதா கடந்த 4ம்தேதி பொறுப்பேற்றார். அதன்பிறகு, நேற்று முதல்முறையாக மாநகர் முழு வதும் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

புரூக்பாண்ட் ரோடு சீத்தாலட்சுமி மகப் பேறு மருத்துவமனையை ஆய்வுசெய்த அவர், கர்ப்பிணிகளுக்கு சரியான முறை யில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா, உணவுப்பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா, தங்குவதற்கு வச திகள் போதுமான அளவு உள்ளதா என்பது பற்றி கேட்டறிந்தார். மருத்துவமனை அருகே சாலை யோரம் விபத்து ஏற்படுத் தும் வகையில் இருந்த மண் குவியலை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

 69வது வார்டு புலியகுளம் ரோடு, பெரியார் நகர், பாலசுப்பிரமணியம் நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பெரியார் நகரில் 3 குடிநீர் குழாய் சுத் தம் செய்யாமல் இருப்பதை அறிந்து அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார். தெருவோர குடிநீர் குழாய்களை முறை யாக பராமரிக்க உத்தரவிட்டார்.

65வது வார்டு கல்லறை முதல் தெரு, பாரதிபுரம் சர்ச் வீதி ஆகிய பகுதிகளில் நடந்த சிறப்பு தூய்மை பணியை பார்வையிட்டார். தெருவோர குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வடி கால் தூர் வாரும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டடம் பயனற்று கிடப்பதை பார்வையிட்டார். அதை, புனரமைக்கவும் உத்தரவிட்டார்.

சங்கனூர் பள்ளம் 48வது வார்டில் ரூ.64.50 லட்சம் மதிப்பீட்டில், ரத்தினபுரியையும், காந்திபுரம் 5வது வீதியையும் இணைக் கும் பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தினமும் தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோக பணியை 100 சதவீதம் நிறைவேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். சாக்கடை கால்வாய் தூர் வாரும் போது துப்புரவு பணியாளர்கள் கண்டிப்பாக கையுறை, காலுறை அணியவேண்டும் என வலியுறுத்தினார்.

கவுண்டம்பாளையத்தில் சிறுவாணி-பில்லூர் குடிநீர் குழாய் இணைப்பு பணியை பார்வையிட்டார். இப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொண் டார். சாயிபாபாகாலனி யில் உள்ள தமிழ்நாடு நகரி யல் பயிற்சி மைய தங்கும் விடுதி மேம்பாட்டு பணி களை பார்வையிட்டார்.

ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் கருணாகரன், கண்காணிப்பு பொறியாளர் கணேஷ்வரன், நிர்வாக பொறியாளர்கள் சுகுமார், லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் ஞானவேல், உதவி பொறியாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர் கள் உடனிருந்தனர்.
 

திருச்செந்தூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் ஏலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தகவல்

Print PDF
தினகரன்            11.03.2013

திருச்செந்தூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் ஏலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தகவல்


திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பிடித்து ஏலம் விடப்படும் என்று பேரூராட்சி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராஜையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் பாதுகாப்பின்றி சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள்,  சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சுகாதாரகேடா கவும் உள்ளது. பாதுகாப்பின்றி சுற்றித்திரியும் மாடு களை, வரும் 22ம் தேதி பிடிக்கப்பட்டு அன்று மாலை பஸ் நிலைய மாட்டுத்தாவணியில் வைத்து பகிரங்கமாக பொது ஏலத்தில் விடப்படும். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் மாடு ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி ஏலம் கேட் கலாம். கூடுதல் ஏலத்தொகை முழுவதும் செலுத்திய பின் மாடுகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க அவசரமாக பணம் செலுத்திய மக்கள்

Print PDF
தினகரன்            11.03.2013

குடிநீர் இணைப்பு துண்டிப்பு தவிர்க்க அவசரமாக பணம் செலுத்திய மக்கள்


உடுமலை: வரி நிலுவை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கஅதிகாரிகள்  வந்தனர். அதைத்தொடர்ந்து  வீட்டு உரிமையாளர்கள் அவசரம் அவசரமாக பணம் கட்டினர். உடுமலை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா கூறியதாவது:

உடுமலை நகராட்சியில் 2012-13ம் ஆண்டுக்கான வீட்டு வரி மொத்தம் ரூ.2 கோடியே 35 லட்சம். இதில் இதுவரை ரூ.2 கோடியே 23 லட்சம் வசூலாகியுள்ளது. மீதி ரூ.11 லட்சத்து 99 ஆயிரம் வசூலாக வேண்டும். குடிநீர் வரி மொத்தம் ரூ.77 லட்சத்து 81 ஆயிரம். வசூலானது 76 லட்சத்து 81 ஆயிரம். இன்னும் ரூ.1 லட்சம் வசூலாக வேண்டும்.

கடந்த ஆண்டு 100 சதவீத வசூல் இலக்கை உடுமலை நகராட்சி எட்டியது. தற்போது 99 சதவீதம்தான் வசூலாகி உள்ளது. வரும் 31ம்தேதிக்குள் வரி நிலுவையை மக்கள் செலுத்திவிட வேண்டும்.

இல்லாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
நீண்ட நாட்களாக குடிநீர் வரி கட்டாத 15 வீடுகளுக்கு இணைப்பு துண்டிக்க நகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக வரி பாக்கியை அந்த இடத்திலேயே செலுத்தினர்.
 


Page 275 of 506