Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தாரமங்கலம் பேரூராட்சியில் வரிகள் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினகரன்            11.03.2013

தாரமங்கலம் பேரூராட்சியில் வரிகள் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


தாரமங்கலம்: தாரமங்கலம் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தாரமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சியில் குடிநீர், தெருவிளக்குகள் அமைத்தல், சாலை மற்றும் கழிவு நீர் வடிகால்கள் அமைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டி உள்ளது. எனவே, பொதுமக்கள் 31.3.13 முடிய செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை கட்டணம், உரிம கட்டணம் மற்றும் ஏலத்தொகை ஆகியவற்றை வரும் 15.3.13ம் தேதிக்குள் கட்ட வேண்டும்.

தவறினால் குடிநீர் குழாய் துண்டிக்கப்படும் மற்றும் ஜப்தி நடவடிக்கை உட்பட சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தலைவர் பாலசுந்தரம், செயல் அலு வலர் பெரியசாமி ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.
 

தண்ணீர் வீணானால் லாரி ஓட்டுனருக்கு அபராதம்

Print PDF
தினமலர்                 11.03.2013
 
தண்ணீர் வீணானால் லாரி ஓட்டுனருக்கு அபராதம்


சென்னை:நீர்தேக்க தொட்டி நிலையங்களில், லாரியில் தண்ணீர் நிரப்பும்போது, கவன குறைவாக இருக்கும் ஓட்டுனர் மீது அபராதம் விதிக்கப்படும் என, குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடைக் காலம் நெருங்கி விட்டதால், தண்ணீர் தேவை அதிகரிக்கும்.

சென்னையில், குடிநீர் வாரிய வாகனங்கள் மற்றும் ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்தேக்க தொட்டி நிலையங்களில் இந்த லாரிகள் நிரப்பப்படுகின்றன.
அப்போது லாரி ஓட்டுனர் மற்றும் அவர்களது உதவியாளர்களின் கவன குறைவால் தண்ணீர் வீணாவது தொடர்கிறது.

அதை தடுக்கும் பொருட்டு, கவன குறைவாக செயல்படும் ஓட்டுனர் மீது அபராதம் விதிக்க குடிநீர் வாரியம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து, நீர்தேக்க தொட்டி நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில்,

  • தண்ணீர் நிரப்பும் போது, குழாய் வால்வுகள் சரியாக மூடப்படவில்லை என்றால்...
  • லாரியில் உள்ள வால்வுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால்... 
  • குழாய் வால்வை திறந்து கை, கால் கழுவுதல், குளித்தலில் ஈடுபட்டால்...
  • தண்ணீர் நிரப்பும் குழாயில் பொருத்தப்பட்டுள்ள தொங்கு குழாயை அகற்றினால்...
  • உதவியாளரை (கிளீனர்) வைத்து லாரி ஓட்டினால்...

சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு 100 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, குறிப்பிடப்பட்உள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""லாரியில் தண்ணீர் வீணாவதை பொதுமக்கள் பார்த்தால், மண்டல பகுதி பொறியாளரிடம் புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.
 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்

Print PDF
தினமணி         11.03.2013

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்


கோபியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோபி நகராட்சியில் 40 மைக்ரானுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், நகராட்சி ஆணையாளர் ஜான்சன் உத்தரவின்பேரில், சுகாதார அதிகாரி ராம்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

கோபியில் தினசரி மார்க்கெட் ரோடு, யாகூப் வீதி, புகழேந்தி வீதி, கடைவீதி மளிகைக் கடைகள் ஆகிய பகுதிகளில் இந்தக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இதில், 50 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 


Page 276 of 506