Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சுகாதாரப் பணி:ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க முடிவு

Print PDF
தினமணி         05.03.2013

சுகாதாரப் பணி:ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க முடிவு

பல்லடம் நகராட்சியில் பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள 87 பேரை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதார பிரிவுக்கு போதிய நிரந்தர பணியாளர்கள் இல்லாததால், ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளர்கள் நியமிக்க பல்லடம் நகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.175-ம், கனரக வாகன ஒட்டுநர்களுக்கு தினக்கூலியாக ரூ.245-ம் வழங்கப்பட உள்ளது.

80 துப்புரவு பணியாளர்கள், 7 கனரக வாகன ஒட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கு பொது நிதியில் இருந்து ரூ.56 லட்சம் சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை: ஆணைய

Print PDF
தினமணி         05.03.2013

மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை: ஆணைய


சிதம்பரம் நகராட்சி குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால், இணைப்பு துண்டிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி: நகராட்சி குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்துவது சட்டப்படிக் குற்றமாகும்.

அவ்வாறு யாரேனும் மின் மோட்டார் பொருத்தியிருந்தால் உடனே அகற்றிவிடவும். அகற்றாவிடில், நகராட்சி அலுவலர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்.

அத்துடன் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடரப்படும் என ஆணையர் ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
 

குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி "கெடு'

Print PDF
தினமலர்          04.03.2013

குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி "கெடு'


சென்னை:"குடிநீர் வரி, கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை, இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்' என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:

நடப்பு நிதியாண்டுக்கான (2012-13), இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களையும், மேல் வரி இல்லாமல் இம்மாத இறுதிக்குள், செலுத்த வேண்டும். வரியையும், கட்டணத்தையும் தலைமை அலுவலகம், பணிமனை வசூல் மையங்களிலும் வரியை செலுத்தலாம். இந்த வசூல் மையங்கள், மார்ச் 24, 31ம் தேதிகளான, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Last Updated on Monday, 04 March 2013 11:36
 


Page 280 of 506