Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைக்கு தடை மீறினால் அபராதம்

Print PDF
தினகரன்            06.09.2012

40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைக்கு தடை மீறினால் அபராதம்

தா.பேட்டை, : முசிறி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

முசிறி பேரூராட்சி பகுதிகளில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக், தூக்கு பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் விரிப்புகள் போன்ற பொருட்களை கடைகள் மற்றும் பொது இடங்களில் வியாபாரிகள் மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது.

இதனை மீறி வியாபாரிகள் விற்பனை செய்தாலும், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்காத கடைகளுக்கும் முதல் எச்சரிக்கையாக ரூ.250ம், 2வது முறைக்கு ரூ.500ம், 3வது முறைக்கு ரூ.1000ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கினால் முறையே ரூ.100, ரூ.200, ரூ.500 என அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி தொடர்ந்து செயல்பட்டால் கடைகளில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும், வியாபாரிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அபராதத்தொகை வசூலிக்கப்படும்.
 

காயல்பட்டினத்தில் ஆய்வு: 6 மின்மோட்டார்கள் பறிமுதல்

Print PDF
தினமணி                    06.09.2012

காயல்பட்டினத்தில் ஆய்வு: 6 மின்மோட்டார்கள் பறிமுதல்

ஆறுமுகனேரி, செப். 5: காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில், குடிநீர் இணைப்புகளில் பொருத்தப்பட்டதாக 6 மின்மோட்டார்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காயல்பட்டினம் நகர்மன்றம் சார்பில், குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், குடிநீர் விநியோகக் குழாய் பொருத்துநர் நிஸôர் உள்ளிட்டோர் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, காயல்பட்டினம் மேலப்பள்ளி தெருவில் விதிமீறி பொருத்தப்பட்டிருந்த 4 மின்மோட்டார்களும், பெரிய நெசவுத் தெருவில் 2 மின்மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல்

Print PDF
தினமணி                    06.09.2012

வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல்

திருத்தணி, செப். 5: நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு 12 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் 6 கடைகளுக்கு, ஆணையர் கே. பாலசுப்பிரமணியம் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை சீல் வைத்தார்.

÷திருத்தணி பஸ் நிலையம் அருகே உள்ள சன்னதி தெருவில் உள்ள 7 கடைகள் நகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானவை.

÷இந்த கடைகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. ஏலக்கெடு முடிந்தவுடன் புதிதாக ஏலம் அல்லது புதுப்பிக்கப்படும்.

÷இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக தீனதயாளன், வெங்கடேசன் முருகேச ரெட்டி, ஜான்மாவீர் சந்திரன் மற்றும் மணி ஆகிய 6 கடைக்காரர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். இதையெடுத்து நகராட்சி நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்துமாறு 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

÷கடந்த ஒரு வாரத்துக்கு முன் சட்டப்பூர்வமாக இறுதி நோட்டீஸ் அனுப்பியும் நிலுவைத்தொகை செலுத்தாததால் புதன்கிழமை பிற்பகல் நகராட்சி ஆணையர் கே. பாலசுப்பிரமணியம், நகராட்சிப் பொறியாளர் எஸ். சண்முகம், சுகாதார ஆய்வாளர் இ. லஷ்மிநாராயணன், பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் ஜெ. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீஸôருடன்  சென்று வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

÷இது குறித்து நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறும்போது: சீல் வைக்கப்பட்டுள்ள 6 கடைகளுக்கான வாடகை ரூ.5 லட்சம் நிலுவையில் உள்ளது. பலமுறை நிலுவைத்தொகை செலுத்த அறிவுறுத்தியும் காலம் தாழ்த்தியதால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

÷இந்த 6 கடைகளுக்கும் நகரமன்ற உறுப்பினர்கள் அனுமதியுடன் 45 நாள்களுக்குள் மறு ஏலம் விடப்படும்.

÷இந்த ஆண்டு மட்டும் ரூ.60 லட்சம் வரி நகராட்சிக்கு வரவேண்டியுள்ளது. பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை உரிய நேரத்தில் செலுத்தினால்தான் நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.
 


Page 285 of 506