Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகர 65 வார்டுகளிலும் மக்களின் புகார் மனுவுக்கு நேரில் சென்று நடவடிக்கை அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

Print PDF

தினகரன்      04.09.2012

மாநகர 65 வார்டுகளிலும் மக்களின் புகார் மனுவுக்கு நேரில் சென்று நடவடிக்கை அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

திருச்சி, : மாநகரின் 65 வார்டுகளிலும் மக்கள் தரும் புகார் மனுவை நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பாதை ஆக்ரமிப்பு, சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், தெருவிளக்கு சீரமைப்பு, சாக்கடை தூர் வாருதல், கழிப்பிட பராமரிப்பு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெயா, குடிநீர் பற்றாக்குறையை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். புகார் வரும் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநகர பொறியாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் அருணாச்சலம், நகர் நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

கடைகளை காலி செய்யக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன்      04.09.2012

கடைகளை காலி செய்யக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை, : கடைகளை காலி செய்யக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கோவை ஆர்.எஸ்.புரம் மேட்டுப்பாளையம் ரோட்டில் மாநகராட்சி சார்பில் பூ மார்க்கெட் நடத்தப்படுகிறது. இங்கு, 60க்கும் மேற்பட்ட வியாபாரிகள் டெண்டர் எடுத்து கடைகளை நடத்தி வருகின்றனர். 40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முறைப்படி டெண்டர் எடுக்காமல் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இது, மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தியும் பலனில்லை.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பூமார்க்கெட் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ரூ.3 கோடி செலவில் புதிதாக நவீன பூ மார்க்கெட் வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பூ வியாபாரிகள் இடம்பெயர்ந்து செல்லும்படி மாநகராட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டு, கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டுகள் பல கடந்துவிட்ட பிறகும் இதுவரை யாரும் புதிய வளாகத்துக்கு செல்லவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற மாநகர மேம்பாட்டு குழு கூட்டம் நடந்தது. இதில், பூமார்க்கெட் வியாபாரிகளை பழைய இடத்திலிருந்து காலிசெய்து, புதிய இடத்துக்கு இடமாற்றம் செய்யவைப்பது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதை அமல்படுத்தும் வகையில் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று முதல் பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அடுத்த 10 நாட்களுக்குள் கடைகளை இடமாற்றம் செய்யாவிட்டால் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டியது வரும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நோட்டீஸ் காரணமாக ஒருசில பூ வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி கூறுகையில், ‘‘பழைய பூமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய பூமார்க்கெட் வளாகம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு கடைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனாலும், அங்கு இடம்பெயர்ந்து செல்லாமல், தொடர்ந்து போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்து வருகிறார்கள். இனி, காலஅவகாசம் கொடுக்க முடியாது. அடுத்த பத்து நாட்களுக்குள் இடமாற்றம் செய்யாவிட்டால் காவல்துறை மூலம் அப்புறப்படுத்தப்படுவார்கள். முறைப்படி கடைகளை டெண்டர் எடுக்காத ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள்’’ என்றார்.
Last Updated on Tuesday, 04 September 2012 09:09
 

கழிவுநீரை தெருவில் விடுபவர்களுக்கு அபராதம் நகராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர்         31.08.2012

கழிவுநீரை தெருவில் விடுபவர்களுக்கு அபராதம் நகராட்சி கூட்டத்தில் முடிவு

திருவள்ளூர் : "கழிவுநீரை தெருவில் விடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, நகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சிக் கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில், நேற்று நடந்தது. ஆணையர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

திரு.வி.க., பேருந்து நிலையத்தில், 75 ஆயிரம் ரூபாய் செலவில் மின் விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட, 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

சங்கர் (தே.மு.தி.க.,): 17வது வார்டுக்குட்பட்ட முகம்மது அலி, 2, 3வது சந்துகளில் குப்பை சரியாக வாருவதில்லை. கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில், மூன்று பள்ளிக் கூடங்கள் இருப்பதால், மாணவர்கள் தெருக்களில் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். மழைக் காலத்தில், நகராட்சிப் பள்ளியில் தண்ணீர் புகுவதை தடுக்க வேண்டும்.

தலைவர் பாஸ்கரன்: உறுப்பினர் தெரிவித்த இடங்களில், குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். பள்ளியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேணுகாதேவி (அ.தி.மு.க.,): திரு.வி.க., பஸ் நிலையம் எதிரே மதுபான கடைகள் உள்ளதால், அங்கு குடித்துவிட்டு பஸ் நிலையத்துக்குள் வந்து, சிலர், கலாட்டா செய்கின்றனர். பஸ் நிலையத்துக்குள் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

ஆணையர் சரவணக்குமார்: பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு காவல் நிலையம் அமைக்கக் கோரி, மாவட்ட எஸ்.பி.,க்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

ராகவன் (அ.தி.மு.க.,): சிலர் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தெருவில் விடுகின்றனர். இதனால், சாலைகள் சேதம் அடைகின்றன.

பாஸ்கரன்: தெருக்களில் கழிவுநீர் விடுபவர்கள், கட்டுமானக் கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது, நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும்.

கலெக்டர் குடியிருப்பைத் தவிர, மற்ற அதிகாரிகளின் குடியிருப்புகள், அலுவலகங்களில் நகராட்சி துப்புரவு ஊழியர்களை பணியாற்ற அனுமதி அளிக்கக் கூடாது.இவ்வாறு விவாதம் நடந்தது.
 


Page 287 of 506