Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

லைசென்சை புதுப்பிக்காததால் சென்னையில் 39 ஆயிரம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர்   09.08.2012

லைசென்சை புதுப்பிக்காததால் சென்னையில் 39 ஆயிரம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி நடவடிக்கை

 லைசென்சை புதுப்பிக்காததால் சென்னையில் 39 ஆயிரம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, ஆக. 9-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1.6 லட்சம் கடை வியாபாரிகள் உள்ளனர். சென்னை மாநகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வணிக வரித்துறை உதவியுடன் வியாபார உரிமம் பெறாத கடைகள் பற்றிய தகவலை திரட்டியது.  
 
39 ஆயிரம் கடைக்காரர்கள் இதுவரை உரிமம் புதுப்பிக்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கடைக்காரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்புகிறது. கடந்த 2011-2012-ம் ஆண்டில் 26,662 கடை வியாபாரிகளிடம் வணிக உரிமத் தொகையாக மாநகராட்சி சில கோடிகளை வசூலித்தது. 2012-2013-ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்கும்படி மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் மாநகராட்சி அறிவிப்பை கண்டு கொள்ளவில்லை.
 
கடைக்காரர்கள் உரிமம் புதுப்பிக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கடை நடத்தும் இடத்தின் உரிமையாளர் மற்றும் கழிவு நீர் இணைப்பு தொடர்பாக குடிநீர் வாரிய சான்று பெற்றால்தான் உரிமம் புதுப்பிக்க முடியும். இவற்றை பெறுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
 

தெற்கு தில்லியில் நிரப்பப்படாத துணை, இணை இயக்குநர் பணியிடங்கள்: மாநகராட்சி கூட்டத்தில் விவாதம்

Print PDF

தினமணி         08.08.2012

தெற்கு தில்லியில் நிரப்பப்படாத துணை, இணை இயக்குநர் பணியிடங்கள்: மாநகராட்சி கூட்டத்தில் விவாதம்

புது தில்லி, ஆக. 7: தெற்கு தில்லி மாநகராட்சியின் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் "ஏ', "பி' பிரிவுகளில் துணை, இணை இயக்குநர்கள் பணி இடங்கள் காலியாக இருப்பது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் பராஹத் சூரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆணையர், மாநகராட்சியின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தகவல் தெரிவித்தார்.

மாநகராட்சி கல்வித் துறையில் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் (பொது), துணை இயக்குநர் (பொது), துணை இயக்குநர் (நர்சரி) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாநகராட்சி சட்ட அலுவலர், இணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை), கூடுதல் இயக்குநர் (தோட்டக் கலைத்துறை), இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்பு), துணை இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்பு) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார்.மாநகராட்சி மக்கள் தகவல் தொடர்பு அதிகாரியாக முகேஷ் யாதவ் நியமிக்கப்பட்டது குறித்து பேசிய பராஹத் சூரி, "தகவல் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்படுபவர் இதழியல் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மக்கள் தொடர்புப் பணியில் நாளேடு, செய்தி ஏஜென்சி, அரசுத் துறை செய்திப் பிரிவில் பத்து ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும்.தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் முகேஷ் யாதவ் இந்த பணிக்குத் தகுதியானவர் இல்லை' என்று புகார் கூறினார்.

தில்லி மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அந்த இடங்களில் தாற்காலிக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.1,000 அபராதம்: நகராட்சிக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி                 01.08.2012

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.1,000 அபராதம்: நகராட்சிக் கூட்டத்தில் முடிவு

காஞ்சிபுரம்,  ஜூலை  31: தமிழக  அரசால்  தடை   செய்யப்பட்டுள்ள  பிளாஸ்டிக்  பைகளைப் பயன்படுத்தும்  கடைகளுக்கு  ரூ. 1,000  அபராதம்  விதிப்பது  என  காஞ்சிபுரம்  நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம்  நகர்மன்றக்     கூட்டம்   தலைவர்   மைதிலி   திருநாவுக்கரசு    தலைமையில் திங்கள்   கிழமை  நடந்தது.  துணைத்  தலைவர்  ஆறுமுகம்,  நகராட்சி   ஆணையர்   விமலா, பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.

தீர்மானங்கள்: காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 40 மைக்ரான் அளவுக்குக் குறைவாக உள்ள  பிளாஸ்டிக்   பொருள்களான கேரி பேக்,  டம்ளர்கள்  உள்ளிட்டவற்றைப்   பயன்படுத்தக் கூடாது   எனத்  தமிழக  அரசு  தடை  செய்துள்ளது. எனவே   காஞ்சிபுரம் நகராட்சிக்கு   உள்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்குக் குறைவாக உள்ள  பிளாஸ்டிக் பொருள்கள்  பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. ÷ஹோட்டல்கள், டீக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டகடைகளில் 40 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை  உபயோகப்படுத்தினால்  ரூ.1,000 அபராதம்  விதிக்கப்படும்.  பொது  மக்கள்  பயன்படுத்தினால் ரூ.100  அபராதம்  விதிக்கப்படும் என்பது உள்பட 54 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

 


Page 291 of 506