Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சொத்து வரி பாக்கியை வசூலிக்க ஜப்தி நடவடிக்கை

Print PDF
தினமலர்       11.01.2011

சொத்து வரி பாக்கியை வசூலிக்க ஜப்தி நடவடிக்கை


பாரிமுனை : பல ஆண்டுகளாக சொத்து வரி கட்டாத, கட்டடங்களில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டடங்கள், மனைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும், சொத்து வரியை கட்டாமல் ஆயிரக்கணக்கானோர் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். வரி கட்ட டிசம்பர் வரை அவகாசம் கொடுத்தும், செல்வாக்கை பயன்படுத்தி வரி கட்டாமல் இழுத்தடித்து வருகின்றனர்.வரி பாக்கியை பாரபட்சமின்றி வசூலிக்கவும், குறிப்பிட்ட வரையறைக்குள் செலுத்தாதவர்களுக்கு வட்டியுடன் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரி கட்டாதவர்கள் மற்றும் மாநகராட்சியின் அறிவிப்புகளுக்கு உரிய பதில் தராதவர்களின் கட்டடங்களில் உள்ள, பொருட்களை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் சென்னையிலுள்ள, 10 மண்டலங்களிலும் வரி பாக்கி உள்ளவர்களுக்கு, 15 நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நோட்டீஸ் பெற்று பணம் கட்டாதவர்களின் இடங்களுக்கு, அதிகாரிகளின் தனிப்படை சென்று ஜப்தி நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.இரண்டாவது மண்டலத்தில் மட்டும் 153 பேர், 10 கோடி ரூபாய் அளவில் வரிப் பாக்கி வைத்துள்ளனர். பாரிமுனை 28வது வார்டுக்குட்பட்ட சுங்கு ராம செட்டி தெருவில், தனியாருக்கு சொந்தமாக உள்ள ஒரு கட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக, சொத்து வரி கட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மண்டல அதிகாரி பூமிநாதன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் உட்பட தனிப்படை அதிகாரிகள், நேற்று வரி கட்டாத கட்டடத்தில் உள்ள பொருட்களை ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.இதனால் வாடகை கடைகாரர்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜப்தி செய்யவிடாமல் அதிகாரிகளை தடுத்தனர். பின், கட்டட உரிமையாளர் சார்பில், வரி பாக்கி தொகைக்கான வங்கி வரைவோலை கொடுத்ததால், ஜப்தி நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர். மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

க.புதுப்பட்டி பேரூராட்சி எச்சரிக்கை : பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

Print PDF

தினகரன்        10.01.2011

க.புதுப்பட்டி பேரூராட்சி எச்சரிக்கை : பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை

உத்தமபாளையம், ஜன.10:

க.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.

க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

க.புதுப்பட்டி பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம், பேரூராட்சி தலைவர் கண்மணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வரதராஜ் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்ட முடிவுகள் குறித்து நிர்வாக அதிகாரி குணசேகரன் கூறுகையில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும். சாக்கடைகளில் கழிவுகள், பாலித்தீன் பைகளை கொட்டுவதாலும் இலைக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதாலும் துர்நாற்றம், தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது.

எனவே, வீடுகளில் வெளியேற்றப்படும் குப்பை, இலைகள், காய்கறி கழிவு, சாம்பல், கட்டிட இடிபாடுகள், உரிய வகையில் பாதுகாத்து பேரூராட்சி குப்பை வண்டி, தள்ளுவண்டியில் கொட்ட வேண்டும். கழிவுநீரை சாக்கடையில் மட்டுமே விட வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

 

விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’ : மாநகராட்சி அதிரடி

Print PDF
தினகரன்     29.12.2010

விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’ : மாநகராட்சி அதிரடி

கோவை, டிச. 29:

கோவையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட பிரபல வணிக வளாகத்துக்கு அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது. 164 வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் பிரபல வணிக வளாகம் உள்ளது. 22 கடைகள் செயல்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன் விதிமுறை மீறல், பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கு செயல்பட இருந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இன்று வணிக வளாகத்தில் இருந்த 20 கடைகளை உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மாநகராட்சியினர் இணைந்து சீல் வைத்தனர். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, உள்ளூர் திட்ட குழும இணை இயக்குநர் மூக்கையா தலைமையில், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு செயல்பட்டு வந்த மீன் விற்பனை நிலையம், மளிகை கடை, ஆரோக்கிய பொருள் விற்பனையகம் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டன.

அங்கு ஒரு வங்கி வாட கைக்கு செயல்பட்டு வந்தது. வங்கிப்பணி முடங்க கூடாது என்பதற்காக ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டது. விரைவில் வங்கியும் மூடப்படும். இதேபோல் 3 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த கிளப் ஹவுசும் மூடப்பட்டது. சீல் வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், போலீஸ் பாதுகாப்புடன் வளாகம் மூடப்பட்டது. கடைகள் திறக்கும் முன்பே சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் கூறியதாவது:

இங்குள்ள வளாகம் 15 ஏக்கரில் உள்ளது. தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலர் இங்கே வசிக்கின்றனர். 164 பங்களா வீடுகள் அமைந்துள்ளன. 2003ம் ஆண்டு வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு கட்ட நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டப்பட்டது. மாநகராட்சி வடிகால் மீது ஒரு கட்டிடம் மற்றும் செப்டிங் டேங்க் கட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிட அமைப்பு மாறியிருக்கிறது. பிளானில் உள்ளபடி கட்டுமானம் அமையவில்லை. 164 கட்டிடமும் முழு அள வில் விதிமுறை மீறலில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது. ஒரு மாதம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பில்டிங் பிளானில் உள்ள படி கட்டிடத்தை இடித்து கட்டவேண்டும். இல்லாவிட்டால் உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சி சார்பில் கட்டிடம் இடிக்கப்படும்.
 


 
முறை மீறி கட்டப்பட்டதாக கூறி, கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டிலுள்ள வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர். ‘சீல்’ வைக்கப்பட்ட வணிக வளாகம். உள்படம்: வணிக வளாகத்துக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது. 
 


 


Page 297 of 506