Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ. 43 லட்சம் வரி பாக்கி 10 வீடு, வர்த்தக நிறுவனத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்        27.12.2010

ரூ. 43 லட்சம் வரி பாக்கி 10 வீடு, வர்த்தக நிறுவனத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

காஞ்சிபுரம், டிச.27:

குடிநீர் வரி மற்றும் இணைப்பு கட்டணத்தை 5 ஆண்டுகளாக செலுத்தாத 10 வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகராட்சியில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் ஒரு சிலர் கடந்த 5 ஆண்டுகளாக வரி மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் ரூ. 43 லட்சம் பாக்கி வைத்திருந்தனர். அவர்களிடம் வரி மற்றும் கட்டணத்தை வசூலிக்குமாறு நகராட்சி இயக்குநரகம் உத்தரவிட்டது.

அதன்படி, நகராட்சி ஆணையர் மோகன் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், வரைவாளர் சிவா, குழாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், பொறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர், நகராட்சி பகுதியில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 10க்கும் மேற்பட்ட வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வரி மற்றும் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவற்றின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதுதொடர்பாக, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி அதிரடி நடவடிக்கை.

 

மாநராட்சி பகுதி வாக்காளர் பட்டியல்; கலெக்டர் ஆய்வு

Print PDF

தினமலர்      24.12.2010

மாநராட்சி பகுதி வாக்காளர் பட்டியல்; கலெக்டர் ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை கலெக்டர் மகேசன் காசிராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய பெற்ற படிவங்களின் பேரில், மேற்கொள்ளப்பட்ட முழு நடவடிக்கை, நீக்கம் செய்ய வரப்பெற்ற படிவங்கள் பேரில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு சார்பு செய்யப்பட்ட அறிவிப்பு. வாக்காளர்களுக்கு உரிய ஃபோட்டோவுடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக சம்பந்தப்பட்ட வாக்காளரின் கையெழுத்துடன் வழங்கிய விபரம் ஆகியவற்றை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு சட்டசபைத் தொகுதிகளுக்கு உண்டான பணிகளை மாநகராட்சி அலுவலகத்தில், திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருத்தியமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் படி, ஓட்டுச்சாவடிகளை நேரில் பார்வையிடும் வகையில், திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஐந்து ஓட்டுச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, தேர்தல் தாசில்தார் உமாபதி உடனிருந்தனர்.

 

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் : செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினமலர்      17.12.2010

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் : செயல் அலுவலர் எச்சரிக்கை


குஜிலியம்பாறை, டிச.17: பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் நாட்ராயன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார். இதையடுத்து பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர், குஜிலியம்பாறையில் உள்ள மளிகை கடை, ஓட்டல்கள், இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி, மெடிக்கல், பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் நாட்ராயன் கூறும்போது, குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கடைகளில் இதுவரை தடை செய்யப்பட்ட 380 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடைகளில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் குஜிலியம்பாறை அருகே உள்ள தனியார் சிமிண்ட் ஆலை கலனில் 1400டிகிரி வெப்பத்தில் எரிக்கப்படுகிறது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.

 


Page 298 of 506