Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஆலந்தூரில் ரூ. 34 கோடியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி உலக வங்கி குழு ஆய்வு

Print PDF

தினகரன்       16.12.2010

ஆலந்தூரில் ரூ. 34 கோடியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி உலக வங்கி குழு ஆய்வு

ஆலந்தூர், டிச. 16:

ஆலந்தூர் நகராட்சியில் மக்கள் பங்களிப்போடு ரூ34 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் வளர்ச்சிப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

மேலும் இ&கவர்ன் மூலம் தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி வசூலிக்கப்படுகிறது. இவற்றை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதற்காக 6 பேர் அடங்கிய உலக வங்கி நிதிக்குழுவினர் நேற்று ஆலந்தூர் வந்தனர்.

அவர்களை நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு, ஆணையர் மனோகர், பொறியாளர் மகேசன், நகரமைப்பு அதிகாரிகள் செம்பன், தினகரன், கணேச மூர்த்தி ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மன்ற கூடத்தில் கலந்துரையாடல் நடந்தது.

உலக வங்கி இயக்குனர் ரொபார்ட்டோ ஷாகா எழுப்பிய சந்தேகங்களுக்கு திரை மூலம் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு உள் கட்டமைப்பு நிதி நிர்வாக இயக்குனர் பணிந்தர்ரெட்டி, நகராட்சிகளின் இணை இயக்குனர் ரீட்டா தாகூர், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு கூறுகையில், “பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் வளர்ச்சி பணிகள் உலகவங்கி குழுவினருக்கு நிறைவு அளித்துள்ளது. இதை பார்வையிட ஜனவரி 13ம் தேதி உலக வங்கி தலைவரும் வருகை தர உள்ளார்” என்றார். 

 

மக்கள் குறைகளை தீர்க்க பேஸ்புக்கில் நுழைகிறது டெல்லி மாநகராட்சி

Print PDF

தினகரன்         16.12.2010

மக்கள் குறைகளை தீர்க்க பேஸ்புக்கில் நுழைகிறது டெல்லி மாநகராட்சி
புதுடெல்லி, டிச.16:

குப்பை அள்ளுதல், கழிவு நீர் போன்ற சுகாதார பிரச்னைகள் குறித்து டெல்லி மாநகராட்சிக்கு இனி பேஸ்புக் மூலம் புகார் செய்யலாம். ஜனவரி மாதம் டெல்லி மாநகராட்சிக்கென்று தனியாக ஒரு பேஸ்புக் குரூப் கணக்கு தொடங்கப்படுகிறது.

குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் கழிவுநீர் அடைப்பு போன்ற சுகாதார பிரச்னைகள் குறித்தும் மாநகராட்சியின் பேஸ்புக்கில் மக்கள் புகார் செய்யலாம். படங்களையும் இணைத்து அனுப்பலாம். இதை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஏற்பாட்டை மாநகராட்சி செய்துள்ளது. டெல்லி மாநகராட்சிக்குட்பட்டு 2500 குப்பை கூடங்கள் (தாலோஸ்) உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குப்பை கூடங்களின் பட்டியல் பேஸ்புக்கில் இடம்பெற்றிருக்கும். பட்டியலில் காணப்படும் தங்களுக்குரிய பகுதியை ‘கிளிக்’ செய்து மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். வெறும் தகவலாக மட்டும் அல்லாமல் புகைப்படங்கள், வீடியோ இணைப்பும் கொடுத்து புகார் அளிக்கலாம்.

இந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் குழு ஆட்களை அனுப்பி குறைகளை சரி செய்யும். மாநகராட்சியின் மொத்தமுள்ள 12 மண்டலங்களில் 8 மண்டலங்களின் சுகாதார பணிகளை தனியார் நிறுவனங்கள் கவனிக்கின்றன. பேஸ்புக்கில் வரும் புகார்களை உடனுக்குடன் சரி செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லி மாநகராட்சி பேஸ்புக் கணக்கை தொடங்குகிறது. சுகாதார பணிகளுக்காக பிரத்யேகமாக ஒரு மாநகராட்சி பேஸ்புக் தொடங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை’’ என்று டெல்லி மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் (பொறியியல்) அன்ஷு பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

 

பரமக்குடி நகராட்சியில் வரி கட்டாத 2 கடைகளுக்கு சீல்

Print PDF

தினகரன்            15.12.2010

பரமக்குடி நகராட்சியில் வரி கட்டாத 2 கடைகளுக்கு சீல்

பரமக்குடி, டிச. 15: பரமக்குடி நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி செலுத்தாத 2 கடைகளுக்கு நேற்று கமிஷனர் அட்சயா சீல் வைத்தார்.

பரமக்குடியில் வணிக நிறுவனங்கள், குடியிருப்பு வீடுகளுக்கான 2010&11 ஆண்டிற்கான சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் நகராட்சி நிர்வாகம் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சொத்துவரி ரூ110.74 லட்சம், காலியிடவரி ரூ6.74 லட்சம், தொழில்வரி ரூ41.81 லட்சம், குடிநீர் கட்டணம்

ரூ70.51 லட்சம், குத்தகை இனங்கள் ரூ20.13 லட்சம் என ரூ3 கோடியே 9 லட்சத்து 93 ஆயிரம் பாக்கி உள்ளது. வரிநிலுவை உள்ள நபர்கள் விரைவில் தாங்களாகவே வந்து பணத்தை கட்டி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதையும், ஜப்தி நடவடிக்கையும் தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் 2006&11 வரை வரி பாக்கியுள்ள மாப்பிள்ளை சாமி என்பவரின் பெயரில் உள்ள 2 கடைகளை நேற்று கமிஷனர் அட்சயா போலீசார் உதவியுடன் சீல் வைத்தார். ஒரு கடையில் ரூ1 லட்சத்து 19 ஆயிரத்து 280 வரிபாக்கியும், மற்றொரு கடையில் ரூ86 ஆயிரத்து 660 வரிபாக்கியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கமிஷனர் அட்சயா கூறுகையில், "குத்தகை வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்து மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் கட்டாத நபர்களின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இதுவரை குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள 40 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தற்போது வரிபாக்கியுள்ள கடைகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

 


Page 300 of 506