தினமணி 09.12.2010
சாலையில் குழி தோண்டுபவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
பெங்களூர், டிச. 8: சாலையில் தோண்டிய குழியை, மூடாமல் இருந்தால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சித்தையா எச்சரித்தார்.
சாலைகளில் குழி தோண்டி குடிநீர் குழாய், கேபிள் போன்றவைகளை பதித்துவிட்டு சரியான முறையில் மூடாமல் விட்டு விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, சாலைகளில் குழி தோண்டி சரியான முறையில் அடைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
÷செவ்வாய்க்கிழமை நகர மேற்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்ட அவர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாய்களை புதைத்து பிறகு அதை சரியாக அடைக்காமல் இருந்ததை பார்த்தார்.
பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் அதிக அளவில் வருவதாக தெரிவித்த அவர், இது போன்று சாலைகளில் குழிதோண்டி சரியாக அடைக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.