Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கனமழையால் கடும் பாதிப்பு சேத மதிப்பீடு தயாரிக்கிறது மாநகராட்சி நிர்வாகம்

Print PDF

தினகரன்              06.12.2010

கனமழையால் கடும் பாதிப்பு சேத மதிப்பீடு தயாரிக்கிறது மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர், டிச.6: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறது திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம். கனமழையால் சேதமடைந்த சாலை, சாக்கடைகளை சீரமைக்க சிறப்பு நிதி கோரவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாநகர பகுதியில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 21, 22வது வார்டு உள்ளிட்ட பல வார்டுகளில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் மாநகரில் பெய்த இந்த கனமழை காரணமாக பல சாலைகள் சேதமடைந்தன.

மாநகரில் வெள்ள சேதம் குறி த்து ஆய்வு மேற் கொள்ள அரசு உத்தரவிட் டது. அதன் படி தற்போது தனிக்குழு அமைக்கப்பட்டு, மழை சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அரசிடம் சமர்பிக்கப்பட்டு சேதமடைந்த சாலை கள், சாக் கடை கால்வாய் களை சீரமைக்க சிறப்பு நிதி கோர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர் பாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமியிடம் கேட்டபோது, ‘’திருப்பூரில் கனமழையால் சேதமடைந்த விவரங்கள் சேகரி க்கப்பட்டு வருகிறது. அதன் படி, மாநகரில் சாலை, சாக்கடைகள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இது தொட ர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், இவற்றை சீரமைக்க அரசிடம் நிதி கோரப்படும். இது தொடர் பான விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்," என்றார்.

 

தினகரன் செய்தி எதிரொலி வரி வசூலுக்கு கூடுதல் பணியாளர்கள் ஆணையர் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன்             06.12.2010

தினகரன் செய்தி எதிரொலி வரி வசூலுக்கு கூடுதல் பணியாளர்கள் ஆணையர் அதிரடி நடவடிக்கை

உடுமலை,டிச.6:உடுமலை நகராட்சியில் ஊழியர் பற்றாகுறையால் வரிவசூல் மந்தமாக உள்ளது. தினகரன் நாளிதழில் வெளி வந்த இச் செய்தியால் வருகிற 15ம் தேதிக்குள் வரி முழுவதையும் வசூல் செய்ய கூடுதல் பணியாளர்களை நியமித்து ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 15ம் தேதிக்குள் சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்ட ணம், நகராட்சி கடை வாடகை , லைசன்ஸ் கட்டணங்கள் ஆகியவற்றை உடுமலை நகராட்சி கனிணி மையத்தில் செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டி ப்பு போன்ற நடவடிக்கை யை தவிர்க்க வேண்டுமென ஏற்கனவே நகராட்சி சார் பில் அறிவிக்கப்பட்டிருந் தது. ஆனால் வரி வசூலில் மந்த நிலை காணப்பபடுவதால் நகராட்சி ஆணை யாளர் சுந்தராம்பாள் ஒரு அறிக்கை வெளியிட்டுள் ளார். அதன் விவரம்:

சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வசூல் மையம செயல்படும். அதற்கு பின்னும் வரியினங்களை செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும். சொத்து வரி செலுத்தாத வீடுகள் சீல் வைத்து ஜப்தி செய்யப்படும், காலியிடங் கள் நகராட்சி வசம் எடுத் துக் கொள்ளப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகராட்சி வரி வசூல் பிரிவில் முன்பு 10 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் வீடு, வீடாக சென்று விரைவில் வரி இனங்களை வசூல் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு 8 ஊழியர்கள் இல்லை.

2 பேர்களே இப்பணியில் ஈடுபட்டுள்ளனர், இதுவே வரி வசூல் மந்தத்திற்கு முக்கிய காரணம். மேலும் வரி வசூலுக்காகவே கம்ப்யூட்டர் வசதியுடன் ஒரு வாகனம் வாங்கப்பட்டது. அது இயக்கப்படாமல் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை என்றால் என்ன நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இச்செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளி வந்தது.

அதன் எதிரொலியாக ஆணையர் சுந்தராம்பாள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஊழியர் பற்றாகுறை காரணமாக வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. வரி வசூல் இலக்கு ரூ.1.5 கோடி உள்ளதால் அதை வசூலிக்க கூடுதல் ஊழியர்களை நியமித்துள் ளார்.

பொதுப்பிரிவில் 5அலு வலர்கள், வருவாய் அலுவலர்கள் 2 பேர், சுகாதார மேஸ்திரிகள் 4 பேர், மேல்நிலைத்தொட்டி காவலர்கள் மற்றும் பொறியாளர்கள் 10 பேர், சமுதாய மகளிர் சுயஉதவி குழு அமைப்பாளர்கள் 2 பேர், கனிணி துறையினர் 2 பேர் என அனைவரும் வரி வசூ லில் ஈடுபட வேண்டும். விடுமுறை நாட்களிலும் இவர்கள் வரிவசூல் பணி யில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

புளியங்குடியில் வரி செலுத்தாத 2 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Print PDF

தினமலர்        03.12.2010

புளியங்குடியில் வரி செலுத்தாத 2 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

புளியங்குடி : புளியங்குடி பகுதியில் குடிநீர் இணைப்பு வரி செலுத்தாத இரண்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தமிழகத்தில் குடிநீர் வரி, சொத்துவரி வசூல் மந்தமான நிலையில் இருப்பதால் வரி வசூலை தீவிரப்படுத்துமாறு நகராட்சிகளின் மண்டல இயக்குநருக்கு தமிழக அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து புளியங்குடி நகராட்சி பகுதியில் அக்டோபர் 2010 வரை உள்ள அரை ஆண்டுக்கான குடிநீர்வரி மற்றும் சொத்துவரி செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மேற்கொள்ளப்படுமெனவும் நகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புளியங்குடி நகராட்சி பகுதியில் உள்ள சுமார் 8 ஆயிரத்து 200 இணைப்புகளில் வரிவசூல் மந்தமாக இருந்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தாத இரண்டு இணைப்புகளை துண்டித்தனர். அப்போது பொறியாளர் முகம்மது ஷெரீப், வருவாய் ஆய்வாளர் கரீம், ஓவர்சியர் மைதின் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 308 of 506