Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லை மாநகரப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர் ஆலோசனை

Print PDF

தினமலர்                   03.12.2010

நெல்லை மாநகரப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர் ஆலோசனை

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி பகுதியில் தொடர் மழை பெய்து வருதால் எடுக்கவேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்கள், சுகாதார அலுவலர்களுடன் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாநகராட்சி பகுதியில் தொடர் பருவமழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் பரவும் நோய்களை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கமிஷனர் சுப்பையன் தலைமையில் நடந்தது.

மழைக்காலங்களில் பரவும் தொற்றுநோய் பற்றிய விபரங்களை அதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் களப்பணியாளர்கள் அந்தந்த பகுதி மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ரோடுகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வடியவைக்கவேண்டும். காலிமனைகளில் வெளியேற வழியின்றி தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் பரவாமல் இருக்க எண்ணெய் பந்துகள் போடவேண்டும். டயர், சிரட்டை, காலிடப்பா, பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றால் நீர் தேங்காமல் கவிழ்த்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. வீடு வீடாக சென்று நீர் சேமிப்பு தொட்டிகளில் டெமிபாஸ் கரைசல் ஊற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொசுக்களை கட்டுப்படுத்த கொசுப்புகை மருந்து அடிக்கவும், நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கவும் அதிகாரிகளுக்கு கமிஷனர் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர் பிர்தௌசி, சாந்தாமணி, தமிழரசி, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, கலியன் ஆண்டி, முருகேசன், அரசகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு "சீல்'

Print PDF

தினமலர்                02.12.2010

அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு "சீல்'

சேலம்: ""சேலம் மண்டலத்தில் அனுமதியின்றியும், விதிமுறைக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ள 80 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,'' என்று நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார். சூரமங்கலத்தில் உள்ள மண்டல நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகராட்சி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு கட்டிடம், பல மாடி கட்டிடம், மனைப்பிரிவு, தொழிற்சாலை கட்டிடம் ஆகியவற்றுக்கு அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கான பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில், நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ் பன்சால் குமார், கட்டிட அனுமதி பெறுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர் திட்டக்குழுமத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு முதல் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதில், உள்ளூர் திட்ட குழுமத்துக்கு உட்படாத பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு குடிநீர் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்க முடியாது. நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு மாநகராட்சியில் அங்கீகாரம் வழங்கப்படும். அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மண்டல அலுவலகம் மற்றும் இணை இயக்குனர் அலுவலகம் மூலம் அனுமதி பெறலாம். சேலம் மண்டலத்தில் அனுமதியின்றியும், விதிமுறைக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ள 80 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய பகுதியில் உள்ள லே-அவுட் குறித்த விவரங்களுக்கு தனி "வெப் சைட்' துவங்கப்பட்டுள்ளது.

சேலம் மண்டலத்திலும் லே-அவுட் குறித்த விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள புதிய வெப்சைட் துவங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் புது வெப்சைட் துவங்கப்படும். வீட்டுமனைக்கான லே-அவுட் வேண்டுமானால் பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் 200 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மலைப்பகுதியில் 250 சதுர அடிக்குள் கட்டிடம் கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 250 ல் இருந்து 300 சதுர அடிவரை கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரிடமும், 300 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்ட மாநில இயக்குனர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புக்களில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க முடியும். எனவே, கட்டிட உரிமையாளர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும். இவ்வாறு கூறினார். நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் நாகராஜன், சேலம் உள்ளூர் திட்ட குழும உறுப்பினர் செயலர் வாழவந்தான் உடனிருந்தனர்.

 

பக்கிள் ஓடை, பாதாளசாக்கடை பணி சென்னை உயர் அதிகாரி திடீர் ஆய்வு

Print PDF

தினமலர்             02.12.2010

பக்கிள் ஓடை, பாதாளசாக்கடை பணி சென்னை உயர் அதிகாரி திடீர் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடந்து வரும் பக்கிள் ஓடை மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை சென் னை உயர் அதிகாரி நேற்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட பணிகளுக்கும் அரசு பணம் அனுமதி வழங்கியுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகளும் நிறைவு பெ றும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த பணிகளை பார்வையிட சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாச்சலம் நேற்று தூத்துக்குடி வந்தார். பக்கிள் ஓடை மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கும் பல்வேறு இடங்களை பார்வையிட்டார். குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுரை வழங்கினார். மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், இளநி லை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் திண்டுக்கல்லில் நடக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள சென்றார். இதற்கிடையில் தூத்துக்குடியில் மழையினால் முக்கிய ரோடுகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பள்ளம் எங்கு இருக்கிறது. மேடு எங்கு இருக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் உருவாகியுள்ள திடீர் பள்ளங்களில் மாநகராட்சி மூலம் சரள் போட்டு தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நின்ற பிறகு அரசு அனுமதித்துள்ள 20 கோடி ரூபாயில் ரோடு போடும் பணி துவங்கும் என்று கூறப்படுகிறது.

 


Page 309 of 506