Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோழி கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய வியாபாரிக்கு அபராதம்

Print PDF

தினகரன்             30.11.2010

கோழி கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய வியாபாரிக்கு அபராதம்

கூடலூர், நவ.30: தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லிங்கரை பகுதியில் இரவு நேரத்தில் கோழி கழிவுகளை கொட்டி கோழி இறைச்சி வியா பாரியை பிடித்து பேரூ ராட்சி தலைவரிடம் ஒப்படைத்தனர்.

தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கோழி கழிவுகளை கொட்டி செல்வதால் தூர்நாற்றம் வீசவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் கோழி இறைச்சி வியாபாரிகளை அழைத்து அவர்களிடம் ஆலோசனை நடத்தி ஒவ்வொரு வியாபாரியும் தனது சொந்த பொறுப்பில் பேரூராட்சிக்கு சுகாதார சீர்கேடு விளைவிக்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கல்லிங்கரை பகுதியில் கோழி கழிவுகளை கொட்டிய கூட லூர் 2வது மைல் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்து வரும் அசன் குட்டி என்பவரை பொதுமக்கள் இரவு நேரத்தில் பிடித்து பேரூராட்சி தலைவி கலைச்செல்வி, துணை தலைவர் அனீபா, வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் தேவர் சோலை போலீசிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். மீண்டும் இதுபோல் நடந்து கொண்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர். பேரூராட்சி சார்பிலும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

 

நகரில் ரோட்டோரம் குப்பை கொட்டக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமலர்                29.11.2010

நகரில் ரோட்டோரம் குப்பை கொட்டக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை: "புதுக்கோட்டை நகரில் குப்பைகளை ரோட்டோரமாக கொட்டி வைப்பதை தவிர்க்கவேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என உணவகங்கள் மற்றும் வணிகவளாக உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால் துப்புரவுப் பணிகள் முடங்கியுள்ளது. இதன்காரணமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் மற்றும் கழிவுகள் மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே நகரில் பெய்துவரும் பலத்த மழையினால் கழிவுப் பொருட்கள் மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வரத்துவாரிகள் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளது. மழை தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் ரோடுகளில் நாள்கணக்கில் தேங்கியுள்ளது.

இதுபோன்று கணேஷ்நகர், போஸ்நகர், காமராஜபுரம், பூங்காநகர், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளையும் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழைத்தொடர்ந்து பெய்துவரும் நிலையில் நகரில் வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது. முதற்கட்டமாக ஹோட்டல்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வீதிகளிலும், ரோட்டோரங்களிலும் கொட்டுவதை தவிர்த்து அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. இதையும் மீறி பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது தெரியவந்தால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியை பொறுத்தமட்டில் "தூய்மைப் புதுகை' திட்டம் செயல்பாட்டில் இருந்தபோது நகரில் துப்புரவுப் பணிகள் தங்குதடையின்றி முறையாக நடந்தது. துப்புரவுப் பணியாளர்கள் வீடுகள் மற்றும் கடைகள்தோறும் சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர். தற்போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் துப்புரவுப் பணிகளும் முடங்கியுள்ளது. வீடுகள் மற்றும் கடைகள்தோறும் சென்று குப்பைகள் சேகரிப்பதை துப்புரவுப் பணியாளர்கள் தவிர்த்துவருகின்றனர். இதுவே நகரில் திரும்பும் இடமெல்லாம் குப்பைகள் மலைபோல் குவிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, புதுக்கோட்டையில், "தூய்மை புதுகை' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, மக்கள் தொகைக்கேற்றவாறு கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை பணியமர்த்தவும் நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என நகர்ப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

 

அனுமதியற்ற கட்டிடங்கள் விவகாரம் லஞ்ச அதிகாரிகள் 530 பேர் மீது இலாகாபூர்வமாக நடவடிக்கை

Print PDF

தினகரன்            29.11.2010

அனுமதியற்ற கட்டிடங்கள் விவகாரம் லஞ்ச அதிகாரிகள் 530 பேர் மீது இலாகாபூர்வமாக நடவடிக்கை

புதுடெல்லி, நவ. 29: அனுமதியற்ற கட்டிட விவகாரம் தொடர்பாக தவறிழைத்த மாநகராட்சி அதிகாரிகள் 530 பேர் மீது கடந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு டெல்லியின் லலிதா பார்க் பகுதியில் 5 மாடி கட்டிடம் கடந்த 15ம் தேதி இடிந்து விழுந்து 70 பேர் பலியாயினர். இதில், 2 மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. அனுமதியற்ற கட்டிடங்களை கண்டுபிடித்து தடுக்கத் தவறிய மாநகராட்சிதான் 70 பேர் பலியாகக் காரணம் என்று மாநில அரசு குற்றம்சாட்டியது.

மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) ஜெ.கே.சர்மா, "ஓட்டல் மெனு கார்டு போல கட்டிடத்தின் உயரத்திற்கேற்ப மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அனுமதியற்ற கட்டிடங்களை கட்ட அனுமதித்தார்கள்" என்று குற்றம் சாட்டினார். பா..வின் ஜெக்தீஷ் மேம்கெய்ன் என்ற கவுன்சிலர், "மாநகராட்சியின் கட்டிடத் துறையில் லஞ்சம் கரைபுரண்டு ஓடுவது பற்றி நானும் நீண்ட காலமாக பிரச்னை எழுப்பி வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

ஆனால் மாநகராட்சி ஆணையர் மெஹ்ரா கூறும்போது, "கட்டிடங்கள் துறையில் லஞ்சம் இருப்பதாக பொத்தாம் பொதுவாக கூறுவது நியாயமல்ல. அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக யார் மீது புகார் வந்தாலும் அதுபற்றி விசாரிக்கப்பட்டு இலாகாபூர்வ நடவடிக்கையோ அல்லது இதர அவசியமான நடவடிக்கையோ எடுக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

அந்த வகையில், லஞ்சம் வாங்கிக் கொண்டு, அனுமதியற்ற கட்டிடங்களை கட்டுவதற்கு ஊக்கம் அளித்த மாநகராட்சி அதிகாரிகள் பற்றிய புள்ளி விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அது வருமாறு:

2007ம் ஆண்டு முதல் 2010 நவம்பர் 15ம்தேதி வரையில் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பாக 8,030 புகார்கள்.

புகாரின் முக்கியத்துவத்தைக் கருதி, 8,030ல் 357 புகார்கள் மாநகராட்சியின் விஜிலன்ஸ் துறைக்கு அனுப்பப்பட்டது. இதில், 170 புகார்கள் மீதான விசாரணையை விஜிலன்ஸ் முடித்து விட்டது. லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதியற்ற கட்டிடங்களை கட்டுபவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி அதிகாரிகள் 533 பேர் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

சிவில் லைன்ஸ் மண்டலத்தில் மட்டும் 78 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தெற்கு மண்டலத்தில் 66 பேர் மீதும், ஷாதரா தெற்கு மண்டலத்தில் 65 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 பேர் பலியான கட்டிடம், ஷாதரா தெற்கு மண்டலத்தின்கீழ்தான் வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 


Page 312 of 506