Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அடுத்த ஆண்டு முதல் குப்பைகளை வீதியில் கொட்டினால் அபராதம்

Print PDF

தினகரன்              20.11.2010

அடுத்த ஆண்டு முதல் குப்பைகளை வீதியில் கொட்டினால் அபராதம்

நாகர்கோவில் நவ. 20: குமரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவில் நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கலெக்டர் ராஜேந்திர ரத்னூ குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் , மத நல்லிணகத்துக் கும் நேரு யுவகேந்திராவால் இங்கு நடத்தப்படுகின்ற இந்த முகாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கன்னியாகுமரி முதல் காஷ் மீர் வரை பல்வேறு மாநிலங் கள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியரே என்பதை இந்த முகாம் வலியுறுத்துகிறது. மேலும் இந்தியாவில் ,பிளாஸ்டிக் மற்றும் கழிவு இல்லாத முதல் மாவட்டமாக கன்னியாகுமரி விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுபுற சுகாதார மேம்பாட்டில் மக்கள் அனை வரும் கவனம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படாவிட்டால் இன்னும் சிறிது காலத்தில் நிலத்தில் தோண்ட தோண்ட பிளாஸ் டிக்தான் வந்து கொண்டிருக்கும். இது பெரிய ஆபத்துக்களை விளைவிக்க கூடி யது. குமரி மாவட்டத்தில் 2011 லிருந்து குப்பைகளை வீதியில் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒருமைப் பாடு,பிளாஸ்டிக் ஒழிப்பு, பூஜ்ய கழிவு மேலாண்மை முதலியவற்றை வலியுறுத்தும் கே டூ கே என்ற கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என்னும் கலை விழா நடத்தப்படும். என்றார்.

தொடர்ந்து நேரு யுவகேந்திரா நிறுவன தினத்தை முன்னிட்டு பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை , பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி அஜிதா, கோட்டார் கிளை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நாகேஷ், திருநெல்வேலி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா பள்ளி முதல்வர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்

Print PDF

தினமணி                 19.11.2010

பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்

சிவகாசி, நவ. 18: சிவகாசியில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு நகராட்சி சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு 100 மீட்டருக்கு உள்பட்ட தூரத்தில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

இந் நிலையில், சிவகாசியில் பள்ளிகளின் அருகே உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாசி நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை கடைகளில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில், பள்ளி அருகே உள்ள 7 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் 7 கடைக்காரர்களுக்கும் தலா ரூ. 200 அபராதம் விதித்தனர்.

 

நகராட்சிகள் நிர்வாக ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி           18.11.2010

நகராட்சிகள் நிர்வாக ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலை, நவ.17: திருவணணாமலை கார்த்திகை தீப விழாப் பணிகள் தொடர்பாக திருவண்ணாமலையில் நகராட்சி நிர்வாக ஆணையர் பி.செந்தில்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 9 தாற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பயணிகள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. முதலில் அப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் திருவண்ணாமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று கடலைக்கடை மூலை, செங்கம் சாலை (அரசு தலைமை மருத்துவமனை) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைசாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார். நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யவும், சாலை ஓரங்களில் தேங்கியுள்ள மணலை வாரவும் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சிகள் கூடுதல் இயக்குநர் ஜி.பிச்சை, மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணியன், ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் ஆகியோர் உடன் சென்றனர்.

 


Page 322 of 506