Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி கார் பதிவுக்கு அபராதம்: தவறு செய்தவர்களிடம் வசூலிக்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி                    11.11.2010

மாநகராட்சி கார் பதிவுக்கு அபராதம்: தவறு செய்தவர்களிடம் வசூலிக்க வலியுறுத்தல்

சேலம், நவ. 10: சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான காரைப் பதிவு செய்யத் தவறியதால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இத் தவறைச் செய்த அதிகாரிகளிடமே அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

÷இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.வேங்கடபதி வெளியிட்டுள்ள அறிக்கை:

÷சேலம் மாநகராட்சி மேயருக்கு கடந்த 2007-ம் ஆண்டு கார் வாங்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி வாங்கப்பட்ட காரை வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அந்த கார் கடந்த 3 ஆண்டுகளாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமலேயே இயக்கப்பட்டது.

÷இது குறித்த தகவல் அண்மையில் வெளியே வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அந்த காரை பதிவு செய்யச் சென்றனர். மூன்று ஆண்டுகளாகப் பதிவு செய்யாமல் இருந்ததற்காக ரூ. 68 ஆயிரம் மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை மக்களின் வரிப் பணத்தில் இருந்து செலுத்தியுள்ளனர்.

÷ஆனால் இந்தத் தவறுக்குக் காரணமான மாநகராட்சி மேயர், ஆணையர், வேளாண் அமைச்சர், மூன்று ஆண்டுகளாக ஒரு காரை பதிவு செய்யாமல் இயக்க அனுமதித்த சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் இந்த அபராதத் தொகையை வசூலிக்க வேண்டுமே தவிர, மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட்டு தவறுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பணத்தைத் திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

குப்பைகளை சாலையில் கொட்டுவோர் மீது நடவடிக்கை: நகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி               11.11.2010

குப்பைகளை சாலையில் கொட்டுவோர் மீது நடவடிக்கை: நகராட்சி ஆணையர்

திருவாரூர், நவ. 10: திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகளை சாலைகளில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் க. சரவணன் எச்சரித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் குப்பைகள் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலும், சாலைகளிலும் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது, பல தொற்றுநோய்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே, வர்த்தக நிறுவனங்கள் தங்களது குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து, தங்களது சொந்தப் பொறுப்பில் நகராட்சி துப்புரவு வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும். குப்பைகளை கழிவுநீர் வாய்க்காலில் கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பாலிதீன் பைகள் விற்பது, வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், குப்பைகளை அகற்றுவதற்கான செலவும் வசூல் செய்யப்படும். மேலும், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

எனவே, நகராட்சி பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்

 

ரூ23 கோடி நிலுவை வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன்                11.11.2010

ரூ23 கோடி நிலுவை வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி எச்சரிக்கை

திருப்பூர், நவ.11: திருப்பூர் மாநகரில் ரூ23 கோடி அளவுக்கு வரியினங்கள் நிலுவையில் உள்ள நிலை யில், வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

திருப்பூர் மாநகரில் நடப்பாண்டுக்கான (2010&11) சொத்து வரி ரூ24 கோடி; குடிநீர் கட்டணம் ரூ5 கோடி, தொழில் வரியாக ரூ1.5கோடி மற்றும் வரி யில்லா கட்டணமாக ரூ1.70 கோடி உட்பட சுமார் ரூ33 கோடிக்கும் அதிகமான வரியினங்கள் மற்றும் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டியிருந்தது. இது தவிர கடந்தாண்டுக்கான நிலுவைத் தொகையும் வசூ லிக்க வேண்டியுள்ளது.

இதில் இதுவரை சொத்து வரி ரூ7 கோடி; குடிநீர் கட்டணம் ரூ1.70 கோடி; தொழில் வரி ரூ50 லட்சம், வரியில்லா கட்ட ணம் ரூ90 லட்சம் என ரூ10 கோடி அளவுக்கு வரியினங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் ரூ23 கோடி அளவுக்கு வரியினங்கள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வரியின நிலுவை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை நேற்று துவக்கியது. மாந கரில் உள்ள 52 வார்டுகளி லும் வரி வசூலிப்புக்கென தனிக்குழு அமைக்கப்பட்டு, வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஜெயலட்சுமி கூறுகையில், ‘’திருப்பூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரியினங்கள் வசூலிப்பில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அதன்படி வரியினங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) முதல் வரியினங்கள் செலுத்தாதவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, இணைப்பை துண்டிக்கும் பணி துவங்கியுள்ளது. உடனடியாக நிலுவை வரியினை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும்," என் றார்.

 


Page 324 of 506