Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புதுவையில் விளம்பரத் தடை ஆணையை தளர்த்த முடிவு

Print PDF

தினமணி                   10.11.2010

புதுவையில் விளம்பரத் தடை ஆணையை தளர்த்த முடிவு

புதுச்சேரி, நவ. 9: புதுவையில் பொது இடங்களில் விளம்பரம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

÷புதுச்சேரியில் பொது இடங்களில் கட்-அவுட், பேனர், விளம்பரங்கள் செய்ய 2009-ல் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தடை உத்தரவை யாரும் மதிப்பில்லை. பெரும்பாலும் இந்தத் தடை உத்தரவை மீறி அரசியல்வாதிகளின் பிறந்தநாள், புதுச்சேரிக்கு வருகை தரும் முக்கிய கட்சி விஐபிக்கள் உள்ளிட்ட விழாக்களுக்கு அதிக அளவில் பேனர் வைக்கப்படுகின்றன. இதற்கு எந்த அனுமதியும் பெறுவதில்லை.

÷மேலும் இது போன்று பேனர் வைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேலும் அது போன்று வைக்கப்படும் பேனர், கட்-அவுட்களை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள் கூறினாலும் யாரும் கேட்பதில்லை.

÷அதனால் பொது இடங்களில் வர்த்தக விளம்பரங்கள் இடம் பெற்றால் அந்த இடங்களில் அரசியல்வாதிகள் பேனர், கட்-அவுட் வைக்கப்படுவது தவிர்க்கப்படும். பொது இடங்களில் விளம்பரம் செய்வதற்கான தடை உத்தரவு அமலுக்கு வந்தப் பிறகு நகராட்சிக்குக் கிடைத்து வந்த வருவாய் இல்லாமல் போய்விட்டது. இதைக் கருத்தில் கொண்டு நகராட்சிக்கு வருவாயைப் பெருக்கவும் பொது இடங்களில் வர்த்தக நோக்கத்தில் இருக்கும் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறின.

÷இது தொடர்பாக அண்மையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் வர்த்தக நோக்கத்தில் இருக்கும் விளம்பரங்களுக்கு மட்டும் கறாராக அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின. இதனால் நகராட்சி ஓரளவுக்கு நிதி ஆதாரத்தைப் பெருக்க முடியும்.

÷இருப்பினும் சாலை சந்திப்புகளில் 100 மீட்டருக்குள் எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்ற விதியைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மெரீனாவில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்: மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி            10.11.2010

மெரீனாவில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் 100 அபராதம்: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, நவ.9: சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் 100 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை மெரீனாவில் புல்வெளிகளை தூய்மைப்படுத்துவதையும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையும் மேயர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:

சென்னை மெரினா கடற்கரை, நடைபாதைகள், புல்வெளிகள், அலங்கார மின் விளக்குகள், 14 இடங்களில் அமர்வு இடங்கள், நீருற்றுகள் என 26 கோடியில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

இதைப் பராமரிக்க தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் என 149 பேர் நாள்தோறும் பணியாற்றுகின்றனர்.

மெரீனா நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். மெரீனாவில் வியாபாரிகளும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக, பல்வேறு இடங்களில் விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் 100 அபராதம் விதிக்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.

 

 

திருச்செங்கோடு நகராட்சியில் திட்டப்பணிகள் முடிக்க உத்தரவு

Print PDF

தினமலர்            10.11.2010

திருச்செங்கோடு நகராட்சியில் திட்டப்பணிகள் முடிக்க உத்தரவு

நாமக்கல்: திருச்செங்கோடு நகராட்சியில் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், இம்மாதம் 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்டார்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் மின்தகன மேடை, காத்திருப்போர் அறை, கழிப்பிடம் கட்டுதல், சைக்கிள் நிறுத்தும் இடம், ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய கட்டுமானப் பணிகள் நடக்கிறது.

அந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் மதுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசு நிதியாக 49 லட்சம் ரூபாய், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 34 லட்சம் ரூபாய், எம்.பி., நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய், இதர நிதியாக 9 லட்சம் ரூபாய் என மொத்தம் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம், நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பணி குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கிய கலெக்டர் மதுமதி, அனைத்து பணிகளையும் இம்மாதம் 30ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் சமுதாய நலக்கூடம், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் நெசவாளர் காலனியில் கட்டப்படும் சாக்கடை கால்வாய் உள்ளிட்டவற்றை கலெக்டர் மதுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி சேர்மன் நடேசன், கமிஷனர் இளங்கோவன், தலைமை இன்ஜினியர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 325 of 506