Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி



திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் வரி பாக்கி வைத்தவரின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக துண் டித்தனர்.

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி

திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை சுமார் 60 சதவீத வரித்தொகைகள் மட்டுமே வசூலாகியுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட தொகைகளை செலுத்தாமல் காலதாமதம் செய்து வருபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள பாலகிருஷ்ணன் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரம் வரி செலுத்தாமல் நீண்ட நாட்களாக காலம் கடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி வரிவசூல் அதிகாரி சரவணன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் பாலகிருஷ்ணனின் வர்த்தக நிறுவனத்தில் இருந்த குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

எச்சரிக்கை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் கூறியதாவது:-

மாநகராட்சி முழுவதும் நீண்ட நாட்களாக வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. 2-வது மண்டல பகுதியில் இதுவரை மாநகராட்சிக்கு நீண்டகாலம் வரி செலுத்தாமல் ஆயிரக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ள 30 பேரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக வரித்தொகைகளை செலுத்தாத பட்சத்தில் எவ்வித தயவுமின்றி அவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் குடிநீர் இணைப்பு பெற ரூ.30 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்பதால் மக்கள் உடனடியாக வரிபாக்கிகளை செலுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் மேயர் தலைமையில்அதிகாரிகள் பார்வையிட்டனர்

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் மேயர் தலைமையில்அதிகாரிகள் பார்வையிட்டனர்

வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ஏற்பாடுகளை திருச்சி மேயர் ஜெயா தலைமையில் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

வைகுண்ட ஏகாதசி

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 31-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது, முக்கிய திருவிழாக்களான மோகினி அலங்காரம் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4-45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

பக்தர்களுக்காக நடைபெற்று வரும் சிறப்பு ஏற்பாடுகளை திருச்சி மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக் மீரா, ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் லதா, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ரெங்கராஜ், உதவி நிர்வாக என்ஜினீயர் அமுதவல்லி, உதவி என்ஜினீயர்கள் லோகநாதன், வேல்முருகன், கவுன்சிலர்கள் முத்துலட்சுமி(3-வது வார்டு),பச்சையம்மாள்(5-வது வார்டு) மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

சாலை விரிவாக்கப்பணிகள்


ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் சாலையை விரிவாக்கம் செய்ய நடைபெற்று வரும் பேவர் பிளாக் போடும் பணி, சாலை ரோட்டில் தற்காலிக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வரும் பணி, 56 சீட் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வரும் பணி, குடிநீர் வசதிக்காக நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அம்மா மண்டபம் ரோட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வரும் பணி, வடக்கு தேவி தெருவில் பள்ளிக்கூட கட்டிடப்பணி, அடைய வளஞ்சான் பகுதியில் பிரசன்னா பள்ளிக்கு கட்டிடம் கட்டும் பணி ஆகிய பணிகளை மேயர் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் செய்து முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

 

குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி             04.01.2014 

குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி எச்சரிக்கை

திருநெல்வேலி மாநகராட்சியின் கீழ் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள், தங்களது குடிநீர் வரியை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப்பிரசுர விவரம்:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்துக்களுக்கு 31-3-2014 வரை செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், காலிமனை வரி, தொழில்வரி ஆகியவற்றை இன்றைய தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாமல் இருந்தால் உடனே வரிகளைச் செலுத்தி ரசீதுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 34 of 506