Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி                 29.10.2010

சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 28: சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்தும், அவற்றை இடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

÷சென்னையைச் சேர்ந்த பப்ளிக் சாலமன் என்பவர் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

÷இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

÷சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதால் குடிநீர் வசதியைப் பெறுவதிலும். கழிவு நீரை வெளியேற்றும் வசதியிலும் சிக்கல் உள்ளது என்று சென்னை மாநகராட்சிக்கு மனு செய்யப்பட்டுள்ளது.

÷அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று 4.12.2009-ல் மாநகராட்சி பதில் அளித்துள்ளது. எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

÷எனவே, விதிமுறைகளை மீறி எழுப்பப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பான அறிக்கையை நவம்பர் 12-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய கட்டட வரைபட அனுமதிக்கு நிபந்தனைகள் தளர்வு

Print PDF

தினமணி                29.10.2010

புதிய கட்டட வரைபட அனுமதிக்கு நிபந்தனைகள் தளர்வு

திருநெல்வேலி,அக்.28: புதிய கட்டட வரைபட அனுமதிக்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மையில் புதிய கட்டட வரைபட அனுமதிக்கு விண்ணப்பிக்குபோது மனுதாரர்கள் பின்பற்ற சில வழிகாட்டுதல் முறை வெளியிடப்பட்டது. இந்த நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மண்டலத் தலைவர்களும்,மாமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நிபந்தனைகளை தளர்வு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தின் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி அனுமதிப் பெற்ற மனைப் பிரிவுக்கு வட்டாட்சியர் தடையின்மைச் சான்றிதழ்,கிராம நிர்வாக அலுவலர் சிட்டா அடங்கல்,கிராம நிர்வாக அலுவலரின் புலப்பட நகல், கிராம நிர்வாக அலுவலர் அத்தாட்சி பெற்ற நில அளவை வரைப்படம் ஆகியவை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

மேலும் நோட்டரி பப்ளிக் கையெழுத்து தேவையில்லை. இடம் குறித்து பிரச்னை இருந்தால் மட்டும் மனுதாரர், அரசு வழக்கறிஞரிடம் கருத்துரு பெற்றுத் தர வேண்டும்.

சூரிய அடுப்பு கட்டட வரைப்படத்தில் காட்டப்பட வேண்டும். புதிய குடிநீர் திட்டங்கள் அம்படுத்தப்படுகின்ற 1,2,3,4,8,9,10,19,26,27,31,32 பாகங்களில் புதியதாக வீடு கட்ட மனு செய்கிறவர்கள், குடிநீர் இணைப்பு பெறுவதற்கு சம்மத கடிதம் தர வேண்டும். அதற்குரிய வைப்புத் தொகையையும் செலுத்த வேண்டும்.

மேலும் கட்டட வரைபட அனுமதி வாங்க தாமதத்தை தவிர்ப்பதற்கு, மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்படும் கிரீன் சானல் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் 2 நாள்களுக்குள் அனுமதி பெற்றுவிடலாம். இது வரை இத் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்த 401 பேர்களில், 397 பேருக்கு கட்டட வரைப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு வரிவிதிப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது. இப் புகாரால், சென்ற மாதம் முதல் புதிதாக கட்டடம் கட்டியதும், கட்டட உரிமையாளர்கள் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடன், வரிவிதிப்பு ஆணையை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

மாநகர மக்களுக்கு மாநகராட்சியின் அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சுப்பிரமணியன்.

 

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                29.10.2010

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

கும்பகோணம், அக்.29: மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடந்தை நகராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடந்தை நகர¢மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் தமிழழகன் தலைமை வகித் தார். துணைத்தலைவர் தர்மபாலன், பொறியாளர் கனகசுப்புரத்தினம், மேலாளர் லட்சுமிநாராயணன் மற் றும் நகர¢மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:

ராஜாநடராஜன்(அதிமுக): பாட்ராச்சாரியார் தெரு கிருஷ்ணன் கோயில் அருகே ரூ10லட்சத்திற்கு சாலை பணி தொடங்கப்பட்டு பாதி யில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் குளம்போல் தேங்கி காட்சி தருகிறது.

பொறியாளர்: ஒப்பந்தகாரரிடம் கூறியாகிவிட்டது. இரண்டு நாளில் சீரமைக்கப்படும்.

கிருஷ்ணமூர்¢த்தி(திமுக): காலை 8மணி முதல் 12மணிவரையிலும், மாலை 5மணி முதல் 8மணி வரையிலும் மடத்துத்தெருவில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. எனவே கனரக வாகனங்கள் நகருக்கு வருவதற்கு தடைசெய்வதுடன், பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோருக்கு இடையூறாக இல்லாமல் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவேண்டும். மடத்து தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தலைவர் : தீபாவளி பண்டிகை முடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

பீட்டர்பிரான்சிஸ்(பா..): கும்பகோணம் நகரில் இரண்டு வேளையும் எப்போது தண்ணீர் வரும்?

தலைவர்: கொள்ளிடத்தில் போதிய தண்ணீர் இல்லை. தீபாவளியை முன்னிட்டு முதல் நாளும், தீபாவளி அன்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் வ¤நியோகம் செய்யப்படும்.

துளசிராமன்(அதிமுக) : 34 வார்டில் கீழத்தெரு, துவரங்குறிச்சி, நடுத்தெரு பகுதியில் ஒரு வேளைகூட தண்ணீர் வராமல் உள்ளது.

ராஜாராமன்(திமுக): நகரில் சிலர் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுகிறார்கள் என தெரியவருகிறது.

தலைவர்: மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

லட்சுமிநாராயணன்(காங்கிரஸ்): ஓலைப்பட்டிணம் வாய்க் கால் தூர¢ வாரியதற்கு காண்டிராக்டருக்கு பணம் கொடுக்கவில்லை என்ப தால் ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் வந்ததாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கு மேல் முறையீடு செய்ய நிதி ஒதுக்கப்பட்டதே அதன் விவரம் என்ன?

மேலாளர்: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு நாளை (இன்று 29ம்தேதி) வருகிறது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் ரூ24.20 லட்சத்தில் பல்வேறு பணி கள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

 


Page 333 of 506