Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வீடுகளில் குடிநீர் மீட்டர் பொருத்துதல், கட்டண பில் அனுப்பும் பணி டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

Print PDF

தினகரன்                  28.10.2010

வீடுகளில் குடிநீர் மீட்டர் பொருத்துதல், கட்டண பில் அனுப்பும் பணி டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

புதுடெல்லி, அக். 28: குடிநீர் கட்டண பில் அனுப்பும் பணி, வீடுகளில் மீட்டர் பொருத்துதல் ஆகிய பணிகளை டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் குடிநீர் வாரிய தலைமைச் செயல் அலுவலர் ரமேஷ் நேகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடிநீர் வாரியத்தின் பணிகளை சீரமைக்கும் விதமாக, குடிநீர் கட்டணத்துக்கான பில் அனுப்பும் பணிகள், மீட்டர் பொருத்தும் பணிகளை ஐ.டி. நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப்பிறகு, தலைமைச் செயல் அலுவலர் ரமேஷ் நேகி கூறியதாவது:

குடிநீர் கட்டண பில்களை நுகர்வோர்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட பில் சம்பந்தமான பணிகளை டி.சி.எஸ்.சிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான மென்பொருளை டி.சி.எஸ். தயாரிக்கும். இந்த புதிய முறை 9 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வந்து விடும்.

இப்போதுள்ள கட்டணத்துக்கான பில் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன.

கம்யூட்டர் அடிப்படையிலான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதன்மூலம் குளறுபடிகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு, குடிநீர் வாரியத்தின் வருவாயும் அதிகரிக்கும். இந்த புதிய முறையின் மூலம் நுகர்வோர்கள் ஆன்லைனிலேயே குடிநீர் கட்டணத்தை செலுத்த முடியும்.

இதுதவிர, குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் 2.5 லட்சம் குடிநீர் மீட்டர்களை பொருத்தும் பணியிலும் டிசிஎஸ். நிறுவனத்தை ஈடுபடுத்த முடிவு ªய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு, மீட்டர் பொருத்தப்படாத வளாகங்களில் மீட்டர் பொருத்தும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீட்டரை பராமரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சாரும்.

லாரியில் குடிநீர் சப்ளை செய்யும் பணிகளிலும் மண்டலவாரியாக தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் தனியார்வசம் லாரி குடிநீர் சப்ளை பணி ஒப்படைக்கப்படும்.

இதுதவிர, குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தவும் முடிவு செய்துள்ளோம்.

அதன்மூலம் லாரிகளின் நடமாட்டத்தை குடிநீர் வாரியத்திலிருந்து எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று குடிநீரை சப்ளை செய்யாத லாரி தவறினால், அதன் உரிமையாளருக்கு ரூ10

ஆயிரம் வரை அபராதம் விதிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரமேஷ் நேகி கூறினார்.

மகிபால்பூர், ரான்பூரி, ரஜோரி, ஸ்மல்கான், கபஷேரா கிராமங்கள் ஆகியவற்றில் கழிவுநீர் குழாய்களை பொருத்துவதற்காக ரூ18.96 கோடி திட்டத்துக்கும், ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ19.04

கோடி செலவில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதவிர, வாரிய ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டியின்போது தங்கு தடையற்ற முறையில் குடிநீர் விநியோகித்ததற்காக வாரிய அதிகாரிகளை முதல்வர் பாராட்டினார்.

 

மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு புதிய கட்டுபாடு

Print PDF

தினகரன்               28.10.2010

மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு புதிய கட்டுபாடு

கோவை, அக்.28:கோவை மாநகராட்சி அலுவலகத்திற்குள் ஒப்பந்தாரர்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலகம், மண்டல, வார்டு அலுவலகம், சுகாதார பிரிவு அலுவலகங்கள், பொறியியல், குடிநீர் பிரிவு அலுவலகங்கள் செயல்படுகிறது. மாநகராட்சியில் 90க்கும் மேற்பட்ட ஒப்பந்தாரர்கள் உள்ளனர்.

குடிநீர், சாக்கடை கால்வாய், ரோடு, கட்டுமானம், பாலம் உள்ளிட்ட மாநகராட்சியின் அனைத்து பணிகளும் ஒப்பந்தம் மூலம் செய்ய ஒப்படைக்கப்படுகிறது. பல ஆண்டுகாலமாக, மாநகராட்சியில் ஒப்பந்தாரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. சில அதிகாரிகள் ஒப்பந்தாரர்களுடன் நெருக்கமான நட்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் பணிகளில் முறைகேடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. அலுவலக பிரிவில், அதிகாரிகள் அறைக்குள் ஒப்பந்தாரர்கள் சிலர் மணிக்கணக்கில் பேசி கொண்டிருப்பதாக நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் எச்சரிக்கப்பட்டனர். ஒப்பந்ததாரர்கள் தொழில் ரீதியாக மாநகராட்சி அலுவலகங்களுக்கு வருவதை வெகுவாக தவிர்க்கும் வகையில் திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக இ டெண்டர் முறை கொண்டு வரப்பட்டது.

ஒப்பந்த விவரங்கள், தகவல்கள் ஆன்லைனில் பெறப்படவேண்டும். முறையாக, மாநகராட்சியிடம் ஒப்பந்த நிறுவனங்கள் அனுமதி பெறவேண்டும். அவர்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவேண்டும் என கட்டுபாடு விதிக்கப்பட்டது. மாநகராட்சி அனுமதி பெற்ற ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அனுமதி பெற்ற ஒப்பந்த நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் மாநகராட்சி டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. டெண்டரில் பணிகளை எடுத்து, முற்றிலும் முடித்த பின்னர் காசோலை வழங்கப்படுகிறது. காசோலையை நேரிடையாக வழங்காமல், ஒப்பந்த நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் திறக்கப்பட்டால், குறைந்த தொகை கேட்ட நிறுவனங்களின் ஒப்பந்தம் ஏற்கப்பட்டு ஆன்லைனில் பதில் தரும் வழக்கமும் வந்து விட்டது.

இதன் மூலம் மாநகராட்சி அலுவலகங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் டெண்டர் பெட்டிவைக்கும் நடைமுறை முடிவிற்கு வந்து விட்டது. கட்டுபாடுகளை மதிக்காமல், நட்பு ரீதியில் ஆர்வம் காட்டும் அதிகாரிகளை கண்காணிக்கவும், ஒப்பந்த நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டுபாடு விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Last Updated on Thursday, 28 October 2010 06:02
 

கன்னிவாடியில் பஸ் நிலையம் கட்ட இடம்: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி               26.10.2010

கன்னிவாடியில் பஸ் நிலையம் கட்ட இடம்: அமைச்சர் ஆய்வு

திண்டுக்கல், அக். 25: கன்னிவாடி பேரூராட்சியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ.பெரியசாமி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

கன்னிவாடி வழியாக தினமும் சுமார் 610 பஸ்கள் வந்து செல்கின்றன. கன்னிவாடி பகுதியில் சுமார் 1,200 பயணிகள் பஸ்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே இப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய பஸ் நிலையம் கட்ட அரசு முடிவு செய்தது.

செம்பட்டி - ஒட்டன்சத்திரம் சாலையில் கால்நடைத் துறைக்குச் சொந்தமான 2.75 ஏக்கர் நிலத்தில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து கே.பி.ராமலிங்கம் ரூ. 20 லட்சம் வழங்கி உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பஸ் நிலையம் கட்டுவதற்காக அமைச்சர் இ.பெரியசாமி பார்வையிட்டு பணிகளைத் துவங்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கா.பேச்சியம்மாள், கோட்டாட்சியர் ராமசாமி, வட்டாட்சியர் குமாரசாமி, கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 26 October 2010 10:59
 


Page 334 of 506