Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ. 7 கோடியில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம்

Print PDF
தினமணி        10.11.2014

ரூ. 7 கோடியில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம்


சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் அண்மையில் தொடங்கியது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி: திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகில் தண்டையார்பேட்டை மண்டலத்துக்குப் புதிய கட்டடம் கட்டும் பணியை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். ரூ. 7.19 கோடியில் 3 தளங்களுடன் இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது. மூன்று தளங்களிலும் அதிகாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்படும். தரைத்தளம் 872 சதுர மீட்டர் பரப்பிலும், முதல் தளம் 930 சதுர மீட்டர் பரப்பிலும் கட்டப்படும்.

இரண்டாம், மூன்றங்கள் தளங்கள் தலா 978 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும். இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் வடசென்னை தொகுதி மக்களை உறுப்பினர் டி.ஜி. வெங்கடேஷ் பாபு, துணை மேயர் பா. பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

Print PDF
தினமணி      09.11.2014

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மேயர் அ. ஜெயா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். ஸ்ரீரங்கம் கோட்டத்தைச் சேர்ந்த 188 பணியாளர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் 83 பேருக்கு கண்களில் குறைபாடு இருப்பது தெரியவந்து, மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன், உதவி ஆணையர் பா. ரெங்கராஜன், உதவிச் செயற்பொறியாளர் அமுதவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அனைத்துக் கோட்டங்களிலும் இதேபோன்ற முகாம் மாநகராட்சிப் பணியாளர்களின் நலனுக்காக நடத்தப்படும் என மேயர் தெரிவித்தார்.
 

திருச்சியில் 18 வார்டுகள் துப்புரவுப் பணி இனி தனியார்வசம்

Print PDF
தினமணி        05.11.2014

திருச்சியில் 18 வார்டுகள் துப்புரவுப் பணி இனி தனியார்வசம்

திருச்சி காந்தி மார்க்கெட், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களை உள்ளடக்கிய 18 வார்டுகளின் துப்புரவுப் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல்

தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 77,262 வீடுகள், மார்க்கெட், பேருந்து நிலையங்களில் தினசரி 121.95 டன் திடக்கழிவு அகற்றப்பட உள்ளது.

மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இலகுரக தள்ளுவண்டி, வாகனக் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி கதர் மற்றும் கிராமத்

தொழில்துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மேயர் அ. ஜெயா பேசியது:

திருச்சி மாநகராட்சியின் பொன்மலை கோட்டத்தில் 35,36,37,38,39,63,65 வார்டுகள், அரியமங்கலம் கோட்டத்தில் 7,28,29,61,62,64 வார்டுகள், கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில்

40,41.45 வார்டுகள், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வார்டு எண் 9 என 18 வார்டுகளில் துப்புரவுப் பணிகளை ஸ்ரீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம்

மூலம் மேற்கொள்ள 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 50 ச.கி. பரப்பளவில் உள்ள 77,262 வீடுகளிலும், காந்தி மார்க்கெட், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு,

நாள்தோறும் 121.95 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன. 5-ம் தேதி முதல் துப்புரவுப் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்.

இந்த 18 வார்டுகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் மாநகராட்சிப் பணியாளர்கள், தளவாடப் பொருள்கள் மற்றும் வாகனங்கள் இதர வார்டுகளிலுள்ள பற்றாக்குறைக்கு ஈடு

செய்யப்படும் என்றார்.

நிகழ்வில், தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு. பரஞ்சோதி, த. இந்திராகாந்தி, ஆர்.

சந்திரசேகர், ஆணையர் வே.ப. தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 38 of 3988