Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வணிக நிறுவன குப்பைகளை அகற்ற சேவை வரி நிர்ணயம்

Print PDF

தினமணி        29.09.2014

வணிக நிறுவன குப்பைகளை அகற்ற சேவை வரி நிர்ணயம்

மதுரை மாநகராட்சிப் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி சேவை வரி நிர்ணயம் செய்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆணையர் சி.கதிரவன் கொண்டு வந்த தீர்மானம் வருமாறு:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தினமும் 700 முதல் 720 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. இக்குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வாகனங்கள் மூலமாக வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகின்றது.

இந்த குப்பைகளை அகற்றும் பணிக்கு துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஊதியம், டீசல் செலவினம், வாகனங்கள் பராமரிப்பு செலவினம் மற்றும் வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மைய மாதாந்திர பராமரிப்பு செலவினம் என ஆண்டுக்கு ரூ.45.62 கோடி செலவாகிறது. இதனால், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதில் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு வணிக நிறுவனங்களுக்கு குப்பைகளை அகற்ற சேவை வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள சேவை வரி விவரம்(நாள் ஒன்றுக்கு):

உணவு விடுதி மற்றும் உணவகங்கள்: வகுப்பு ஏ-நட்சத்திர வகுப்பு-ரூ.500, வகுப்பு பி-(21 மேஜைகளுக்கு மேல்)-ரூ.200, வகுப்பு சி-(11 முதல் 20 மேஜைகள் வரை)-ரூ.100, வகுப்பு டி-(10 மேஜைகள் வரை)-ரூ.50.

திருமண மண்டபம்: வகுப்பு ஏ-(5,000-ம் ச.அடிக்கு மேல்)-ரூ.100, வகுப்பு பி-(4001-5,000 சஅடி வரை)-ரூ.75, வகுப்பு சி-(3001-4,000 சஅடி வரை)-ரூ.55, வகுப்பு டி-(2001-3,000 ச.அடி வரை)-ரூ.45, வகுப்பு இ-(2,000 சதுரடிக்குள்)-ரூ.25.

மருத்துவமனைகள்: வகுப்பு ஏ-(50 படுக்கைகளுக்கு மேல்)-ரூ.500, வகுப்பு பி-(21 முதல் 50 படுக்கைகள் வரை)-ரூ.200, வகுப்பு சி-(11 முதல் 20 படுக்கைகள் வரை)-ரூ.100, வகுப்பு டி-(10 படுக்கைகள் வரை)-ரூ.50.

தங்கும் விடுதிகள்: வகுப்பு ஏ-நட்சத்திர வகுப்பு-ரூ.500, வகுப்பு பி-(50 அறைகளுக்கு மேல்)-ரூ.300, வகுப்பு சி-(21 முதல் 50 அறைகள் வரை)-ரூ.200, வகுப்பு டி-(11 முதல் 20 அறைகள் வரை)-ரூ.100, வகுப்பு இ-(10 அறைகள் வரை)-ரூ.50.

திரையரங்குகளுக்கு ரூ.500, தொழில் மற்றும் அலுவலக வளாகங்களுக்கு ரூ.150, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.75, பிற சிறு நிறுவனங்களுக்கு ரூ.50.

சந்தை வளாகங்கள் (மார்க்கெட், ஷோரூம், ஷாப்பிங் மால்): வகுப்பு ஏ-(2,000 சதுரஅடிக்கு மேல்)-ரூ.500, வகுப்பு பி(1001-2000 சதுரஅடிக்குள்)-ரூ.300, வகுப்பு சி-(501 முதல் 1000 சதுரடிக்குள்)-ரூ.200, வகுப்பு டி-(250-500 சதுர அடி வரை)- ரூ.100, வகுப்பு இ-250 சதுரடிக்குள்-ரூ.50 நிர்ணயம் செய்து வசூல் செய்வதற்கு மான்ற அனுமதி கோரப்படுகிறது, என தெரிவித்தார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

13,600 கட்டட திட்டம்: ஆன்லைன் மூலம் தெற்கு தில்லி மாநகராட்சி அனுமதி

Print PDF
தினமணி       26.09.2014

13,600 கட்டட திட்டம்: ஆன்லைன் மூலம் தெற்கு தில்லி மாநகராட்சி அனுமதி

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,600 கட்டட திட்ட வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கட்டடங்களின் வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதியளிக்கும் வசதியை, கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.

ஒவ்வொரு கட்டடங்களின் வரைபடங்களுக்கும் அதிகபட்சமாக 7 நாள்களுக்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 24 மணி நேரத்துக்குள்ளேயும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடங்களில் தேவையான மாற்றங்கள் செய்வதும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

கட்டட வரைபடங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கும் வசதியை நாட்டிலேயே முதல் முறையாக தெற்கு தில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.

இந்த ஆன்லைன் வசதிக்காக, சமீபத்தில் "ஸ்காச்' குழுமத்தின் விருதையும் பெற்றது.

தற்போது, கட்டட வரைபடங்களுக்கு தெற்கு தில்லி, வடக்கு தில்லி, புது தில்லி மாநகராட்சிகள் ஆன்லைன் மூலம் அனுமதி அளித்து வருகின்றன.
 

மாநகராட்சி சேவைபணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

Print PDF
தினமணி     26.09.2014

மாநகராட்சி சேவைபணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

திருச்சி மாநகராட்சியின் சேவைப் பணிகளில் ஈடுபடுவதற்கு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையே சமுதாயம் சார்ந்த குழுக்களை அமைத்து, அவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, மாநகராட்சி சேவைப் பணிகளில் ஈடுபடுத்த தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் செப். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: உதவி ஆணையர் (பணிகள்) த.ந. தனபாலன் செல்போன் எண்- 9894277411.
 


Page 45 of 3988