Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

Print PDF

 தினமணி       26.09.2014

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

மதுரை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் முழு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் எனவும், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில், ஆணையர் சி.கதிரவன், துணை மேயர் திரவியம் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தெற்கு மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து பேசுகையில், அணையில் போதிய தண்ணீர் இருக்கிறது. பிற திட்டங்கள் மற்றும் முதல்வரின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநகர மக்களுக்கு தண்ணீர் விநியோகத்துக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வணிக கட்டங்கள், உணவகங்கள் போன்றவற்றில் எண்ணற்ற அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இதனால், ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் வணிக நோக்கத்திற்காக அளவுக்கு அதிகமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த அனுமதியற்ற குழாய் இணைப்புகளை துண்டித்தால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் மட்டுமே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

மாமன்ற உறுப்பினர் விஜயராகவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்களில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டு வுருகிறது. இந்த குழாய் இணைப்புகளை முறைப்படுத்தினால், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும், அனுமதியற்ற குழாய்களையும் துண்டிக்க முடியும்.

அனைத்துப் பகுதிகளுக்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும், என்றார்.

இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக கட்டடங்களில் 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கண்டறியப்படும் அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும்.

அனுமதியற்ற குழாய் இணைப்புகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவித்தால், அவற்றின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மருத்துவமனையுடன் மருந்தகங்கள் இணைப்பு: மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்நிலையில், பழங்காநத்தம் மருந்தகத்துக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணியில் இருக்கிறார். கீழ்மதுரை மருந்தகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர், மருந்தாளுர் ஆகிய 2 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.

அதேபோன்று பொன்னகரம் மருந்தகத்துக்கான மருத்துவர் உள்ளிட்ட 6 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆண் செவிலியர் ஒருவரும், காவலர் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால், இந்த 3 மருந்தகங்களும் முறையாக செயல்படவில்லை எனற புகாரும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, பழங்காநத்தம் மருந்தகத்தை பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையுடனும், கீழ்மதுரை மருந்தகத்தை கென்னடி மகப்பேறு மருத்துவமனையுடனும், பொன்னகரம் மருந்தகத்தை லேடி வில்லிங்டன் மகப்பேறு மருத்துவமனையுடன் இணைக்கவும் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 மருந்தக ஊழியர்களும் அந்தந்த மகப்பேறு மருத்துவமனைகளில் இணைக்கப்பட்டு பணியாற்றுவர்.

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

மதுரை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் முழு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் எனவும், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில், ஆணையர் சி.கதிரவன், துணை மேயர் திரவியம் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தெற்கு மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து பேசுகையில், அணையில் போதிய தண்ணீர் இருக்கிறது. பிற திட்டங்கள் மற்றும் முதல்வரின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநகர மக்களுக்கு தண்ணீர் விநியோகத்துக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வணிக கட்டங்கள், உணவகங்கள் போன்றவற்றில் எண்ணற்ற அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இதனால், ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் வணிக நோக்கத்திற்காக அளவுக்கு அதிகமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த அனுமதியற்ற குழாய் இணைப்புகளை துண்டித்தால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் மட்டுமே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

மாமன்ற உறுப்பினர் விஜயராகவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்களில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டு வுருகிறது. இந்த குழாய் இணைப்புகளை முறைப்படுத்தினால், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும், அனுமதியற்ற குழாய்களையும் துண்டிக்க முடியும்.

அனைத்துப் பகுதிகளுக்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும், என்றார்.

இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக கட்டடங்களில் 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கண்டறியப்படும் அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும்.

அனுமதியற்ற குழாய் இணைப்புகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவித்தால், அவற்றின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மருத்துவமனையுடன் மருந்தகங்கள் இணைப்பு: மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்நிலையில், பழங்காநத்தம் மருந்தகத்துக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணியில் இருக்கிறார். கீழ்மதுரை மருந்தகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர், மருந்தாளுர் ஆகிய 2 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.

அதேபோன்று பொன்னகரம் மருந்தகத்துக்கான மருத்துவர் உள்ளிட்ட 6 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆண் செவிலியர் ஒருவரும், காவலர் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால், இந்த 3 மருந்தகங்களும் முறையாக செயல்படவில்லை எனற புகாரும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, பழங்காநத்தம் மருந்தகத்தை பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையுடனும், கீழ்மதுரை மருந்தகத்தை கென்னடி மகப்பேறு மருத்துவமனையுடனும், பொன்னகரம் மருந்தகத்தை லேடி வில்லிங்டன் மகப்பேறு மருத்துவமனையுடன் இணைக்கவும் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 மருந்தக ஊழியர்களும் அந்தந்த மகப்பேறு மருத்துவமனைகளில் இணைக்கப்பட்டு பணியாற்றுவர்.

 

புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

Print PDF

தினமணி        25.09.2014

புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

திருச்சி மாநகராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த இரு மாமன்ற உறுப்பினர்களும் புதன்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டனர்.

15ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மு. ராஜலட்சுமி, 32ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெ. சங்கர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மேயர் அ. ஜெயா தலைமை வகித்தார். அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மக்களவை உறுப்பினர் ப. குமார், சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்ஜோதி, நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், என். மனோகரன், எம். லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம்: சென்னை, கோவை குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் - முதல்வர் தலைமையிலான தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் முடிவு

Print PDF

 தி இந்து        24.09.2014

மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம்: சென்னை, கோவை குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் - முதல்வர் தலைமையிலான தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் முடிவு 
 
தமிழகத்தில் கோவை, சென்னை நகரங்களுக்கான குடிநீர்த் திட்டங்கள், தென் மாவட்டங்களுக்கான தொழில் வழித்தடம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத் தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்ற பிறகு, தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரியக் கூட்டம் நடந்தது. அதில் பல ஆயிரம் கோடியில் உருவாக் கப்படும் திட்டங்களுக்கு அதிகாரப் பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றிய விவரங்கள் வருமாறு:

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் 2-வது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 217 கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் 173 திட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் வெவ்வேறு கட்டங்களில் இருப்பது பற்றியும், 64 திட்டங்களுக்குப் பணிகள் தொடங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுபோல், கோவை நகரில் 1.5 லட்சம் வீடுகளுக்கு ரூ.556.57 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்வதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட் டம் கட்டி-ஒப்படைக்கும் முறையில் செயல்படுத்தப்படும்.

சென்னை அருகில் பேரூரில் ரூ.4,070 கோடியிலும், நெம்மேலி யில் ரூ.1,371 கோடியிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங் களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி கோர முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத்துக்கான திட்ட வடிவ மைப்புக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் ரூ.1,83,819 கோடியில் செயல்படுத் தப்படும்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல் உருவாக்கப் பட்டுள்ள திட்டங்களைச் செயல் படுத்த ரூ.15 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங் கள், தனியார் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய தமிழ்நாடு தொழில் நிதி மேலாண்மை நிறுவனத்தை அமைப்பதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், தொலைநோக்குத் திட்டம் 2023-ன் 3-வது தொகுதிக் கான வரைவு அறிக்கைக்கும் ஒப்புதல் தரப்பட்டது.

தமிழ்நாடு அடிப்படை வசதிகள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கவும், வரும் நிதியாண்டுக்கு திட்டங்களை வடிவமைப்பதற்காக ரூ.200 கோடி தரவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிதி, மின்சாரம், உள்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, தொழில், நெடுஞ்சாலை, போக்குவரத்து, ஊரகத் தொழில்கள், சுற்றுலா, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செய லாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். மின்கட்டணம் உயர்ந்தாலும் மக்களுக்கு மானியம் வழங்கி கட்டண உயர்வைத் தடுப்பது பற்றியும், கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் தலைமையில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருப்பது பற்றியும், மேலும் சில முக்கிய பிரச்சினைகள் பற்றியும் அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Last Updated on Wednesday, 24 September 2014 10:41
 


Page 46 of 3988