Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

உள்ளாட்சி இடைத் தேர்தல் : வாக்களிக்கத் தேவையான அடையாளச் சான்று

Print PDF

தினமணி     16.09.2014

உள்ளாட்சி இடைத் தேர்தல் : வாக்களிக்கத் தேவையான அடையாளச் சான்று

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டிய அடையாள ஆவணங்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 530 பதவியிடங்களுக்க வரும் வியாழக்கிழமை 18ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்புகள் வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.

இந்த பூத் ஸ்லிப்புகள் இருந்தால், வாக்காளர்கள் வேறு எந்த ஆவணமும் இன்றி வாக்களிக்கலாம். பூத் சிலிப்புகள் இல்லாதபட்சத்தில்

1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை.

2. பாஸ்போர்ட்

3. வாகன ஓட்டுநர் உரிமம்.

4. மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்.

5. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

6. வருமான வரிக் கணக்கு அட்டை (பான் அட்டை)

7. ஆதார் அடையாள அட்டை.

8. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் அட்டை.

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை.

10. மத்திய தொழிலாளர் நலத் துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு.

11. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

12. தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டு.

13. வங்கிக் கணக்குப் புத்தகம்

14. மாற்றுத் திறனாளிகள் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாற்றுத் திறனாளிகள் சான்று.

மேற்கண்ட ஆவணங்களில் வாக்காளரின் புகைப்படம் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளரின் புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் அடையாள அட்டையாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சிப் பள்ளிகள், சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்

Print PDF
தினமணி         15.09.2014

மாநகராட்சிப் பள்ளிகள், சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்

கோவை மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என, தேர்தல் பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சி.பத்மநாபன் வாக்குறுதியளித்தார்.

கோவை மாநகராட்சி இடைத்தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.பத்மநாபன், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய பிரசாரப் பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஜீவா துவக்கி வைத்தார்.

அரவன் திடல் மைதானத்தில் வேட்பாளர் பத்மநாபன் பேசியதாவது:

கோவை மாநகராட்சி மன்றம் கடந்த மூன்று ஆண்டு காலமாக மக்கள் பிரச்னைகளைப் பேசாத மன்றமாகச் செயல்பட்டு வந்துள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி சுகாதார மையங்களை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, செயற்குழு உறுப்பினர் வி.பெருமாள், ஒன்றியச் செயலாளர் கேசவமணி, மதச்சார்பற்ற ஜனதா தளம் மாவட்டச் செயலாளர் கே.என்.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு கிடுக்கிப்பிடி

Print PDF

தினமலர்      13.09.2014

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு கிடுக்கிப்பிடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கிடப்பில் இருக்கும் ரூ.29 கோடியை உடனே வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளதால் நேற்று கமிஷனர் கதிரவன் அவசர கூட்டம் நடத்தினார்.மாநகராட்சியில் கட்டுமானம் தொடர்பான அனுமதி மற்றும் ஒப்புதல் பெற வருவோர் 'உள்கட்டமைப்பு மேம்பாடு' கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். இதுதொடர்பான அரசின் ஆணை நடைமுறையில் இருந்த போதும் மாநகராட்சியில் அதை கடந்த காலங்களில் பின்பற்றவில்லை.வணிக வளாகம், குடியிருப்புகளுக்கு என அளவைக்கு ஏற்பட கட்டணம் மாறுபடுகிறது. பெறப்படும் கட்டணம் மூலம் மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ளலாம். தவிர அது தொடர்பான அறிக்கையை அரசுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த வகையில் மதுரையில் ரூ.29 கோடி உட்கட்டமைப்பு மேம்பாடு கட்டணம் பாக்கி இருப்பது அரசுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவற்றை வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கமிஷனர் கதிரவன் நேற்று நகரமைப்பு பிரிவினர் மற்றும் வருவாய் பிரிவினருடன் அவசர கூட்டம் நடத்தினார். பாக்கியுள்ள ரூ.29 கோடியை வசூலிக்க உத்தரவிட்ட கமிஷனர், அது தொடர்பான சம்மந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Last Updated on Monday, 15 September 2014 07:11
 


Page 52 of 3988