Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடுகட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும் ஆணையர் பேச்சு

Print PDF

தினகரன்     08.09.2014

திருச்சி மாநகராட்சி பகுதியில் வீடுகட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும் ஆணையர் பேச்சு


திருச்சி, :  திருச்சி மாநகராட்சி பகுதியில் இனிமேல் புதிதாக வீடு கட்டும் போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்ப டும் என ஆணையர் தண்டபாணி தெரிவித்துள்ளார். சமூக முன்னேற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பான ‘இலக்கு’ சார் பில், கண்தானம் தொடர் பான புதிய இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் துவக்கவிழா திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, இணையதளம் மற்றும் ஹெல்ப் லைனை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:

திருச்சி மாநகராட்சி பகுதியில் 3 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். 90 சதவீதம் பேர் கழிப்பிட வசதியை பயன்படுத்தி வருகின்றனர். 10 சதவீதம் பேர் மட்டுமே திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சியில் 13 இடங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மாநகராட்சி சார்பில் ‘நம்ம கழிப்பறைகள்’ அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகு தியில் இனிமேல் புதிதாக வீடு கட்டும்போது மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட குப் பைகளை வீடுகளிலேயே சேமித்து மாநகராட்சி சார் பில் வீடு வீடாக சென்று பெற்று கொள்ளும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. அதிகளவு குப்பைகளை தருபவர்க ளுக்கு அதற்கேற்ப தொகை வழங்கப்படும் என்றார்.

 

மாநகரில் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த ஆண்டிற்குள் முடிக்க திட்டம்

Print PDF

தினகரன்       08.09.2014

மாநகரில் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த ஆண்டிற்குள் முடிக்க திட்டம்

கோவை, : கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின்படி இந்த ஆண்டிற்குள் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் முடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவுசெய்துள்ளது.

 சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின்படி குடிசை பகுதி வாழ் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரையில் 44,870 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கோவையில் உக்கடம், அம்மன் குளம் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்ப ட்டு வருகிறது. இதில், உக் கடம் பகுதி ஒன்றில் ரூ.118.48 கோடியில் 2,232 அடுக்குமாடி குடியிருப்புகள், உக்கடம் பகுதி 2ல் ரூ.33.96 கோடியில்  816 அடுக்குமாடி குடியிருப்புகள், அம்மன் குளம் பகுதியில் ரூ.23.44 கோடியில் 792 வீடுகள் மற்றும் உக்கடம் பகுதி 3ல் ரூ.435.43 கோடியில் 9,600 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.611.31 கோடியில் 13 ஆயிரத்து 440 குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், தற்போது 2,632 குடியிருப்புகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டிற்குள் 3,904 குடியிருப்புகளை முடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இப்பணிகளை முடித்து உடனடியாக 6,904 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க தொடர்பு கொள்ளலாம்

Print PDF

தினகரன்      08.09.2014

நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க தொடர்பு கொள்ளலாம்


கோவை, : கோவையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்புறங்களில் வாழும் மக்கள் தமக்கு தேவையான காய்கறிகளை தாமே பயிரிட்டு கொள்ள தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டம் தற்போது கோவை மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது. காய்கறிகளை எளிய முறையில் வீட்டின் மேல் வளர்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ1,352க்கு தோட்டக்கலை துறையால் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க 16 ச.மீ இடம் போதுமானது. ஒவ்வொரு பயனாளிகளும் 5 தளைகள் வரை அதிகபட்சமாக பெறமுடியும்.

இத்திட்டத்தின் தனி சிறப்பாக பத்து வகையான காய்கறி விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு தென்னை நார் கழிவு கட்டியுடன் கூடிய 20 பாலிதீன் பைகள் வழங்கப்படவுள்ளது. இவை எடை குறைவாகவும் மற்றும் கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும். தரையில் விரிக்கப்படும் பாலிதீன் விரிப்புகள் வீட்டினுள் நீர்கசிவு ஏற்படாமல் இருக்க தடுக்கிறது.

நீரில் எளிதாக கரையும் உரங்களை பயன்படுத்துவதால் செடிகள் செழிப்பாக வளரும். இயற்கை முறையிலான பூச்சிகொல்லி மற்றும் பூஞ்சான கொல்லிகள் பயன்படுத்துவதால் நஞ்சற்ற காய்கறிகளை விளைவிக்கலாம். இவைகளுடன் பிளாஸ்டிக் கைத்தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாலி, மண் அள்ளும் கருவி, மண்கிளரும் கருவி ஆகியவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கோவை நகரில் தோட்டக்கலை துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட 4 வாகனங்கள் மூலம் இத்திட்டத்தின் இடுபொருள்கள் பயனாளிகளின் இல்லத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இத்திட்டம் துவங்க ஆர்வமுள்ள சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, போத்தனூர், சூலூர் பகுதியினர் 99655-62700, 97864-86143. சர்க்கார் சாமக்குளம், காளப்பட்டி, சரவணம்பட்டி, காந்திபுரம்,  கணபதி பகுதியினர் 95784-52676, 97875-55692. ஆர்.எஸ்.புரம், பி.என்.புதூர், ராமநாதபுரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதியினர் 97919-98833, 96598-52087.

சாய்பாபா காலனி, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டர் மில், துடியலூர் பகுதியினர் 95245-89749, 94888-36480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 08 September 2014 09:41
 


Page 57 of 3988