Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி

Print PDF

தினமணி      04.09.2014

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி


    புகைப்படங்கள்

மாநகராட்சி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து பார்வையிட்ட (இடமிருந்து) துணை ஆணையர் (சுகாதாரம்) ஆனந்த், மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பென்ஜமின்.

மாநகராட்சி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து பார்வையிட்ட (இடமிருந்து) துணை ஆணையர் (சுகாதாரம்) ஆனந்த், மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பென்ஜமின்.

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

அறுவை சிகிச்சை பிரசவங்களே தற்போது அதிக அளவில் நடைபெறுகின்றன. யோகா பயிற்சியால் கர்ப்பிணிப் பெண்களின் இடுப்பு எலும்பு தசைகள் வலுப்பெறுவதுடன், மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சுகப் பிரசவ வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிகழ் நிதியாண்டின் மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடபழனியில் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையில் இலவச யோகா பயிற்சித் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

அனைத்து மண்டலங்களிலும் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையில் பிரதி செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை தகுதியான ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், சம்பந்தபட்ட மண்டலங்களிலுள்ள மகப்பேறு மருத்துவமனை அலுவலரை அணுகலாம்.

 

சொத்து வரி முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள்

Print PDF

தினமணி     04.09.2014

சொத்து வரி முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள்

சொத்து வரி விவரங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

2014-15-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தும் காலக்கெடு முடிவடைந்துவிட்டது. எனவே, நிலுவைத் தொகை இருந்தால், அதை மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

மேலும் ஏற்கெனவே செலுத்தப்பட்ட சொத்து வரி விவரத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதை சம்பந்தப்பட்ட உதவி வருவாய் அலுவலருக்குத் தெரிவிக்கலாம். இதற்காகத் தனியே சிறப்பு முகாம்கள் செப்டம்பர் மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும். முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடைபெறும்.

காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் உரிய விவரங்களுடன் உதவி வருவாய் அலுவலரை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு 1913 என்ற இலவச எண்ணிலோ, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

மண்டலம்    உதவி வருவாய்    கோட்டங்கள்    கைப்பேசி            அலுவலர்  

1     எஸ். பாஸ்கரன்    1 முதல் 14    9445190081

2     என். பாலசந்தர்    15 முதல் 21    9445190082

3    என். பாலசந்தர்     22 முதல் 33     9445190083

4    ஆர். மோகன் சாய்    34 முதல் 48    9445190084

5     கே. சுந்தர்ராஜ்     49 முதல் 63     9445190085

6     எஸ். ரவி     64 முதல் 78    9445190086

7    எம்.டி. கிஷோர் குமார்    79 முதல் 93     9445190087

8    கே.பி. பானுசந்திரன்     94 முதல் 108     9445190088

9     பி.பி. மகேந்தர்     109 முதல் 126     9445190089

10    கே. ரவிச்சந்திரன்     127 முதல் 142    9445190090

11     ஜி.டி. கிரிதர்     143 முதல் 155     9445190091

12    அந்தோணி   அற்புதராஜ்     156 முதல் 167     9445190092

13     பி. தமிழ்     170 முதல் 182     9445190093

14     பி. ஜோசப் தங்கராஜ்     168, 169, 183, முதல் 191    9445190094

15    எம்.கே. அப்துல் ரவூப்     192 முதல் 200 9445190095

 

செப். 6 முதல் மாநகராட்சிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம்

Print PDF

தினமணி       01.09.2014

செப். 6 முதல் மாநகராட்சிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம்

பாஜக தலைமையிலான 3 தில்லி மாநகராட்சிகளிலும் இம்மாதம் 6 முதல் 20ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மை இயக்கம் நடைபெறும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவரும், தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவருமான சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தத் தூய்மை இயக்கத்தின்போது காலி இடங்கள், ரயில்வே இருப்புப்பாதை அருகில் உள்ள பகுதிகள், வழக்கமாக குப்பை கொட்டப்படும் தெரு முனைகள் ஆகியவை பராமரிக்கப்படும்.

மாநகராட்சிகளின் துப்புரவு ஆய்வாளர்கள், முதன்மைப் பொறியாளர்கள், மண்டல துணை ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூய்மைப் பணிகளை ஆய்வு மேற்கொள்வர். குறிப்பாக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2 காலனி குடியிருப்புகள் தூய்மைப்படுத்தப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள்.

மாநகராட்சிகளின் மேயர்கள், நிலைக் குழுத் தலைவர்கள, ஆணையர்கள் ஆகியோர் இந்தத் தூய்மை இயக்கத்தின்போது திடீர் ஆய்வு மேற்கொள்வர். மேலும், தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி உறுப்பினர்கள், மண்டலத் தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பார்கள். தூய்மை இயக்கத்தைத் தொடர்ந்து, இம்மாதம் 25 முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2 வரை தூய்மை மற்றும் சுகாதார வாரம் கடைப்பிடிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 59 of 3988