Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள்

Print PDF

தினமணி            17.02.2014

பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள்

பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்படும் என்று, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரு பைரசந்திரா வார்டில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது:

பெங்களூருவில் குப்பை பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது பொதுமக்களின் கடைமையாகும்.

குப்பைகளை சேகரித்து, அதை வகைப் பிரித்து குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குப்பைகளை போட வேண்டும். குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 198 வார்டுகளில் அறிவியல் ரீதியான திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.  மேயர் சத்தியநாராயணா பேசியது:

வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும். 198 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. அனந்த்குமார், எம்.எல்.ஏ. விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்: நாளை தொடக்கம்

Print PDF

தினமணி            17.02.2014

சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்: நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 இடங்களில் சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் திங்கள்கிழமை (பிப். 17) முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பிப். 17, 18 மற்றும் 20-ம் தேதிகளில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 660 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் தாய்சேய் நலம் மற்றும் குழந்தைகள் நலம் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வர உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 9 வட்டாரங்கள் மற்றும் 4 நகராட்சிகளிலும் 15 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி நாகர்கோவில் நகராட்சியில், மறவன்குடியிருப்பு செயின்ட் மேரி தொடக்கப் பள்ளி, கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப் பள்ளி, ஒழுகின சேரி என்.எஸ்.கே. அரசு உயர் நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

பத்மநாபபுரம் நகராட்சியில்,  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், குழித்துறை நகராட்சியில் மாடவிலாசம் அரசு நடுநிலைப் பள்ளியிலும், குளச்சல் நகராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளன.

குருந்தன்கோடு வட்டாரத்தில் கடியப்பட்டணம் ஸ்கேர்டு ஹார்ட் உயர்நிலைப் பள்ளியிலும், மேல்புறம் வட்டாரத்தில் அண்டுகோடு பி.பி.எம் மேல்நிலைப் பள்ளியிலும், ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் தர்மபுரம் எல்.எம்.எஸ். நடுநிலைப் பள்ளியிலும், அகஸ்தீசுவரம் வட்டாரத்தில்  கன்னியாகுமரி புனித ஜோசப் தொடக்கப் பள்ளியிலும், கிள்ளியூர் வட்டாரத்தில் பள்ளியாடி புனித வியானி மேல்நிலைப் பள்ளியிலும், தோவாளை வட்டாரத்தில்  தோவாளை வடக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தக்கலை வட்டாரத்தில் திருவிதாங்கோடு மலையாளப் பள்ளியிலும், முன்சிறை வட்டாரத்தில் மங்காடு அரசு நடுநிலைப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டாரத்தில் வியன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில் கர்ப்பிணி களுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்குதல், ரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் பெண்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்குப் பரிந்துரைத்தல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி

உதவி திட்டத்தில் பதிவு செய்தல், 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா திறப்பு

Print PDF

தினமணி            17.02.2014

தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா திறப்பு

தருமபுரியில் ரூ. 35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி நகரின் மையப்பகுதியில் நகராட்சி சார்பில் பளுப்புக்குட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவை முறையாகப் பராமரிக்காததால், முள்புதர்கள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது.

பூங்காவை அனைவரும் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, பூங்காவைப் புதுப்பிக்க நகராட்சி சார்பில் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், கண்ணைக் கவரும் வகையில் செயற்கை நீருற்றுகள், புல்தரைகள், ஊஞ்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டன.

நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பூங்காவைத் திறந்துவைத்தார்.

பாலக்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

 


Page 68 of 3988