Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

விதியை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்

Print PDF

தினமணி               15.02.2014

விதியை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்

கொட்டிவாக்கத்தில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொட்டிவாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, எண்:1-30 என்ற முகவரியில் தரைத்தளத்துடன் கூடிய இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கட்டடம் வணிகப் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வந்தது.

இது குறித்து அந்தக் கட்டடத்தின் உரிமையாளருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கட்டடம் திருத்தியமைக்கப்படாததால் வியாழக்கிழமை அக்கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

"பல்லாவரம் பாதாள சாக்கடைத் திட்டத்தில் கட்டணத்தைக் குறைக்க இயலாது'

Print PDF

தினமணி               15.02.2014

"பல்லாவரம் பாதாள சாக்கடைத் திட்டத்தில் கட்டணத்தைக் குறைக்க இயலாது'

பல்வேறு கடனுதவிகள் மூலம் நிறைவேற்றப்படும் குடிநீர்,பாதாளச்சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய கட்டமைப்பு மேம்பாடுத் திட்டங்களில் கட்டணத்தைக் குறைக்க இயலாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும். இந்தப் பணியில் அரசுக்கு சேவை நோக்கம் மட்டுமே உள்ளது.

வணிகநோக்கு துளியும் கிடையாது என்று பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.தன்சிங் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வரும் பல்லாவரம் நகராட்சியில்,உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில்,2006ல் தொடங்கப்பட்ட பாதாளச்சாக்கடைத் திட்டம்,ஆட்சி மாற்றம்,கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு தடைகளையும்,சிரமங்களையும் தாண்டி 2012ல் நிறைவேற்றப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

சுமார் ரூ.32 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டம் ரூ.74 கோடியாக உயர்ந்து,6 ஆண்டுகளுக்குப்பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு நிதி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டி அதிகரித்து,திரும்பச் செலுத்த வேண்டிய தொகையும் உயர்ந்து விட்டது.

கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் பாதாளச் சாக்கடைத்திட்டத்திற்காகப் பெறப்பட்ட கடனுக்கு ஏற்ப,கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு,ஒரு வீட்டிற்கு கழிவுநீர் கட்டணம் ரூ150 விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல்லாவரம் நகராட்சியில் உள்ள பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மாநகராட்சியைவிட இங்கு கழிவுநீர் கட்டணம் அதிகமாக உள்ளது. கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி வருவாய்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதுபாதாளச் சாக்கடைத் திட்டம் தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முறையாக விவாதித்து,அனுமதி பெற்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி,பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளை அதிகரிக்கும்போது வரி மட்டுமல்லாமல்,சொத்தின் மதிப்பு,வீட்டு வாடகை உள்ளிட்டவை உயர்வதும் தவிர்க்க முடியாது. தற்போது நிறைவேற்றப்பட்டுவரும் பல்லாவரம் -பம்மல் கூட்டுக்குடிநீர் திட்டம்,திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களினால் பயன்பெறும் பொதுமக்கள், அவற்றையெல்லாம் அரசு வழங்கும் விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் போன்று இலவசமாகப் பெற சாத்தியமல்ல என்பதை உணர வேண்டும்.

இவற்றை மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்கள்,படித்த பண்பாளர்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தான் பொதுமக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் நிசார் அகமது,ஆணையர் ராமமூர்த்தி ஆகியோர் கூறியதாவது, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு,அதிக வரி விதித்து துன்புறுத்தும் நோக்கம் இல்லை.

வசதிகளைப் பெறும்போது அதற்கான நியாயமான விலையும் தரவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றனர்.

 

இதுவரை ரூ. 340 கோடி சொத்து வரி வசூல்; தொழில் வரி ரூ. 148 கோடி

Print PDF

தினமணி               15.02.2014

இதுவரை ரூ. 340 கோடி சொத்து வரி வசூல்; தொழில் வரி ரூ. 148 கோடி

சென்னை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.340 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் வீடு வைத்துள்ளோரிடம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலிக்கிறது. மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி திகழ்கிறது. இந்த நிலையில் 2013-14-ஆம் நிதியாண்டில் ரூ. 340 கோடி மட்டுமே சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: 2013-14-ஆம் நிதியாண்டில், பிப்ரவரி 14-ஆம் தேதி வரையில் ரூ. 340 கோடி, சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் ரூ. 550 கோடி சொத்து வரி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ. 461 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டு முடிய இன்றும் ஒரு மாதம் வரை உள்ளதால், மேலும் வரி வசூலிக்கப்படும். இதன் மூலம் இலக்கு ஓரளவுக்கேனும் எட்டப்படும். இதேபோல, தொழில் வரியாக ரூ. 148 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ. 220 கோடி வசூல் செய்யப்பட்டது. இப்போது வருவாய் துறை அதிகாரிகளுக்கு அம்மா உணவகப் பணி, தேர்தல் பணி போன்ற பல்வேறு பணிகள் இருக்கின்றன. இந்த நிலையிலும் இவ்வளவு அதிகமான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வரி வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 73 of 3988