Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு

Print PDF

தினத்தந்தி             14.02.2014

சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு
 
சென்னையில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்: விரைவில் திறக்க ஏற்பாடு

சென்னை, பிப். 14 - சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் ‘அம்மா உணவகம்’ செயல்பட்டு வருகிறது.

இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

6000 சதுர அடியில் மிகப்பெரிய அளவில் இங்கு உணவகம் செயல்பட்டு வருகிறது. நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் இங்கு விரும்பி சாப்பிடுகிறார்கள். மிக சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையில் முக்கியமான 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகம் திறக்க ஏற்பாடு நடந்து வந்தன.

இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, ராயபுரம் ஆர்.எஸ். ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, எழும்பூர் தாய்– சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம் கஸ்தூரிபாய் மகப்பேறு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி ஆகிய 6 இடங்களில் அம்மா உணவகம், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன.

நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.முற்றிலும் நீராவியில் இட்லி தயாரிக்க கூடிய வகையில் சமையலறை உருவாகிறது. இருக்கைகள், குடிநீர் வசதி, மின்விசிறி போன்றவை பொறுத்தப்படுகின்றன. இன்னும் 2 வாரத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராகி விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

குடியாத்தம் நகராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பில் பணியாளர்களுக்கு சீருடை நகரமன்ற தலைவர் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி             14.02.2014

குடியாத்தம் நகராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பில் பணியாளர்களுக்கு சீருடை நகரமன்ற தலைவர் வழங்கினார்

குடியாத்தம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள், அலுவலக உதவியாளர்கள், மேல்நிலைதொட்டி காவலர்கள், குடிநீர் பணியாளர்கள், மின் பணியாளர்கள், இரவு காவலர் ஆகியோருக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் என்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் எஸ்.அமுதா கலந்து கொண்டு, பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், கவுன்சிலர்கள் கம்பன், சுரேஷ், மீனாட்சி, துப்புரவு ஆய்வாளர்கள் பிரகாஷ், களப்பணி உதவியாளர் பிரபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் நகராட்சி தலைவர் தலைமையில் பூமிபூஜை

Print PDF

தினத்தந்தி             14.02.2014

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் நகராட்சி தலைவர் தலைமையில் பூமிபூஜை

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது.

காய்கறி கழிவுகள்

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36–வது வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் மூலம் மண்புழு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காய் கறி, பழங்கள், மனித கழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி திட்ட மிட்டு உள்ளது. பொள்ளாச்சி யில் உள்ள திரு.வி.க. மார்க் கெட், காந்தி மார்க்கெட், தேர் நிலை மார்க்கெட் ஆகிய 3 பகுதி களில் இருந்தும் தினமும் 5 டன் மக்கும் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.

இந்த கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு (பயோ கியாஸ்) தயாரிக்க மாட்டு சந்தை அருகே 500 சென்ட் பரப் பளவில் இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. இதற் காக ரூ.1 கோடி அரசு மானியம் வழங்கி உள்ளது.

பூமிபூஜை

பொள்ளாச்சி காந்தி மார்க் கெட்டில் காய்கறிகழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு பூமிபூஜை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கமிஷனர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் என்ஜீனியர் ராஜா, கவுன்சிலர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

மின்சாரம் தயாரிக்க திட்டம்

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

மார்க்கெட்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி, பழக் கழிவுகளை கொண்டு, அதில் இருந்து கார்பன்–டை– ஆக் சைடை பிரித்து எடுக்கப் படுகிறது. அதன்பின்னர் கிடைக்கும் சுத்தமான மீத் தேனை எடுத்து ஜென ரேட்டர் இயக்கப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படு கிறது. இந்த பணிகளை 3 மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளது.

இதேபோன்று மனித கழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது. இதற்காக பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் இடம் தேர்வு செய் யப்பட்டு உள்ளது. கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மின் சாரம் முழுவதும் நகராட்சி தேவைக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 


Page 75 of 3988