Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

Print PDF

தினமணி             12.02.2014

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

பணி மாறுதலாகிச் செல்லும் திருவண்ணாமலை நகராட்சி ஆணையருக்கு, நகராட்சி ஊழியர்கள் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் பெ.விஜயலட்சுமி. இவர், காரைக்குடி நகராட்சி ஆணையராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் சார்பில் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு, அலுவலக மேலாளர் பழனி தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலக ஊழியர்கள் மாறுதலாகிச் செல்லும் ஆணையரைப் பாராட்டிப் பேசினர். ஆணையர் பெ.விஜயலட்சுமி ஏற்புரை வழங்கினார். ஆணையருக்கு அலுவலக ஊழியர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், நகராட்சிப் பொறியாளர் ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர் வினோத் கண்ணா, நகர் நல அலுவலர் அஜந்தா, சமூக ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா, செல்வராணி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயசந்திரா

Print PDF

தினமணி             12.02.2014

வீட்டு வசதி திட்டங்களுக்கு  ரூ. 890 கோடி ஒதுக்கீடு:  அமைச்சர் ஜெயசந்திரா

கர்நாடக வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.

பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடம் செவ்வாய்க்கிழமை குறைகளை கேட்டறிந்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகûளை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. 

முந்தைய பாஜக அரசு, வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு அதற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது.

தேசிய அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டாலும், வருவாய் பெருக்குவதில் கர்நாடக அரசு பின்தங்கவில்லை. 

விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு முந்தைய பாஜக அரசு ரூ. 900 கோடி ஒதுக்கியது. மீதமுள்ள ரூ. 3 ஆயிரம் கோடியை காங்கிரஸ் அரசு ஒதுக்கியது. 

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பாஜக அரசு, பொதுப் பணித் துறையில் வைத்திருந்த ரூ. 280 கோடி பாக்கியை எங்கள் அரசு அளித்துள்ளது.
 தும்கூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதா மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதா தொடர்பாக குறித்து அரசு இன்னும் யோசிக்கவில்லை. 

மகாராஷ்டிரத்தில் அமல்படுத்தியுள்ள மூடநம்பிக்கை தடை சட்ட மசோதாவை தொடர்பான சாதக, பாதகங்களை ஆராய்ந்து, நம்பிக்கை, மதம், மனித உரிமை ஆகியவற்றுக்கு பாதகமில்லாமல் புதிய சட்டத்தை உருவாக்கப்படும் என்றார் அவர்.

 

யானைக்கால் கொசு ஒழிப்புப் பணி

Print PDF

தினமணி             12.02.2014

யானைக்கால் கொசு ஒழிப்புப் பணி

தருமபுரி நகராட்சிப் பகுதிகளில் யானைக்கால் கொசு ஒழிப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகராட்சியின் 32, 33-ஆவது வார்டுகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விஜயலட்சுமி தலைமையில் இளநிலை பூச்சியியல் வல்லுநர் சேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜம்புலிங்கம், நகராட்சி சுகாதார அலுவலர் முனிராஜ் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று கொசுமருந்து தெளித்தல் பணிகளைச் செய்தனர்.

அதேபோல, யானைக்கால் நோய் கண்டறிய கணக்கெடுப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

 


Page 82 of 3988