Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி வரி வசூலர்களுக்கு "டேப்லெட்' கணினிகள்

Print PDF

தினமணி             12.02.2014

மாநகராட்சி வரி வசூலர்களுக்கு "டேப்லெட்' கணினிகள்

கோவை மாநகராட்சியில் வரி வசூலர்களுக்கு டேப்லெட் கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி மைய அலுவலகக் கூட்ட அரங்கில் மேயர் செ.ம.வேலுசாமி டேப்லெட் கணினிகளை வழங்கினார். ஆணையர் க.லதா முன்னிலை வகித்தார். இவற்றை வழங்கி மேயர் செ.ம. வேலுசாமி பேசியது:

÷டேப்லெட் கணினி வழங்கப்பட்டதன்மூலம் விரைவாக மக்களுக்கு சேவை வழங்கப்படும். சொத்துவரி விதிக்கத் தேவையான விவரங்கள் இதில் பதிவு செய்யப்பட்டு, சொத்துவரி கணக்கீடு கணினி மூலம் விரைவாக மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சிப் பகுதியில் விடுபட்ட கட்டடங்கள் மற்றும் உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்களை புகைப்படம் எடுத்து கணினியில் பதிவு செய்து உரிய வரிவிதிப்புக் கணக்கீடு மேற்கொள்ளப்படும்.

÷டேப்லெட் கணினியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களைப் பதிவு செய்யத் தேவையான மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 60 வரி வசூலர்களுக்கும் 5 உதவி வருவாய் அலுவலர்களுக்கும் டேப்லெட் கணினி வழங்கப்படும்.

மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் 2,944 மாதாந்திர வாடகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை வாடகை உரிமம் பெற்றுள்ளவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் வாடகை பாக்கி செலுத்த வேண்டிய விவரங்களை கைபேசி வழியாக தெரிந்துகொள்ளும் வசதியும் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகக் கடைகளுக்கும் புதிய வாடகை புத்தகம் மற்றும் அந்தந்தக் கடைகளுக்கான விவரங்கள் அடங்கிய உரிம அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் மூலம் கடை வாடகை உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனுக்குடன் வாடகை நிலுவைகளை ரொக்கமாகவோ, வரைவோலையாகவோ அந்தந்த மண்டலங்களில் செலுத்தலாம் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

உதவி ஆணையர்கள் சுந்தரராஜ், செந்தில்குமார், சுப்ரமணியன், சரவணன், அமல்ராஜ், மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

Print PDF

தினமணி             12.02.2014

நகரில் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்

மதுரை மாநகராட்சி பகுதியில் 4 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பிப். 12 (புதன்கிழமை) தென்கரை பகுதியில் ரேஸ்கோர்ஸ், செல்லூர், புதூர், மருதங்குளம், ராஜாஜி பூங்கா, அண்ணாநகர், கோரிப்பாளையம், சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டிகள் மூலம் குடிநீர் பெறும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வடகரை பகுதியில், கீழமாரட் 1-ஆவது பகிர்மானம், அரசரடி மேல்நிலைத்தொட்டி, பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி, ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி-1, ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி-2 விநியோக பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

பிப். 13 (வியாழக்கிழமை) தென்கரை பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 4 மணி முதல் 7 மணிவரை: ஆரப்பாளையம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான எல்லீஸ்நகர், எஸ்.எஸ். காலனி, மகபூப்பாளையம், அன்சாரி நகர் பகுதிகள்.

காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை: பழங்காநத்தம் மேல்நிலைத்தொட்டி 2-வது பகிர்மானப் பகுதிகளான பசும்பொன் நகர், கீழத்தெரு, மருதுபாண்டியர் தெரு, பழங்காநத்தம், நேருநகர், மாடக்குளம், விகேபி நகர், வடக்குத்தெரு.

பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை: அரசரடி கீழ்நிலைத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

பிற்பகல் 2.30 முதல் 6 மணி வரை: ஜான்சிராணி மேல்நிலைத்தொட்டி 2-வது பகிர்மானம் பகுதிகளான தென்னோலைக்காரத்தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்குமாரட் வீதி, தெற்குவெளி வீதி, நாடார் வித்யாசாலை, மீன்கடை, கு.கு.சாலை, மகால் மற்றும் பந்தடி தெருக்கள்.

மாலை 6 முதல் இரவு 11 மணி வரை: ஜோசப் பார்க் மேல்நிலைத்தொட்டி 1 மற்றும் சன்னியாசி ஊருணி மேல்நிலைத்தொட்டி பகுதிகளான காமராஜர்புரம் பகுதிகள், பாலரெங்காபுரம், சின்னக்கண்மாய், பங்கஜம் காலனி, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு, மீனாட்சிநகர், அனுப்பானடி பகுதிகள், நரசிம்மபுரம், நவரத்தினபுரம் பகுதிகள், சீனிவாசன் பெருமாள் கோவில்தெரு, ரசாயன பட்டறை, கீழச்சந்தைப் பேட்டை.

இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை: அரசரடி கீழ்நிலைத் தொட்டியிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.

வடகரை பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்:

காலை 3.30 முதல் 6 மணி வரை:ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான வல்லபாய் சாலை, ஜவஹர்சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காக்கைப்பாடினியார் பள்ளி, ராமமூர்த்தி சாலை, பாரதிஉலா சாலை, சிங்கராயர் காலனி, நரிமேடு மெயின் ரோடு, பிடிஆர் சாலை, பீபீகுளம், பெசன்ட் சாலை.

காலை 4 முதல் 6 மணி வரை: செல்லூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகள்.

காலை 6 முதல் மாலை 4 மணி வரை: புதூர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான அழகர்நகர் 1 முதல் 7 தெருக்கள், கற்பக நகர் 4 முதல் 14 தெருக்கள், லூர்துநகர், ராமலட்சுமிநகர், காந்திபுரம், பெரியார்நகர், கன்னிமாரியம்மன் கோவில் தெரு, கற்பக விநாயக கோவில் தெரு.

காலை 6 முதல் மாலை 5 மணி வரை: ராஜாஜி பூங்கா மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான நரிமேடு, சாலை முதலியார் தெரு, தாமஸ்வீதி, சின்னசொக்கிகுளம், சரோஜினி தெரு, கமலா 1,2 தெருக்கள், கோகலே சாலை, பிடி காலனி, இந்திராநகர், கோரிப்பாளையம், சாலமுத்து தெரு, கரும்பாலை கிழக்குத்தெரு, காந்திநகர்.

காலை 6 முதல் பகல் 12 மணி வரை: கேகே நகர் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான மகாத்மா காந்தி 1முதல் 8 தெருக்கள், பழைய எல்ஐஜி காலனி, புதிய எல்ஐஜி காலனி, ஏரிக்கரை சாலை, மானகிரி, டிஆர்ஓ காலனி, காமராசர் நகர்.

மாலை 5 முதல் இரவு 7 மணி வரை: கோரிப்பாளையம்-சொக்கிகுளம், அண்ணாநகர் பகுதிகள்.

இரவு 7 முதல் பகல் 12.30 மணி வரை: சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி விநியோகப் பகுதிகளான நல்லமுத்துப்பிள்ளை, மேலத்தோப்பு, லாடபிள்ளை மற்றும் காளியம்மன் கோவில் தெரு, கிழக்குத்தெரு, மணிகண்டன் நகர், பாரதியார் தெரு, நந்தவனம், வில்லாபுரம் மெயின்ரோடு பகுதிகள்.

 

மதுரை மாநகராட்சியில் தேர்தல் பணிக்காக புதிதாக துணை வட்டாட்சியர் நிலையில் இருஅதிகாரிகளை நியமிக்க அரசுக்கு பரிந்துரை

Print PDF

தினமணி             12.02.2014

மதுரை மாநகராட்சியில் தேர்தல் பணிக்காக  புதிதாக துணை வட்டாட்சியர் நிலையில் இருஅதிகாரிகளை நியமிக்க அரசுக்கு பரிந்துரை

மக்களவைத் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த புதிதாக 2 துணை வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகளை உதவி ஆணையர் பணியில் அமர்த்த அரசுக்கு ஆணையாளர் கிரண்குராலா பரிந்துரை செய்துள்ளதாக, மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியில், தற்போது துணை வட்டாட்சியர் நிலையில் மேற்கு மண்டல உதவி ஆணையாó ரெகோபெயாம், கிழக்கு மண்டல உதவி ஆணையாó சின்னம்மாள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இது தவிர தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளரான அ.தேவதாஸ், வடக்கு மண்டல உதவி ஆணையாளராக கூடுதல் பொறுப்பும் வகித்து வருகிறார். உதவி ஆணையாளர் கணக்கு தவிர்த்து துணை வட்டாட்சியர் நிலையில் மேலும் 2 பணியிடங்கள் மாநகராட்சியில் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு பொறுப்பு நிலையிலான அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் பணியில் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் (4 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி) மாவட்ட தேர்தல் அலுவலரான, ஆட்சியருக்கு அடுத்த நிலையில் பணியாற்ற மாநகராட்சியிலிருந்து துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் பணியமர்த்தப் பட வேண்டும். இந்தப் பணியில் மண்டல உதவி ஆணையர்கள் ஈடுபடுத்தப்படுவது வாடிக்கை. அந்த வகையில், ரெகோபெயாம், சின்னம்மாள் மட்டுமே துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்களாக இருப்பதால், மேலும் 2 துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்களை நியமிக்க அரசுக்கு ஆணையாளர் கிரண்குராலா பரிந்துரை செய்துள்ளார்.

அரசு தரப்பில் 2 துணை வட்டாட்சியர்கள் ஒதுக்கீடு செய்யப்படாத பட்சத்தில், மாநகராட்சியில் அந்த நிலையிலான அலுவலர்களை ஆணையாளர் நியமித்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்படும். இதற்கான முன்னேற்பாடாக, பொறியியல் பிரிவிலிருந்து துணை வட்டாட்சியர் நிலையிலான 2 அலுவலர்களை மண்டல உதவி ஆணையர்களாகவும், தேர்தல் அலுவலர்களாகவும் நியமிக்க ஆணையாளர் மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 


Page 83 of 3988