Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பல் மருத்துவ முகாம்

Print PDF

மாலை மலர்              12.02.2014

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பல் மருத்துவ முகாம்
 
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பல் மருத்துவ முகாம்
சென்னை, பிப்.12 - சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, பல்மருத்துவ தொடக்க முகாம் அண்ணாநகர், கோட்டம் 102-ல் அமைந்துள்ள டி.பி.சத்திரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 8.00 மணியளவில் மேயர் சைதை துரைசாமி தலைமையில் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.கோகுலஇந்திரா தொடங்கி வைக்க உள்ளார்.

சிறப்பு பல்மருத்துவ முகாம் 5 நாட்கள் (பிப்ரவரி-12, 13, 14, 17 மற்றும் 18) தொடர்ந்து நடைபெற உள்ளது. இம்முகாம்களில் பல் சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் உள்ள 6,600 நபர்களுக்கு பல் பரிசோதனையும் தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சைகளும் வழங்கப்படும். மேலும் புகையிலை விழிப்புணர்வு மற்றும் வாய் புற்று நோய் கண்டறிதல் ஆகிய சேவைகளும் வழங்கப்படும்.
 

பிப்.17-இல் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்

Print PDF

தினமணி             11.02.2014

பிப்.17-இல் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்

பெங்களூரு மாநகராட்சியின் 2014-15-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 17-ஆம் தேதி மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மாநகராட்சி மேயர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

2014-15-ஆம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் வருகிற 17-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும். இதைத் தொடர்ந்து பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிகழாண்டு நடைமுறை சாத்தியமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்.20,21 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.

"நமது பெங்களூரு, எனது பங்களிப்பு' என்ற திட்டத்தில் பங்கெடுக்க மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் ஆர்வம் காட்டியுள்ளன. இந்தக் கல்லூரிகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வெகுவிரைவில் நடத்தப்படும்.

மாநகராட்சியின் மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளும், மாநகராட்சியின் பள்ளிகளை பொறியியல் கல்லூரிகளும் மேம்படுத்த அறிவுறுத்தப்படும். இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொள்வார் என்றார் அவர்.

 

ரூ.1 கோடி நிலம் மீட்பு

Print PDF

தினமணி             11.02.2014

ரூ.1 கோடி நிலம் மீட்பு

கோவையில் தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் எரு கம்பெனி பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 1250 சதுர அடி இடத்தை தனியார் கார் நிறுவனம் ஆக்கிரமித்திருந்தது. இந்த இடத்தில் கட்டடமும் கட்டப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கார் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் க.லதாவின் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்தனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 86 of 3988