Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

காங்கயம், வெள்ளக்கோவிலுக்கு ரூ.91 கோடியில் குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர்              11.02.2014

காங்கயம், வெள்ளக்கோவிலுக்கு ரூ.91 கோடியில் குடிநீர் திட்டம்

காங்கயம் : காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள் மற்றும் 528 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், 91.4 கோடி ரூபாய் செலவில், புதிய கூட்டு குடிநீர் திட்டத்துக்கான பணிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், வெள்ளக்கோவில் ஏரியா கடும் வறட்சி பகுதிகளான உள்ளன. நிரந்தர நீராதாரம் இல்லாமல், நிலத்தடி நீர் மற்றும் சிறிய குடிநீர் திட்டங்கள் மட்டுமே உள்ளன.

இதனால், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது; கோடை காலத்தில் மிக பெரிய பிரச்னையாக மாறி வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள், ஒன்றியங்கள் மற்றும் மூலனூர் ஒன்றிய கிராமங்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள 528 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த, தமிழக அரசு 91.4 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தினமும் 25 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கும் வகையில், நீர் உறிஞ்சு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

16 கி.மீ., தூரம் தண்ணீர் கொண்டு வந்து, இச்சிபாளையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும். மேட்டுக்கடை, வாலிகாடு பகுதியில் நீருந்து நிலையமும், 54 கி.மீ., தூரம், பெரிய அளவிலான பிரதான குழாய்கள், 500 கி.மீ., தூரம் பகிர்மான குழாய் அமைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள மூன்று லட்சம் மக்களுக்கு, தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகளை 14 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், காங்கயம், குண்டடம், தாராபுரம் ஒன்றிய கிராமங்கள், நகராட்சிகள், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 1,262 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், மேலும் 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்ட வடிவமைப்பு, டெண்டர் பணி முடிந்து, இன்னும் சில மாதங்களில் இப்பணியும் துவங்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தெருநாய்களை துரத்தி பிடிப்பது எப்படி? 15 பேருக்கு மாநகராட்சி பயிற்சி

Print PDF

தினமலர்              11.02.2014

தெருநாய்களை துரத்தி பிடிப்பது எப்படி? 15 பேருக்கு மாநகராட்சி பயிற்சி

கோவை : கோவை மாநகராட்சிக்கு, தெருநாய்களை பிடிக்க இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், துப்புரவு தொழிலாளர்கள் ௧௫ பேருக்கு, நாய் பிடிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாக, மத்திய பிராணிகள் நல வாரிய கணக்கெடுப் பில் தெரியவந்துள்ளது. தெருநாய்கள் பெருக்கத்தால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தெருநாய்களுக்கு விஷ ஊசி போட்டு கொல்வது, தடை செய்யப்பட்டுள்ளதால், அவற்றை பிடித்து, 'ஏபிசி' (அனிமல் பர்த் கன்ட்ரோல்) திட்டத்தில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, நாய் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. சீரநாயக்கன்பாளையத்தில், தெருநாய் கருத்தடை மையம் செயல்படுகிறது. கோவை உக்கடத்தில், தெருநாய் அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது மையம் துவங்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு, 14.99 லட்சம் ரூபாய் செலவில் தெருநாய் பிடிக்கும் இரண்டு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், தெருநாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாததால், இரண்டு புதிய வாகனங்களும், வ.உ.சி., பூங்காவில் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சி கமிஷனர் உத்தரவில், துப்புரவு தொழிலாளர்கள் ௧௫ பேருக்கு, சீரநாயக்கன்பாளையத்திலுள்ள நாய் கருத்தடை மையத்தில், நாய் பிடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மொத்தம் ௧௦ நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், தெருநாய் தொல்லை குறித்து புகார் வரும் பகுதிக்கு, புதிய வாகனங்களுடன் துப்புரவு தொழிலாளர்கள் சென்று, நாய்களை பிடிக்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகள்?பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Print PDF

தினமலர்              11.02.2014

விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகள்?பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி

சென்னை : சென்னையில் விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மாதம் 9ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், ஒரு குழு அமைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சீராய்வு கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டது.

இதன்படி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தலைமையில் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் சென்னையில் 2,099 விளம்பரதட்டிகள் அகற்றப்பட்டன. அரசாணைப்படி விளம்பர தட்டிகள் வைக்க வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்: விளம்பர தட்டிகள் வைப்போர், 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு 'படிவம் 1' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • நிலத்தை பொறுத்து தனியாரிடமோ, அரசு உதவி செயற்பொறியாளர்களிடமோ தடையில்லா சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  • பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என, காவல்துறையிடமும், விளம்பர தட்டிகள் வைக்கும் இடத்தில் வரைபடம் ஒன்றையும் படிவத்துடன் இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பம் கொடுத்த நாளில் இருந்து ஆறு நாட்களுக்கு மிகாமல் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்குவார்.
  • விளம்பரத்தின் கீழ்பகுதியில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் எண், அனுமதி காலம், விளம்பர தட்டிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரு அங்குல உயரத்திற்கு குறையாமல் அச்சிட வேண்டும்.
  • ஒரு விளம்பர தட்டிக்கு திரும்ப வழங்கப்படாத தொகை 200 ரூபாயும், திரும்ப வழங்கும் தொகை 50 ரூபாயும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி கருவூலத்தில் செலுத்தி, படிவத்துடன் ரசீதை இணைக்க வேண்டும்.
  • 10 அடி முதல் 20 அடி வரை அகலம் கொண்ட சாலையில் 4 அடி உயரம் 2.5 அடி அகலம் கொண்டதாகவும், அதிகபட்ச அளவாக 100 அடி அகலத்திற்கு மேல் உள்ள சாலைகளில் 15 அடி உயரம், 25 அடி அகலம் கொண்டதாகவும் விளம்பர பலகைகள் வைக்கலாம்.
  • சாலை ஓரங்கள், நடைபாதைகளில் விளம்பர வைக்க அனுமதி இருந்தால், சாலை மத்தியில் அனுமதி கிடையாது. சாலை மத்தியில் அனுமதி இருந்தால், நடைபாதை, சாலை ஓரங்களில் அனுமதி கிடையாது.
  • கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலை, தெரு முனை சந்திப்புகள், போக்குவரத்து தீவு உட்பட 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதிகள், நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள், சுற்றுலா தலங்கள், உருவ சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் விளம்பர தட்டிகளுக்கு அனுமதி கிடையாது.
  • அனுமதி காலம் முடிந்ததும் விளம்பர தட்டிகள் முறையாக அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

 


Page 88 of 3988