Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பெரியகுளம் வழியாக பேரூர்-கோவைபுதூர் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

Print PDF

தினகரன்              11.02.2014

பெரியகுளம் வழியாக பேரூர்-கோவைபுதூர் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

தொண்டாமுத்தூர், : கோவை அருகே பேரூர் பாரதிபுரத்தில் இருந்து புட்டுவிக்கி வழியாக கோவைபுதூர் மற்றும் உக்க டம் பகுதிகளை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செ ல்ல முடியாமல் இருந்தது. இதனால் கோவைபுதூர் பகுதியில் இருந்து பேரூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 4 கி.மீ தூரம் சுண்டக்காமுத்தூரை சுற்றி செல்ல வேண்டி இருந்தது. மேலும் இந்த ரோட்டில் இயக்கப்பட்டு வந்த மினி பஸ் நிர்வாகத்தினர் போக்குவரத்தை நிறுத்தி விட்டனர்.

இதுகுறித்து கவுன்சிலர்கள் பேரூர் மயில், புட்டுவிக்கி மணியன் ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நபார்டு வங்கி உதவி திட்டத்தில் பேரூர்-கோவைபுதூர் மற்றும் உக்கடம் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.

2 கி.மீ தூரத்திற்கு 3.75 மீட்டர் அகலத்தில் பேரூர் பெரி ய குளத்தின் கரையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கியது. பணிகளை பேரூராட்சி தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சசிகலா, துணைத்தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி பொ றியாளர் ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் பார்வையி ட்டு விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

 

ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்             10.02.2014 

ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நடவடிக்கை

ஓமலூர், : ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால்  ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரம் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் இணைப்பு மற்றும் முக்கிய நகரமாகும். பஸ் ஸ்டேண்டிற்¢கு போதுமான இடவசதி இருந்தும், இந்த பஸ் ஸ்டாண்ட்  போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஸ்கள் வந்து செல்ல போதுமான இடவசதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால், பல பஸ்கள் உள்ளே வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதன்படி, தர்மபுரி, மேட்டூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டேண்டிற்குள் வராமலேயே சென்று விடுகின்றன.

இந்தநிலையில் பஸ் ஸ்டாண்ட் கடை உரிமையாளர்கள், பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடைகளை பஸ் ஸ்டேண்டிற்கு உள்ளே நீட்டித்து பஸ்கள் வரமுடியாத வகையிலும், பயணிகள் நிற்கமுடியாத நிலையிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும்,  புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகளின் மூட்டைகள், பழக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நிழலுக்காக ஒதுங்கி நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதேபோல் பயணிகள் நடக்க முடியாத அளவில் நடைபாதை கடைகள்  ஆக்கிரமித்துள்ளன. கடைகள் ஓரமாக நின்றால் கடைகாரர்களின் கடுமையான பேச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

 இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்துக்கு ஆளான ஒருவர் ஒரு காலை இழந்தார். இது குறித்து வந்த பல்வேறு புகார்களை அடுத்து, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி மன்ற தலைவர் (பொ) பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி மேற்பார்வையில் பணியாளர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

குண்டம் திருவிழா நெருங்குவதால் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்             10.02.2014 

குண்டம் திருவிழா நெருங்குவதால் ஆனைமலை பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

ஆனைமலை, :  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சியுடன்  துவங்கியது. வரும் 15ம் தேதி நடக்கும் குண்டத் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி உடக்க உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து  பக்தர்கள் வருகை துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

 குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூற £க இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சப்-கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணியில் சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

 மாசாணியம்மன் கோயில் செல்லும் வழி மற்றும் சேத்துமடை ரோட்டருகே கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள பந்தல் பகுதி, நடைபாதை கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா முடியும்வரை ஆக்கிரமிப்புகள் எங்கெங்கு எல்லாம் உள்ளது என்பதை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 89 of 3988