Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

Print PDF

தினத்தந்தி             10.02.2014

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி அழைப்பு விடுத்து உள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பசுமை பூங்கா

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பசுமை பூங்கா திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக உருவாக்க இருக்கும் இந்த பசுமை பூங்காவில் பொதுமக்கள் பயன் படுத்தும் வகையில், மூலிகை செடிகள், தியானமண்டபம், ஒரு சிறியஅளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு ரெயில் வண்டி, பொழுது போக்குடன் கூடிய பூங்கா மேலும் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.36 லட்சம் மதிப்பில் நடைபாதைகள், அனுகுசாலைகள், மரக்கன்றுகள், சைக்கிள்தளம், 5 கண்டங்களில் உள்ள உலக அதிசயங்களின் மாதிரிகள், பொதுமக்களுக்கு உணவகம் அமைக்கப்பட உள்ளது.

பசுமை திட்டத்திற்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பசுமை ஆர்வலர்களிடம் ரூ.3 ஆயிரம் வைப்புதொகையாக பெற்றுகொண்டு அவர்களின் பெயரில் ஒரு மரம் வளர்த்து மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும்.

5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக உருவாக்கப்படும் பசுமை பூங்காவில் 1,500 மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு குமார் எம்.பி.யின் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் 2 எண்ணிக்கை கொண்ட உயர் அழுத்த மின் விளக்குடன் கூடிய மின்கம்பம் அமைக்கப்படுகிறது.

திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. பரஞ்சோதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் லட்சம் மதிப்பில் பசுமை பூங்காவில் அரங்கம் அமைக்கப்படுகிறது. மேலும், பசுமை திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாநகராட்சி அலுவலர்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினத்தந்தி             10.02.2014

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் அமைக்கப்பபடும் என்று மாநகராட்சி ஆணையர் தண்டபாணி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும் கழிவறைகள் போன்ற பொது சொத்துக்களை பராமரிக்க பயனாளிகள் குடும்பங்களை சேர்ந்த 400 சமுதாயம் சார்ந்த குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமை தாங்கி பேசியதாவது:–

திருச்சி மாநகராட்சியில் நான்கு கோட்டங்களில் 65 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டு ஒன்றுக்கு 1 மையம் என 11 பல்நோக்கு சேவை மையங்கள் அமைக்கப்படும். மேற்படி மையங்கள் மூலம் மாநகராட்சியில் அமைக்கப்படவுள்ள 395 பொது கழிப்பிடங்கள் சமுதாயம் சார்ந்த குழுக்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள் வழிகாட்டுதலுடன் பராமரிக்கப்பட உள்ளது. 1.2.2014–ந் தேதி முதல் இந்த மாநகராட்சி அனைத்து கழிப்பிடங்களுக்கான மின் கட்டணத்தினை பொதுநிதியிலிருந்து செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

நடவடிக்கை

மேலும் கழிப்பிடங்கள் பராமரிக்க கிருமிநாசினி மற்றும் உபகரணங்கள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும். இதன் மூலம் சமுதாயம் சார்ந்த குழுக்கள் பராமரித்து வரும் 75 கழிப்பிடங்கள் பயன்பெறும். இந்த கழிப்பிடங்கள் அமைந்துள்ள 250 மீட்டர் சுற்றளவு வரை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்படும். இதனை மீறி திறந்தவெளியில் மலம் கழிப்போர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகர் நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர் தனபாலன், உதவி செயற்பொறியாளர் சிவபாதம், சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

மதுரை மாநகராட்சி சார்பாக 2,051 பெண்களுக்கு ரூ.7 கோடிக்கு திருமண நிதிஉதவி 2 அமைச்சர்கள்– மேயர் வழங்கினர்

Print PDF

தினத்தந்தி             10.02.2014

மதுரை மாநகராட்சி சார்பாக 2,051 பெண்களுக்கு ரூ.7 கோடிக்கு திருமண நிதிஉதவி 2 அமைச்சர்கள்– மேயர் வழங்கினர்

மதுரை மாநகராட்சி சார்பாக ரூ.7 கோடி மதிப்பில், 2,051 பெண்களுக்கு பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டன.

திருமண நிதி உதவி

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டமான ஏழை பெண்களுக்கு திருமண உதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கும் விழா, மதுரை மாநகராட்சி சார்பாக ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கி பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினர்.

இந்தியாவுக்கே கிடைக்கும்

விழாவில் பட்டப்படிப்பு படித்த 882 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்த 1,069 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கம் என மொத்தம் 2 ஆயிரத்து 51 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து மதிப்பிலான திருமண நிதி உதவி, தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் வளர்மதி பேசியதாவது:– பெண்கள் தங்களின் திருமணத்திற்காக நிதியும், தாலிக்கு தங்கமும் பெற வேண்டும் என்பதற்காக முதல்–அமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் நோக்கம் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பது தான். இந்த திட்டத்திற்காக சமூக நலத்துறையின் மூலம் ஆண்டுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விலையில்லா அரிசி, திருமண உதவி திட்டம் என்று எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படாத இதுபோன்ற ல்வேறு திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களும் இந்த திட்டங்களின் பயன்களை பெறும் வகையில் வருகிற பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பசுமை வீடுகள்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது கூறியதாவது:–

தமிழ்நாட்டு ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்–அமைச்சர் எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். முதல்–அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 1.86 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். முதியோர் உதவித் தொகை ரூ.500–ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பசுமை வீடு திட்டத்தின் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீடுகள் கட்டி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 4,400 வீடுகள் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தமிழகத்தில் இதுவரை 71 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 261 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2023 ஆண்டில் தமிழ்நாடு ஆசியாவிலேயே சிறந்த நாடாக கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார் என்றார்.

குடிநீர் பற்றாக்குறை

மேயர் ராஜன் செல்லப்பா பேசும்போது கூறியதாவது:–

முதலமைச்சரின் உத்தரவுப்படி, மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக நிறைவேற்ற பட்டு வருகிறது. குறிப்பாக 80 சதவீத சாலை பணிகள் நிறைவடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலேயே மதுரை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் 3 ஆயிரத்து 432 பயனாளிகளுக்கு இதுவரை ரூ.12.45 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவியும் ரூ.12 கோடி மதிப்பிற்கும் மேலான 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார பிரிவு

விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம், ஏ.கே.போஸ், சாமி, தமிழரசன், கருப்பையா, சுந்தர்ராஜன், துணைமேயர் கோபாலகிருஷ்ணன், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர்நல அலுவலர் யசோதாமணி தலைமையில் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் செய்திருந்தனர்.

 


Page 91 of 3988