Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகள்

Print PDF

தினமணி              08.02.2014

மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகள்

மாநகராட்சியில் பிப்ரவரி 9இல் (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  மதுரை மாநகராட்சியில் வடகரை மற்றும் தென்கரைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் விநியோகிக்கப்படும் இடங்கள் மற்றும் நேர விவரம் தொடர்பான அறிவிப்பு வருமாறு:

  ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: வல்லபாய் சாலை, ஜவஹர் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காக்கைபாடினியார் பள்ளி, ராமமூர்த்தி சாலை, பாரதிஉலா சாலை, சிங்கராயர் காலனி, நரிமேடு பிரதான சாலை, பிடிஆர் சாலை, பீபி குளம் பெசன்ட் சாலை, அதிகாலை 3.30 முதல் காலை 6 வரை.  செல்லூர் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: காலை 4 முதல் காலை 6 வரை.

  புதூர் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: அழகர் நகர் 1 முதல் 7 தெருக்கள், கற்பக நகர் 4ஆவது தெரு முதல் 14ஆவது தெரு வரை, லூர்து நகர், ராமலட்சுமி நகர், காந்திபுரம், பெரியார் நகர், கன்னிமாரியம்மன் கோயில் தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு- காலை 6 முதல் மாலை 4 வரை.

  ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: நரிமேடு சாலை, முதலியார் தெரு, தாமஸ் வீதி, சின்னசொக்கிகுளம், சரோஜினி தெரு, கமலா 1, 2ஆவது தெருக்கள், கோகலே சாலை, பி.டி.காலனி, இந்திரா நகர், கோரிப்பாளையம், சாலைமுத்து சாலை, கரும்பாலை கிழக்குத் தெரு, காந்தி நகர், காலை 6 முதல் மாலை 5 வரை.

 கே.கே.நகர் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: மகாத்மா காந்தி 1ஆவது தெரு முதல் 8ஆவது தெரு வரை, பழைய எல்ஐசி காலனி, புதிய எல்ஐசி காலனி, ஏரிக்கரை சாலை, மானகிரி, டெப்டி கலெக்டர் காலனி, காமராஜர் நகர், காலை 6 முதல் பகல் 12 வரை.

  கோரிப்பாளையம், சொக்கிகுளம்,அண்ணாநகர் பகுதிகள்- மாலை 5 முதல் இரவு 7 வரை.

  சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: நல்லமுத்துப் பிள்ளை தெரு, மேலத்தோப்பு, லாடப்பிள்ளைத் தெரு, காளியம்மன் கோயில் தெரு, கிழக்குத் தெரு, மணிகண்டன் நகர், பாரதியார் தெரு, நந்தவனம், வில்லாபுரம் பிரதான சாலை, காலை 7 முதல் பகல் 12.30 வரை.

  ஆரப்பாளையம் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகள்: எல்லீஸ் நகர், எஸ்எஸ் காலனி, மகபூப்பாளையம், அன்சாரி நகர் பகுதிகள், காலை 4 முதல் காலை 7 வரை.

  பழங்காநத்தம் மேல்நிலைத் தொட்டி 2ஆவது பகிர்மானம்: பசும்பொன் நகர், கிழக்குத் தெரு, மருதுபாண்டியர் தெரு, பழங்காநத்தம், நேரு நகர், மாடக்குளம், விகேபி நகர், வடக்குத் தெரு, காலை 8 முதல் மதியம் 2 வரை.

  ஜான்சிராணி மேல்நிலைத் தொட்டி 2ஆவது பகிர்மானம்: தென்னோலைக்காரத் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு மாரட் வீதி, தெற்கு வெளிவீதி, நாடார் வித்யாசாலை, மீன்கடை, கு.கு.சாலை, மகால் மற்றும் பந்தடி தெருக்கள், பிற்பகல் 2.30 முதல் மாலை 6 வரை.

  ஜோசப் பார்க் மேல்நிலைத் தொட்டி மற்றும் சன்னியாசி ஊரணி மேல்நிலைத் தொட்டி பகுதிகள்: காமராஜர்புரம் பகுதிகள், பாலரங்காபுரம் மற்றும் சின்ன கண்மாய் பகுதிகள், பங்கஜம் காலனி, தெப்பக்குளம் பகுதிகள், தமிழன் தெரு, மீனாட்சி நகர் பகுதிகள், அனுப்பானடி பகுதிகள் முழுவதும், நரசிம்மபுரம், நவரத்தினபுரம் பகுதிகள், சீனிவாச பெருமாள் கோயில் தெரு, ரசாயனப் பட்டறை, கீழசந்தைபேட்டை,  மாலை 6 முதல் இரவு 11 வரை.

Last Updated on Monday, 10 February 2014 09:59
 

கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது

Print PDF

மாலை மலர்             08.02.2014 

கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது
 
கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது

சென்னை, பிப். 8 - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மறைமலைநகர், மணலி புதுநகரில், காலிமனை ஒதுக்கீடு, கோயம்பேடு, சாத்தாங்காடு பகுதியில் கடை ஒதுக்கீடு வழங்க கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் இன்று எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள 4 கடைகளுக்கும், சாத்தாங்காடு இரும்பு எக்கு அங்காடியில் 154 கடைகளுக்கு குலுக்கல் நடைபெற்றது.

சி.எம்.டி.ஏ. முதுமை கணக்கு அதிகாரி மலைச்சாமி முன்னின்று குலுக்கல் நடத்தினர்.

இதில் கோயம்பேட்டில் உள்ள 4 கடைகளுக்கு 261 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் வடிவேல், சுமதி, மதியழகன், சுசீலா சோதியா ஆகிய 4 பேர்களுக்கு கடை ஒதுக்கீடு கிடைத்தது.

இதேபோல் சாத்தாங்காட்டில் உள்ள 154 கடைகளுக்கு 27 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் குலுக்கலில் கடை கிடைத்தது.

45 நிமிடத்தில் குலுக்கல் முடிந்து கடைகள் ஒதுக்கப்பட்டது.

மறைமலைநகர் மற்றும் மணலி புதுநகரில் வீட்டு மனைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 12–ந்தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் குலுக்கல் நடக்கிறது. இதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வீடு, மாடி தோட்டங்களுக்கு மாநகராட்சி பரிசு

Print PDF

தினகரன்             08.02.2014 

வீடு, மாடி தோட்டங்களுக்கு மாநகராட்சி பரிசு

சென்னை, : சென்னை மாநகராட்சி எல்லையில் வீட்டு தோட்டம், மொட்டை மாடியில், பால்கனியில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தென்னை குலைகள் ஆகியவற்றின் கண்காட்சி வரும் 14, 15ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.

காய்கறி, பழங்கள், கீரைகள் மற்றும் தென்னங் குலைகள் ஆகியவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வழங்கப்படவுள்ளது. சென்னை மாநகரை, பசுமை மாநகராக உருவாக்க வீட்டுத் தோட்டம் வைத்திருப்போருக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விலையில்லா தென்னங்கன்று வழங்கப்பட உள்ளது.

இதில் பங்குபெற விருப் பம் உள்ளோர் வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

 


Page 93 of 3988